மேலும் அறிய

தமிழக கொரோனா பாதிப்பு பதிவில் மோசடி; ‛மெட் ஆல்’ உரிமம் ரத்து

மேற்கு வங்கம் கொல்கத்தா மாநகரில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை, தமிழகத்தின் கள்ளக்குறிச்சியிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் போர்டலில் ஆய்வகம் தவறாக பதிவேற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 19, 20ம் தேதிகளில் கொரோனா தொற்று இல்லாத 4,000 பேருக்கு தொற்று இருந்ததாக ஐசிஎம்ஆர் போர்டலில் மெட்- ஆல் தனியார் ஆய்வகம் தவறாக பதிவிட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, தனியார் ஆய்வகத்துக்கு வழங்கப்பட்ட கொரோனா பரிசோதனை உரிமத்தை தமிழக சுகாதாரத்துறை ரத்து செய்துள்ளது.  

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை  இயக்குனரகம் வெளியிட்ட உத்தரவில், " ஐசிஎம்ஆர் போர்டலில், மெட் ஆல் தனியார் ஆய்வகம் பதிவேற்றம் செய்த  கொரோனா பரிசோதனை மாதிரிகளை ஆய்வு செய்ததில், கீழ்காணும் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.          

1. மேற்கு வங்கம் கொல்கத்தா மாநகரில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை, தமிழகத்தின் கள்ளக்குறிச்சியிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் போர்டலில் ஆய்வகம் தவறாக பதிவேற்றியுள்ளது. 

2. கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளில்,  தொற்று இல்லாத 4,000 பேருக்கு தொற்று இருந்ததாக ஐசிஎம்ஆர் போர்டலில் கடந்த 19, 20ம் தேதிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

3. ஐசிஎம்ஆர் போர்டலில் பதிவேற்றம் செய்யப்பட்ட  தினசரி கொரோனா பாதிப்பில் பல்வேறு தகவல்கள் விடுபட்டுள்ளன . 

கொரோனா சோதனைக்கூடங்கள் தொடர்பாக ஐசிஎம்ஆர், மாநில அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்  மீறப்பட்டுள்ளன. மேலும், மேற்கூறிய செயல்கள் மூலம்  தமிழக அரசின் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு சாதகமற்ற சூழலை தனியார் ஆய்வகம் எற்படுத்தியிள்ளது. 

குறிப்பாக, 

1. பிறமாநிலங்களில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்புகள் தமிழகத்தோடு  இணைக்கப் பட்டதால், மாநிலத்தின் கொரோனா பாதிப்புகளும், தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் விகிதமும் அதிகரித்து காட்டப்பட்டுள்ளன. இது, தமிழக அரசின் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவதாக அமைந்துள்ளது. 

2. குறைந்த அளவே உள்ள சுகாதார வளங்கள் மீது அதிக சுமை ஏற்றப்பட்டுள்ளது. இது, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் நோய்த் தொற்று நடவடிக்கைகளை சீர்குலைத்துள்ளது.         

3. இந்த செயல் பொது மக்களுக்கும், கொரோனா தொற்று இல்லாதவர்களுக்கும் தேவையற்ற குழப்பத்தையும், அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

4. கொரோனா இல்லாதவர்களுக்கு தொற்று இருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருப்பதன் மூலம், சம்பந்தப்பட்ட ஆய்வகத்துக்கும், சில தனியார் மருத்துவமனைகளுக்கும் முறைகேடான தொடர்பு இருக்கலாம் என அரசு சந்தேகிக்கிறது. நோய்த் தொற்று பாதிப்புகளை அதிகிரித்து, தனியார் மருத்துவமனைகள் வருமானம் ஈட்டும் முயற்சியாகவே இது கருதப்படுகிறது.

5. பதிவேற்றம் செய்யப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களில் பல்வேறு குளறுபடிகள் நிலவுகின்றன.  தமிழகத்தின் உண்மையான தொற்று பாதிப்பு அளவை அடையாளம் காணுவதை மேலும் தாமதப்படுத்துவதாகஅமைகிறது. 


தமிழக கொரோனா பாதிப்பு பதிவில் மோசடி;  ‛மெட் ஆல்’ உரிமம் ரத்து

 

 எனவே, 1993 வருட தமிழ்நாடு பொது சுதாதார சட்டத்தின் கீழ், மெட் ஆல் தனியார் ஆய்வகத்துக்கு வழங்கப்பட்ட  கொரோனா வைரஸ் பரிசோதனை உரிமம்  ரத்தாகிறது. இந்த அறிவிப்பு பெறப்பட்ட மூன்று நாட்களுக்குள், ஆய்வகத்தின் நிர்வாக இயக்குனர் முறையான விளக்கத்தை தொடர்புடைய அரசு முகமையிடம் சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவ  ஆய்வுக்குழு ஆய்வகத்தை மேற்பார்வை செய்த பிறகு, கொரோனா பரிசோதனையை மீண்டும் அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்" என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.        

 

   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget