மேலும் அறிய

மின் கட்டண உயர்வை கண்டித்து சேலத்தில் 200க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் வேலை நிறுத்தம்; ரூ. 5 கோடி மதிப்பிலான அரிசி ஏற்றுமதி பாதிப்பு

ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தால் சேலம் மாவட்டத்தில் மட்டும் ரூபாய் 5 கோடி மதிப்பிலான அரிசி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக மின்சாரத் துறை தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதேபோன்று மின்சார கட்டணத்தையும் சேர்த்து, சோலார் மேற்கூரை கட்டணத்தையும் உயர்த்தி உள்ளது. இதனை கண்டித்து தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தது. அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் குறிப்பாக அரிசி ஆலைகள் மற்றும் அச்சகங்கள் இன்று ஒரு நாள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தை பொருத்தவரை ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, அயோத்தியாபட்டினம் பகுதிகளில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட சிறு அரிசி ஆலைகள் 13 பெரிய அரிசி ஆலைகள் என அனைத்தும் இன்று ஒரு நாள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் அரிசி ஆலைகளுக்கு மட்டும் நாளொன்றுக்கு 5 கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மின் கட்டண உயர்வை கண்டித்து சேலத்தில் 200க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் வேலை நிறுத்தம்; ரூ. 5 கோடி மதிப்பிலான அரிசி ஏற்றுமதி பாதிப்பு

இதுகுறித்து சேலம் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க உதவி தலைவர் உதயகுமார் கூறுகையில், அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வு தங்களது தொழிலை பெருமளவு பாதிக்கும். மின்கட்டண உயர்வை பரிசீலனை செய்யக்கோரி மின்சார துறை அமைச்சரிடமும், முதலமைச்சரிடமும் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு பலனும் இல்லை என்று கூறிய அவர், இந்த மின்கட்டணம் உயர்வால் தாங்கள் உற்பத்தி செய்யும் அரிசிக்கு விலை உயர்வு ஏற்படும் என்றார். இதனால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். எனவே அரசு உடனடியாக புதிய மின் கட்டண உயர்வினை ரத்து செய்ய வேண்டும் என்றார். இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தால் சேலம் மாவட்டத்தில் மட்டும் ரூபாய் 5 கோடி மதிப்பிலான அரிசி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி லாரி ஓட்டுநர்கள், சிறு குறு தொழில் செய்பவர்கள் போன்று பலதரப்பு மக்கள் இதனால் பாதிப்படைந்துள்ளதாக கூறினார்.

மின் கட்டண உயர்வை கண்டித்து சேலத்தில் 200க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் வேலை நிறுத்தம்; ரூ. 5 கோடி மதிப்பிலான அரிசி ஏற்றுமதி பாதிப்பு

அதேபோல் சேலம் மாவட்டத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் இன்று தினம் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த சேலம் மாவட்ட ஆப்செட் பிரிண்டர்ஸ் அசோசியேசன் நிறுவனர் முத்து கோபாலகிருஷ்ணன், பரபரப்பு நேர கட்டணம் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதற்கான தனி அளவீட்டு கருவி எதுவும் பொருத்தப்படவில்லை என்றும் அந்த நேரத்தில் தொழிற்சாலைகள் இயங்கினாலும் இயங்காவிட்டாலும் குத்து மதிப்பாக 25 சதவீதம் கூப்பிடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலையில் உள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி திடீர் தீவிர ஆலோசனை... சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?
சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி திடீர் தீவிர ஆலோசனை... சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget