மேலும் அறிய

தருமபுரியில் சாலை வசதி கேட்டு சாலையில் நாற்று நட்டு போராட்டம் - பேருந்து சிறைப்பிடிப்பு...!

தங்களுக்கு  சாலையை சீர் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி, காலையில் கிராமத்தின் வழகயாக வந்த அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம்

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தின்னஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட அங்கனாம்புதூர் பகுதியில் 120 குடும்பங்களில் சுமார் 700 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஊருக்குள் செல்லும் பகுதிக்கு சாலை அமைக்காததால் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். தொடர்ந்து மழை காலங்களில் சாலை தண்ணீர் தேங்கி, மிகவும் பழுதாகி குண்டும் குழியுமாக, சேரும சகிதமாக இருந்து வருகிறது. தொடர்ந்து மலை காலங்களில் பொதுமக்கள் செல்வது மிகுந்த சிரமமாக உள்ளது. இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் இடறி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளனர். 
 
தருமபுரியில் சாலை வசதி கேட்டு சாலையில் நாற்று நட்டு போராட்டம் - பேருந்து சிறைப்பிடிப்பு...!
 
இதனை அடுத்து பல முறை ஊராட்சியில் தார் சாலை அமைக்கவும் அல்லது கான்கிரீட் சாலை அமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாததால் பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை யாரும் அப்பகுதியை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் அங்கணம்பட்டி சாலை சேரும், சகதியுமாக உள்ளது. இதனால் மக்கள் சாலையில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த சாலையில் செல்ல முடியாததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று திடீரென வந்து, .தங்களுக்கு  சாலையை சீர் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி, காலையில் கிராமத்தின் வழகயாக வந்த அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
தருமபுரியில் சாலை வசதி கேட்டு சாலையில் நாற்று நட்டு போராட்டம் - பேருந்து சிறைப்பிடிப்பு...!
 
அதனை தொடர்ந்து கிராமத்தில் உள்ள பெண்கள் சேறும் சகதியுமாக உள்ள, சாலையில் பயிர்களை கொண்டு வந்து நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து வந்த அதியமான் கோட்டை காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து சென்று, விரைவில் பழுதாகி உள்ள அந்த சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை போரட்டத்தில் ஈடுபட்ட மக்கள் களைந்து சென்று, சிறை பிடிக்கபட்ட அரசுப் பேருந்தை பொது மக்கள் விடுவித்தனர். தொடர்ந்து சாலை வசதி கேட்டு கிராம மக்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தியதால், அரசு பேருந்து ஒரு மணி நேரம் கால தாமதமாக சென்றது. இதனால் அருகில் உள்ள  கிராமத்திலிருந்து பணி மற்று பள்ளி, கல்லூரிகளுக்கு தருமபுரி செல்லும் மாணவ, மாணவிகள் குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை. தொடர்ந்து சாலை வசதி கேட்டு பொதுமக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து, சாலையில் நாற்று நட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
Salem Power Cut 04.07.2026 : சேலம் மாவட்டத்தின் பல இடங்களில் இன்று மின் தடை... முழு விவரம் இதோ!
Salem Power Cut 04.07.2026 : சேலம் மாவட்டத்தின் பல இடங்களில் இன்று மின் தடை... முழு விவரம் இதோ!
'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு? ஹிட்டடிக்குமா? - கிரிக்கெட் வீரர் நடராஜன் சொன்னது என்ன? - சிஎம் விஜய் எப்போது பார்ப்பார்?
'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு? ஹிட்டடிக்குமா? - கிரிக்கெட் வீரர் நடராஜன் சொன்னது என்ன? - சிஎம் விஜய் எப்போது பார்ப்பார்?
Salem Power Cut: சேலம் மக்களே கவனிங்க! நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை! உங்கள் பகுதி உள்ளதா?
Salem Power Cut: சேலம் மக்களே கவனிங்க! நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை! உங்கள் பகுதி உள்ளதா?

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
Tata EV Discounts: ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
Embed widget