மேலும் அறிய

Vande Bharat Update: சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் ஒரு சூப்பர் அப்டேட்.. இனி தாராளமா டிக்கெட் கிடைக்கும்...

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் அடிக்கடி பயணம் செய்வோருக்கு ஒரு அருமையான அப்டேட் வந்துள்ளது. இனி அவர்கள் டிக்கெட்டிற்கு கவலைப்பட வேண்டியதில்லை.

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில், வரும் 8-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நவீன வசதிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள்

நாடு முழுவதிலும் 55-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் இந்த வந்தே பாரத் ரயில்கள், நவீன தொழில்நுட்பத்துடன் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை வழங்குகின்றன.

ரயில் இயக்கப்படும் வேகம், குளிர்சாதன வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால், பயணிகளிடையே வந்தே பாரத் ரயில்கள் வரவேற்பை பெற்றுள்ளன. இதனால், ஏராளமான பயணிகள் வந்தே பாரத் ரயிலில் பயணித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, சென்னையிலிருந்து கோவை, நெல்லை, மைசூர் ஆகிய இடங்களுக்கு தினசரி வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல், கோவையிலிருந்து பெங்களூருவுக்கும் வந்தே பாரத் ரயில் தினசரி இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு புதன் கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களிலும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில்தான் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில்கள் தற்போது 16 ஏசி சேர் கார் பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள், வரும் 8-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ள திருவனந்தபுரம் கோட்ட தலைமை அலுவலகம், ரயில் எண்கள் 20627/20628 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், தற்போது 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, வரும் 8-ம் தேதி முதல், இந்த இரண்டு ரயில்களும் கூடுதலாக 4 பெட்டிகளுடன், அதாவது மொத்தம் 20 ஏசி சேர் கார் பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரிலிருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில், மதியம் 1.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். அதே நாளில், மறுமார்க்கத்திலிருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில், இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்ல மற்ற ரயில்கள் சுமார் 12 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் நிலையில், இந்த வந்தே பாரத் ரயில், 8 மணி நேரம் 50 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது. இதனால், இந்த ரயிலை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதால், பயணிகள் இனி டிக்கெட் கிடைக்காமல் திண்டாட வேண்டிய அவசியமிருக்காது என நம்பலாம்.

 

தலைப்பு செய்திகள்

" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
மூவர்ணத்தில் ஜொலித்த வங்கக்கடல்! 20 நாட்டிகல் மைல் தூரம் கடலுக்குள் சென்று போலீசார் நடத்திய பிரம்மாண்ட பேரணி!
மூவர்ணத்தில் ஜொலித்த வங்கக்கடல்! 20 நாட்டிகல் மைல் தூரம் கடலுக்குள் சென்று போலீசார் நடத்திய பிரம்மாண்ட பேரணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Embed widget