மேலும் அறிய

தருமபுரி: மண்டபம் புதுப்பிக்க சான்று கேட்டவரிடம் லஞ்சம் கேட்ட தீயணைப்பு துறையினர் - தாக்கப்பட்ட இளைஞர் அதிர்ச்சி பேட்டி

தருமபுரி: திருமண மண்டபம் புதுப்பிக்க, தீயணைப்பு நிலையத்தில் சான்று பெற வந்த இளைஞரிடம் பணம் கேட்டு தாக்கியதாக புகார்

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியைச் சார்ந்த சந்தோஷ் என்பவர் 20 ஆண்டு காலமாக உள்ள தங்களது திருமண மண்டபத்திற்கு, தீயணைப்புத் துறையில் ஆண்டுதோறும் பெறப்படும் புதுப்பிப்பு சான்று பெறுவதற்காக தருமபுரி தீயணைப்பு நிலையத்தில் மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து ஆய்வு செய்து உரிய சான்றிதழ் வழங்குவதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று தீயணைப்பு நிலையத்திற்கு புதுப்பிப்பு சான்றிதழ் பெறுவதற்காக சந்தோஷ் வந்துள்ளார். அப்பொழுது தருமபுரி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜாவிடம் தனது திருமண மண்டபத்திற்கான புதுப்பிப்பு சான்றிதழை வழங்குமாறு கேட்டுள்ளார். அப்பொழுது தீயணைப்பு துறையினர் சான்றிதழ் தயாராக உள்ளது, பணம் பத்தாயிரம் கொடுத்து விட்டு வாங்கிச் செல்லுமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சந்தோஷ் அந்த அளவிற்கு பணம் கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா திருமண மண்டபத்திற்கான புதுப்பிப்பு சான்றிதழை சந்தோசிடம் வழங்கியுள்ளார். 
 

தருமபுரி: மண்டபம் புதுப்பிக்க சான்று கேட்டவரிடம் லஞ்சம் கேட்ட தீயணைப்பு துறையினர் - தாக்கப்பட்ட இளைஞர் அதிர்ச்சி பேட்டி
 
 
ஆனால் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் மெக்கானிக் ஒருவர், பணத்தைக் கொடுத்துவிட்டு சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். ஆனால் சந்தோஷ் திருமண மண்டபத்திற்கு புதுப்பிப்பு சான்றிதழ் வாங்கி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து துரத்திச் சென்று வந்த தீயணைப்பு நிலைய ஊழியர்கள் சான்றிதழை, பணம் கொடுத்து வாங்கி செல்லுமாறு கூறி பறிக்க முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சந்தோஷ் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. 
 

தருமபுரி: மண்டபம் புதுப்பிக்க சான்று கேட்டவரிடம் லஞ்சம் கேட்ட தீயணைப்பு துறையினர் - தாக்கப்பட்ட இளைஞர் அதிர்ச்சி பேட்டி
 
 
இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தன்னை தாக்கியதாக சந்தோஷ், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் திருமண மண்டபத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்கும் சான்றிதழ் பெறுவதற்கு தீயணைப்பு நிலையத்தை அணுகியவுடன் பத்தாயிரம் பணம் லஞ்சமாக கேட்டனர். தான் கொடுக்க மறுத்ததால் தன்னை தீயணைப்பு நிலைய ஊழியர் ஒருவர் கம்பியால் தாக்கியதாகவும், தனக்கு கையில் காயம் ஏற்பட்டு 7 தையல் போட்டுள்ளதாக சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget