மேலும் அறிய

தமிழக கொரோனா பாதிப்பு பதிவில் மோசடி; ‛மெட் ஆல்’ உரிமம் ரத்து

மேற்கு வங்கம் கொல்கத்தா மாநகரில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை, தமிழகத்தின் கள்ளக்குறிச்சியிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் போர்டலில் ஆய்வகம் தவறாக பதிவேற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 19, 20ம் தேதிகளில் கொரோனா தொற்று இல்லாத 4,000 பேருக்கு தொற்று இருந்ததாக ஐசிஎம்ஆர் போர்டலில் மெட்- ஆல் தனியார் ஆய்வகம் தவறாக பதிவிட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, தனியார் ஆய்வகத்துக்கு வழங்கப்பட்ட கொரோனா பரிசோதனை உரிமத்தை தமிழக சுகாதாரத்துறை ரத்து செய்துள்ளது.  

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை  இயக்குனரகம் வெளியிட்ட உத்தரவில், " ஐசிஎம்ஆர் போர்டலில், மெட் ஆல் தனியார் ஆய்வகம் பதிவேற்றம் செய்த  கொரோனா பரிசோதனை மாதிரிகளை ஆய்வு செய்ததில், கீழ்காணும் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.          

1. மேற்கு வங்கம் கொல்கத்தா மாநகரில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை, தமிழகத்தின் கள்ளக்குறிச்சியிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் போர்டலில் ஆய்வகம் தவறாக பதிவேற்றியுள்ளது. 

2. கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளில்,  தொற்று இல்லாத 4,000 பேருக்கு தொற்று இருந்ததாக ஐசிஎம்ஆர் போர்டலில் கடந்த 19, 20ம் தேதிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

3. ஐசிஎம்ஆர் போர்டலில் பதிவேற்றம் செய்யப்பட்ட  தினசரி கொரோனா பாதிப்பில் பல்வேறு தகவல்கள் விடுபட்டுள்ளன . 

கொரோனா சோதனைக்கூடங்கள் தொடர்பாக ஐசிஎம்ஆர், மாநில அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்  மீறப்பட்டுள்ளன. மேலும், மேற்கூறிய செயல்கள் மூலம்  தமிழக அரசின் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு சாதகமற்ற சூழலை தனியார் ஆய்வகம் எற்படுத்தியிள்ளது. 

குறிப்பாக, 

1. பிறமாநிலங்களில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்புகள் தமிழகத்தோடு  இணைக்கப் பட்டதால், மாநிலத்தின் கொரோனா பாதிப்புகளும், தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் விகிதமும் அதிகரித்து காட்டப்பட்டுள்ளன. இது, தமிழக அரசின் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவதாக அமைந்துள்ளது. 

2. குறைந்த அளவே உள்ள சுகாதார வளங்கள் மீது அதிக சுமை ஏற்றப்பட்டுள்ளது. இது, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் நோய்த் தொற்று நடவடிக்கைகளை சீர்குலைத்துள்ளது.         

3. இந்த செயல் பொது மக்களுக்கும், கொரோனா தொற்று இல்லாதவர்களுக்கும் தேவையற்ற குழப்பத்தையும், அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

4. கொரோனா இல்லாதவர்களுக்கு தொற்று இருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருப்பதன் மூலம், சம்பந்தப்பட்ட ஆய்வகத்துக்கும், சில தனியார் மருத்துவமனைகளுக்கும் முறைகேடான தொடர்பு இருக்கலாம் என அரசு சந்தேகிக்கிறது. நோய்த் தொற்று பாதிப்புகளை அதிகிரித்து, தனியார் மருத்துவமனைகள் வருமானம் ஈட்டும் முயற்சியாகவே இது கருதப்படுகிறது.

5. பதிவேற்றம் செய்யப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களில் பல்வேறு குளறுபடிகள் நிலவுகின்றன.  தமிழகத்தின் உண்மையான தொற்று பாதிப்பு அளவை அடையாளம் காணுவதை மேலும் தாமதப்படுத்துவதாகஅமைகிறது. 


தமிழக கொரோனா பாதிப்பு பதிவில் மோசடி;  ‛மெட் ஆல்’ உரிமம் ரத்து

 

 எனவே, 1993 வருட தமிழ்நாடு பொது சுதாதார சட்டத்தின் கீழ், மெட் ஆல் தனியார் ஆய்வகத்துக்கு வழங்கப்பட்ட  கொரோனா வைரஸ் பரிசோதனை உரிமம்  ரத்தாகிறது. இந்த அறிவிப்பு பெறப்பட்ட மூன்று நாட்களுக்குள், ஆய்வகத்தின் நிர்வாக இயக்குனர் முறையான விளக்கத்தை தொடர்புடைய அரசு முகமையிடம் சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவ  ஆய்வுக்குழு ஆய்வகத்தை மேற்பார்வை செய்த பிறகு, கொரோனா பரிசோதனையை மீண்டும் அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்" என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.        

 

   

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
கண்ணீர் வடிக்கும் ஆசிரியர்கள்: 15 ஆண்டு போராட்டம், திமுக வாக்குறுதி என்னாச்சு? பணி நிரந்தரம் எப்போது?
கண்ணீர் வடிக்கும் ஆசிரியர்கள்: 15 ஆண்டு போராட்டம், திமுக வாக்குறுதி என்னாச்சு? பணி நிரந்தரம் எப்போது?
Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
Embed widget