Senthil Balaji : வாட்ச் வாங்குன ரசீதை காட்டணும்.. அண்ணாமலைக்கு சவால்விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி..
பாஜக தலைவர் அண்ணாமலை தனது கை கடிகாரம் வாங்கியதற்கான பில்லை இன்று மாலைக்குள் வெளியிடுவாரா? என அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை தனது கை கடிகாரம் வாங்கியதற்கான பில்லை இன்று மாலைக்குள் வெளியிடுவாரா?
அண்ணாமலை சொத்து விவரங்கள் தேர்தலில் போட்டியிட்டபோது வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது அதனை வெளியிட்டு பேரணியாக செல்ல வேண்டிய அவசியம் ஏன்?
மின்கட்டணம் உயர்வு சொத்து வரி உயர்வு குறித்து மக்களிடம் கருத்து கேட்கும் அண்ணாமலை பெட்ரோல் டீசல் விலை உயர்வு சிலிண்டர் மானியம் ரத்து குறித்தும் மக்களிடம் கருத்து கேட்பாரா?
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சரமாரி கேள்வி..
தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த மாதம் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட 50000 இலவச மின் இணைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
இலவச மின்சாரம் கேட்டு பதிவு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு ஏற்ப ஆட்சிக்கு வந்ததும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின்சாரம் வழங்கி உள்ள நிலையில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நவம்பர் 11 ஆம் தேதி 20 ஆயிரம் விவசாயிகளுக்கும் மின் இணைப்பு முதலமைச்சர் தலைமையில் வழங்கப்பட்டது. தற்போது வரை 34,134 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 ஆயிரத்து 866 பேருக்கு பொங்கலுக்கு முன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மின் இணைப்பு உடன் ஆதார் எண் இணைக்கும் பணியில் 1 கோடியே 70 லட்சம் பேர் நேற்று வரை இணைதுள்ளனர்.
ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த டெண்டர் விடப்பட உள்ளது. அது 2 ஆண்டுகளுக்கு உள்ளாக முடிக்கப்பட்டு விட்டால் கூட கூடுதலாக வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட்டால் அவர்களுக்கு பின்னர் என்ன வேலை தருவது என்ற குழப்பம் வரும் எனவே ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக்கூடிய பணிகள் முடிவடைந்த பின்னர் மாதந்தோறும் மின் அளவு கணக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.
தற்போதைய மின் தேவை 2021-ஆம் ஆண்டில் 32000 மெகாவாட் உற்பத்தி தேவையாக இருந்தது 2030 ஆண்டிற்குள் 65 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார் இது தற்போதையுள்ள தேவையை விட இரண்டு மடங்கு அதிகம் என குறிப்பிட்டார். ஒன்றிய அரசு நிலக்கரி இறக்குமதிக்கு நிர்ணயம் செய்துள்ள விலையை விட குறைந்த அளவில் தமிழக அரசு நிலக்கரியை 133 டாலர் இறக்குமதிக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு சிறப்பாகவும் பல்வேறு துறைகளும் வெளிப்படையாக செயல்பட்டு வரும் நிலையில் தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளை ஆதாரம் இல்லாமல் பாஜக தலைவர் பேசிய வருவதாக குற்றம் சாட்டினார். மின்சார துறை மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்தால் மின்வாரியம் சரி செய்ய தயாராக இருக்கிறது.
பாஜக தலைவர் அண்ணாமலை முடிந்தால் இன்று மாலைக்குள் அந்த கடிகாரத்திற்கான ரசீதை வெளியிட வெளியிட வேண்டும். அந்த கடிகாரத்திற்கான பில் தற்போது தயாரிக்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதனை வெளியிடும்போது அடுத்தகட்ட குற்றச்சாட்டுகளை தான் தெரிவிப்பதாக கூறினார். பாஜகவினர் எழுப்பிய கேள்வி குறித்த பதிலுக்கு தமிழகத்தில் இல்லாத ஒரு கட்சியில் உள்ள நபர்கள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என தெரிவித்தார்





















