மேலும் அறிய

Savukku Shankar Vs G-Square : ”கருணையுடன் மன்னிக்கவும்!” சரண்டரான சவுக்கு G-ஸ்கொயரிடம் பணிந்த பின்னணி

இனி ஜி-ஸ்கொயர் பற்றி பேசுவதாகவோ, எழுதுவதாகவோ இருந்தால், அந்த நிறுவனத்தாரிடம் பேசி விளக்கம் பெறாமல் எதுவும் செய்யமாட்டேன் என சவுக்கு சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய அவதூறு கருத்துகளுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும்.. நீதிமன்றம் தாழ்மையுடன் தான் கேட்கும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, தன் மீது கருணை காட்டி மன்னிக்கும்படியும் கெஞ்சியிருக்கிறார் சவுக்கு சங்கர்.
இது குறித்து அவர் கோர்ட்டில் பணிவுடன் பதிவு செய்த மன்னிப்பு கோரும் மனு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Savukku Shankar Vs G-Square : ”கருணையுடன் மன்னிக்கவும்!” சரண்டரான சவுக்கு G-ஸ்கொயரிடம் பணிந்த பின்னணி

கடந்த ஆண்டு ஜி ஸ்கொயர் நிறுவனம், சவுக்கு சங்கருக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் தங்களை பற்றி சவுக்கு பேசிய பொய் கருத்துகளை நம்பி, வாடிக்கையாளர்கள் 28 பேர் – தங்கள் நிறுவனத்தில் வீடு வாங்க செய்திருந்த முன்பதிவை கேன்சல் செய்துவிட்டதாகவும், இதனால் தங்கள் நிறுவனத்துக்கு 15 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த வழக்கில் இனி சவுக்கு சங்கர் ஜி ஸ்கொயர் நிறுவனம் பற்றி பேட்டிகளில் பேச தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

இதனை மீறி 20 நாட்களுக்கு முன்பு ஆதன் தமிழ் யூடியூப் சேனலில் சவுக்கு சங்கர் மீண்டும் ஜி ஸ்கொயர் பற்றி அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. ஏற்கனவே அவதூறு வழக்கில் சிறை சென்று வந்துள்ள சவுக்கு, வார்த்தைகளை திரும்பப்பெறமாட்டேன் – மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றெல்லாம் வீரமாக பேசிவந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் சாஷ்டாங்கமாக பணிந்து திடீர் மன்னிப்பை கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Savukku Shankar Vs G-Square : ”கருணையுடன் மன்னிக்கவும்!” சரண்டரான சவுக்கு G-ஸ்கொயரிடம் பணிந்த பின்னணி

தனது மன்னிப்பில் அவர், 

"ஆதன் தமிழ்" என்ற Youtube சேனலுக்கு அளித்த பேட்டியிலும், 31.10.2023 தேதியிட்ட ட்வீட்டிலும் ஜி ஸ்கொயர் குறித்த தரவுகளை சரிபார்க்காமல் கருத்து வெளியிட்டதற்காக இந்த மாண்புமிகு நீதிமன்றத்தில் நான் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இனி ஜி-ஸ்கொயர் பற்றி பேசுவதாகவோ, எழுதுவதாகவோ இருந்தால், அந்த நிறுவனத்தாரிடம் பேசி விளக்கம் பெறாமல் எதுவும் செய்யமாட்டேன்.

நான் அவர்களை பற்றி எழுதியவற்றை டெலிட் செய்துவிட்டேன். எனவே இந்த நீதிமன்றம் தாழ்மையுடன் நான் கேட்கும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, கருணையுடன் என் தவறை மன்னிக்க வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார். இதை பார்த்த பலரும் என்ன சவுக்கு இப்படி மட்டையா மடிஞ்சிட்டீங்க என்று சோஷியல் மீடியாக்களில் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
Delhi New CM: டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Suchitra vs Vairamuthu |’’நீ என்ன PSYCHIATRIST-ஆ?நோபல் பரிசு கொடுக்கலாமா?’’கடுப்பான சுசித்ராTirupati Laddu History | Mysuru Palace Elephant Angry | Barriers-யை உடைத்து எறிந்த யானை மைசூரில் அலறியோடிய மக்கள் பதறிய பாகன்Rahul on laddu | லட்டில் பன்றி கொழுப்பா? கொதித்தெழுந்த  ராகுல்! ஜெகன், நாயுடுவுக்கு எச்சரிக்கை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
Delhi New CM: டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
மதுரை: பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!
மதுரை: பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!
Tvk Vijay maanadu: தவெக முதல் மாநாடு... மீண்டும் அனுமதி கேட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்த புஸ்ஸி ஆனந்த்
Tvk Vijay maanadu: தவெக முதல் மாநாடு... மீண்டும் அனுமதி கேட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்த புஸ்ஸி ஆனந்த்
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
Embed widget