மேலும் அறிய

Vande Bharat Update: சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் ஒரு சூப்பர் அப்டேட்.. இனி தாராளமா டிக்கெட் கிடைக்கும்...

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் அடிக்கடி பயணம் செய்வோருக்கு ஒரு அருமையான அப்டேட் வந்துள்ளது. இனி அவர்கள் டிக்கெட்டிற்கு கவலைப்பட வேண்டியதில்லை.

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில், வரும் 8-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நவீன வசதிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள்

நாடு முழுவதிலும் 55-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் இந்த வந்தே பாரத் ரயில்கள், நவீன தொழில்நுட்பத்துடன் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை வழங்குகின்றன.

ரயில் இயக்கப்படும் வேகம், குளிர்சாதன வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால், பயணிகளிடையே வந்தே பாரத் ரயில்கள் வரவேற்பை பெற்றுள்ளன. இதனால், ஏராளமான பயணிகள் வந்தே பாரத் ரயிலில் பயணித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, சென்னையிலிருந்து கோவை, நெல்லை, மைசூர் ஆகிய இடங்களுக்கு தினசரி வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல், கோவையிலிருந்து பெங்களூருவுக்கும் வந்தே பாரத் ரயில் தினசரி இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு புதன் கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களிலும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில்தான் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில்கள் தற்போது 16 ஏசி சேர் கார் பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள், வரும் 8-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ள திருவனந்தபுரம் கோட்ட தலைமை அலுவலகம், ரயில் எண்கள் 20627/20628 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், தற்போது 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, வரும் 8-ம் தேதி முதல், இந்த இரண்டு ரயில்களும் கூடுதலாக 4 பெட்டிகளுடன், அதாவது மொத்தம் 20 ஏசி சேர் கார் பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரிலிருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில், மதியம் 1.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். அதே நாளில், மறுமார்க்கத்திலிருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில், இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்ல மற்ற ரயில்கள் சுமார் 12 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் நிலையில், இந்த வந்தே பாரத் ரயில், 8 மணி நேரம் 50 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது. இதனால், இந்த ரயிலை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதால், பயணிகள் இனி டிக்கெட் கிடைக்காமல் திண்டாட வேண்டிய அவசியமிருக்காது என நம்பலாம்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Teacher Job: ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
Embed widget