மேலும் அறிய

தருமபுரி: அரூர் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு - குடியிருப்புக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி

பெரிய ஏரி ராஜகால்வாயை தூர்வாரி நிரந்திர தீர்வுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சி 18 வார்டுகளில் பெரியார் நகர், தில்லைநகர், கோவிந்தசாமி நகர பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு காடுகளாகவுளம், மழைநீர் வழிந்தோடும் கால்வாய் பகுதியாக இருந்தன. இந்தப் பகுதில் வெளியேறும்  மழைநீரும், அரூர் பெரிய ஏரியின் உபரி நீரும் நகரின்  ராஜா கால்வாயில் கலந்து பாய்ந்தோடி வாணி ஆற்றில் கலக்கும். பொது நகரின் அனைத்து சாக்கடை கழிவுநீரும் அடித்துச் செல்லப்பட்டு கொசு உற்பத்தியை குறைக்கும்  வகையில் அன்றைய காலகட்டத்தில் அமைக்கப்பட்டது. 
 

தருமபுரி: அரூர் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு - குடியிருப்புக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி
 
அரூர்-சேலம் பைபாஸ் சாலையில் ராஜ கால்வாய் அகலத்தைப் குறைத்து  தனி நபர்கள் நிரந்தர ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தருமபுரி மாவட்டத்தில் பெய்து வருகிறது. நேற்று ஒருநாள் முழுவதும் இடைவிடாது கனமழை பெய்ததில், 100 மில்லி மீட்டரை கடந்தது. இதனால்  பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர், பெரியார் நகர், தில்லை நகர், பாரதியார் நகர், திருவிக நகர், சேலம் பிரதான சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மழை நீரில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ராஜகால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மழை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பெரிய ஏரி ராஜகால்வாயை தூர்வாரி நிரந்திர தீர்வுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

 
தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை முதல் ரயில் நிலையம் வரை செல்லும் பழுதான சாலையை செப்பனிடும் பணிகளை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.செந்தில்குமார் ஆய்வு
 
தருமபுரி நகரையொட்டிய பகுதிகளான ஆசிரியர் காலனி, வெண்ணாம்பட்டி, ஆயதபடை குடியிருப்பு, குள்ளனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தங்களது பகுதிக்கு செல்ல வேண்டும். அதே போல் ரயில்வே தானிய கிடங்கில் இருந்து சரக்குகளை சரக்கு வாகனத்தில் எடுத்து செல்ல வேண்டும் என்றால், தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை ஒட்டி உள்ள ரயில்வேக்கு சொந்தமான சாலையில் தான் செல்ல வேண்டும்.
 

தருமபுரி: அரூர் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு - குடியிருப்புக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி
 
ஆனால் இந்த சாலை மக்கள் பயன்படுத்த இயலாத நிலையில் குண்டும் குழியுமாக உள்ளதாலும், மழை காலத்தில் தண்ணீர் வெளியே செல்ல இயலாத நிலையில் குளம் போல் தேங்கி கிடப்பதால், அந்த சாலையை பயன்படுத்தும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பொது மக்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். இதனை அடுத்து அப்பகுதி பொது மக்கள் திமுக நாடாளுமன்ற உறுப்பினரான மருத்துவர். செந்தில்குமாரிடம் கோரிக்கை வைத்ததையடுத்து தருமபுரி நகராட்சி, இலக்கியம்பட்டி ஊராட்சி மற்றும் தென்மேற்கு ரயில்வே துறை சார்பில் சுமார் 80 லட்சம் ரூபாய் செலவில் பழுதான சாலையை செப்பனிட்டு புதிய தார் சாலை அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டு செப்பனிடும் பணிகள் துவங்கியது.
 
அதனையடுத்து இன்று அந்த சாலை பணியை தென்மேற்கு ரயில்வே துறை அதிகாரிகள் குழுவுடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அந்த சாலையில் போதிய கழிவு நீர் கால்வாய் இல்லாதததை பொது மக்கள் சுட்டிகாட்டியதையடுத்து ரயில்வே துறையினர் கால்வாய் அமைக்கும் பணியினை செய்து தருவதாக கூறினர். அதனையடுத்து பாரதிபுரம் வெண்ணாம்பட்டி பகுதிகளில் அமைய உள்ள ரயில்வே மேம்பால பகுதியை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது தென்மேற்கு ரயில்வே தலைமை பொறியாளர் ஆர்.கே.சிங், முதண்மை துணை பொறியாளர் ரமேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
பத்மஸ்ரீ விருதுடன் சேலம் திரும்பிய சிற்பி ராஜா காளியப்பா கவுண்டர்: சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு
பத்மஸ்ரீ விருதுடன் சேலம் திரும்பிய சிற்பி ராஜா காளியப்பா கவுண்டர்: சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு
தமிழகத்திலேயே முதல் முறை; உயிர்பிழைத்த தாய், குழந்தை.. திக் திக் நிமிடங்களை வென்ற சேலம் மருத்துவர்கள் - நெகிழ்ச்சிப் பின்னணி
தமிழகத்திலேயே முதல் முறை; உயிர்பிழைத்த தாய், குழந்தை.. திக் திக் நிமிடங்களை வென்ற சேலம் மருத்துவர்கள் - நெகிழ்ச்சிப் பின்னணி
குற்றவாளிகளைப் பிடிக்க 'ரத்தப் பலி' - போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விசித்திர பூஜை
குற்றவாளிகளைப் பிடிக்க 'ரத்தப் பலி' - போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விசித்திர பூஜை

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்.. ரெடியா இருங்க.. திமுக-வினரை அலர்ட் செய்த மு.க.ஸ்டாலின்!
MK Stalin: எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்.. ரெடியா இருங்க.. திமுக-வினரை அலர்ட் செய்த மு.க.ஸ்டாலின்!
வெங்கட்நாராயணாவி்ற்கு பதவி; அப்செட்டில் தவெக நிர்வாகிகள் - சமாதானம் செய்வாரா விஜய்?
வெங்கட்நாராயணாவி்ற்கு பதவி; அப்செட்டில் தவெக நிர்வாகிகள் - சமாதானம் செய்வாரா விஜய்?
Ben Stokes Retirement: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் பென் ஸ்டோக்ஸ்! முடிவுக்கு வருகிறது தலைசிறந்த ஆல் ரவுண்டர் சகாப்தம்!
Ben Stokes Retirement: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் பென் ஸ்டோக்ஸ்! முடிவுக்கு வருகிறது தலைசிறந்த ஆல் ரவுண்டர் சகாப்தம்!
அரசியலுக்கு அச்சாரம் போடும் சூர்யா? நற்பணி மன்ற நிர்வாகி பேச்சால் பரபரப்பு
அரசியலுக்கு அச்சாரம் போடும் சூர்யா? நற்பணி மன்ற நிர்வாகி பேச்சால் பரபரப்பு
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
ரீல்ஸ் தொந்தரவில்லை.. திமுக, அதிமுக குதிரை பேரம் - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!
ரீல்ஸ் தொந்தரவில்லை.. திமுக, அதிமுக குதிரை பேரம் - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!
சிங்கிள் சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்! TVS X இ ஸ்கூட்டரை உடனே வாங்குங்க - விலை எவ்ளோ?
சிங்கிள் சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்! TVS X இ ஸ்கூட்டரை உடனே வாங்குங்க - விலை எவ்ளோ?
டொயோட்டா ஹைப்ரிட் கார்கள்: இந்திய சந்தையில் இன்னோவா, ஹைரைடர், பார்ச்சூனர் ஆதிக்கம்!
டொயோட்டா ஹைப்ரிட் கார்கள்: இந்திய சந்தையில் இன்னோவா, ஹைரைடர், பார்ச்சூனர் ஆதிக்கம்!
Embed widget