மேலும் அறிய

Drones Ban: நாளை முதல் சென்னையில் டிரோன் பறக்கத் தடை; என்ன காரணம்?

சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, மகாபலிபுரம் பகுதிகளில் நாளை (ஜூலை 23) முதல் மூன்று நாட்களுக்கு டிரோன் பறக்க தடை விதித்து சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 

சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, மகாபலிபுரம் பகுதிகளில் நாளை (ஜூலை 23) முதல் மூன்று நாட்களுக்கு டிரோன் பறக்க தடை விதித்து சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 

அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட 20 நாடுகள் இணைந்து ஜி20 என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இவை ஆண்டுதோறும் சர்வதேச பொருளாதாரம், நிதி நிலைமை, பருவநிலை மாறுபாடு, நாடுகளின் வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு தொடர்பாக ஆலோசனைகளை நடத்தும். மேலும், நாடுகளின் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதல்களும் இந்த மாநாட்டில் தெரிவிக்கப்படும். 

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் ஜி20 மாநாடு நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஜி 20 மாநாடு இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் மாதம் 9,10 தேதியில் தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக, ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே, பேரிடர் அபாயத்தை குறைக்க புதிய பணிக்குழுவை இந்தியாவின் தலைமையில் ஜி 20 நாடுகள் அமைத்துள்ளன. அதன் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டங்கள் மும்பை மற்றும் காந்தி நகரில் நடந்த நிலையில், மூன்றாவது கூட்டம் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் முதல் வரும் 26ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. 

இந்த கூட்டத்தில் வெளிநாட்டை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜி20 மாநாட்டை ஒட்டி, நாளை முதல் 26ம் தேதி வரை சென்னையிலும், மாநாடு நடைபெறும் பகுதிகளிலும் டிரோன்கள் பறக்க தடை விதித்து சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக ஜி20 மாநாட்டை ஒட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நடைபெற்றது. ஜி-20 மாநாட்டு கூட்டங்களை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என தொடர்புடைய துறைகளுக்கு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
ABP Premium

வீடியோ

’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Embed widget