மேலும் அறிய

Bethel Nagar: பெத்தேல் நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிராக மனு..

சென்னை பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பை அகற்றும் முடிவை பரிசீலனை செய்யக்கோரி இருவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

பெத்தேல் நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிராக இருவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் !

சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள நீர் நில பகுதிகளி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து பெத்தேல் நகர் என்ற பகுதி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு பல வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவை அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக சேகர் என்ற நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி உத்தரவிட்டது. 

எனினும் இந்த வழக்கின் தீர்ப்பை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை எனக் கோரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்த ஒரு வாரமாக சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. அப்போது கடந்த வாரம், “பெத்தேல் நகர் பகுதியில் அமைந்திருக்கும் வீடுகள் மற்றும் வணிகள் வளாகங்கள் ஆகியவற்றை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். மேலும் அந்தப் பகுதியில் மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும். இதுகுறித்த விரிவான அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும்” என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது. 

மேலும் படிக்க: எந்த கட்சியை சேர்ந்த குழுக்களும் எங்கள் ஊரில் வந்து விசாரிக்க வேண்டாம் - மைக்கேல்பட்டி பொது மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, “பெத்தேல் நகரில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகள் வளாகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 1007க்கும் மேற்பட்ட வணிக வளாகங்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. அத்துடன் அப்பகுதியில் 65 சுற்றுச்சுவர்களும் இடிக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது. 


Bethel Nagar: பெத்தேல் நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிராக மனு..

இந்நிலையில் பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்பு இடங்களை இடிக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதேபோல் அப்பகுதியில் இருக்கும் குடியிருப்புகளை அகற்ற கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மனுக்களின் மீதான விசாரணையை வரும் 31ஆம் தேதி செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே பெத்தேல் நகர் பகுதியில் நீண்ட நாட்களாக வசித்து வருவதால், தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் அந்தப் பகுதியில் இருக்கும் குடியிருப்புகளை அகற்றும் முடிவையும் கைவிட வேண்டும் என்று கோரி கடந்த 3 நாட்களுக்கு மேலாக மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர். 

மேலும் படிக்க: சென்னை துறைமுகம்-மதுரவாயல் நெடுஞ்சாலைக்கு விரைவில் கையெழுத்தாகவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget