மேலும் அறிய

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு 48,000 கன அடியாக அதிகரிப்பு

’’கர்நாடக அணைகள் நிரம்பி இருப்பதால், இரண்டு அணைகளில் இருந்தும் திறக்கப்படும் உபரிநீர் அதிகரிக்கப்பட்டால், மேலும் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு'’

தமிழக, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. 
 
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு 48,000 கன அடியாக அதிகரிப்பு
 
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கர்நாடக மற்றும் தமிழக காவிரி கரையோரங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 17,000 கன அடியாக இருந்த நீர்வரத்து,  25,000, 30,000, 35,000 கன அடியாக என படிப்படியக உயர்ந்தது. மேலும் நேற்று இரவு தமிழக காவிரி கரையோரங்களிலும், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள மலை மற்றும் வன பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. இதனால் இன்று மூன்றாவது நாளாக  காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 48,000 கன அடியாக உயர்ந்தது. இதனால் ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை, ஐந்தருவி, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளே தெரியாதவாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு 48,000 கன அடியாக அதிகரிப்பு
 
மேலும் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், தண்ணீர் ஒகேனக்கல்லில் தேக்கமடைந்து வருவதால், பாறைகள் தெரியாமல் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. தொடர்ந்து மீண்டும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல் அருவி மற்றும் ஆற்று பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் விதக்கப்பட்ட தடையை தொடர்ந்து நீட்டித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், வருவாய் பேரிடர், காவல், தீயணைப்பு மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் ஆற்றங்கரை பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள காவிரி நீர் அளவிடும் பகுதியில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் கர்நாடக அணைகள் நிரம்பி இருப்பதால், இரண்டு அணைகளில் இருந்தும் திறக்கப்படும் உபரிநீர் அதிகரிக்கப்பட்டால், மேலும் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Embed widget