மேலும் அறிய

மீன் பிரியர்களுக்கு இனி சோகம்தான்! விண்ணை முட்டப்போகும் விலை!! இதெல்லாம்தான் காரணம்!!

இந்தக் காலத்தில் 13 கடலோர மாவட்டத்தில் உள்ள 6000 மோட்டர் படகுகள், கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் வரை தேதி வரை, 60 நாள்கள் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம்.  அதன்படி, இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடை காலம் அமலுக்கு வருகிறது.

கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் (Tamil Nadu Marine Fishing Regulation Act)1983-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கும் பொருட்டு,  மீன்பிடி தடைக்காலம் 2001 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அமல்படுத்தப்படுகிறது.

இந்த காலத்தில் பாரம்பரிய மீன்பிடி படகுகள் தவிர விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் படகு உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மீன்பிடி தடை காலம் அமலுக்கு வருவதால் மீன்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. நாளை முதல் மீன் வரத்து குறைவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவாதால், மீன்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இந்தக் காலத்தில் 13 கடலோர மாவட்டத்தில் உள்ள 6000 மோட்டர் படகுகள், கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள். திருவள்ளூர் முதல் கன்னியாக்குமரி மாவட்டம் வரை உள்ள கடலோர பகுதிகளில் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு ஜீன் மாதம் 14 ஆம் தேதி வரை தடை அமலில் இருக்கும். மேலும், 1.75 லட்சம் மீனவர்களுக்கு ரூ.5000 தொகை மீன்பிடி தடைகாலத்தில் உதவி தொகையாக வழங்கப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னை காசிமேடு பகுதியில், மீன் விலை கிலோ ரூபாயில் வஞ்சிரம் 1000, பாறை 300, இறால் 400. சங்கரா 450, வவ்வால் 900, நெத்திலி 400,  என்ற முறையில் விற்பனை செய்யப்பட்டது.

தற்போது, மீன்பிடி தடை காலம் முடியும் வரை மீன்களின் விலை குறைய வாய்ப்பில்லை. மேலும், டீசல் விலையும் உயர்வும் மீன்களின் விலையில் எதிரோலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Ambedkar: அம்பேத்கரும் பெண் சமத்துவமும்.. சாதிய பாகுபாடுகளை அடிக்கோடிட்டு காட்டிய மாபெரும் ஆளுமை !

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget