மேலும் அறிய

தருமபுரி: அரூர் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு - குடியிருப்புக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி

பெரிய ஏரி ராஜகால்வாயை தூர்வாரி நிரந்திர தீர்வுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சி 18 வார்டுகளில் பெரியார் நகர், தில்லைநகர், கோவிந்தசாமி நகர பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு காடுகளாகவுளம், மழைநீர் வழிந்தோடும் கால்வாய் பகுதியாக இருந்தன. இந்தப் பகுதில் வெளியேறும்  மழைநீரும், அரூர் பெரிய ஏரியின் உபரி நீரும் நகரின்  ராஜா கால்வாயில் கலந்து பாய்ந்தோடி வாணி ஆற்றில் கலக்கும். பொது நகரின் அனைத்து சாக்கடை கழிவுநீரும் அடித்துச் செல்லப்பட்டு கொசு உற்பத்தியை குறைக்கும்  வகையில் அன்றைய காலகட்டத்தில் அமைக்கப்பட்டது. 
 

தருமபுரி: அரூர் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு - குடியிருப்புக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி
 
அரூர்-சேலம் பைபாஸ் சாலையில் ராஜ கால்வாய் அகலத்தைப் குறைத்து  தனி நபர்கள் நிரந்தர ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தருமபுரி மாவட்டத்தில் பெய்து வருகிறது. நேற்று ஒருநாள் முழுவதும் இடைவிடாது கனமழை பெய்ததில், 100 மில்லி மீட்டரை கடந்தது. இதனால்  பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர், பெரியார் நகர், தில்லை நகர், பாரதியார் நகர், திருவிக நகர், சேலம் பிரதான சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மழை நீரில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ராஜகால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மழை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பெரிய ஏரி ராஜகால்வாயை தூர்வாரி நிரந்திர தீர்வுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

 
தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை முதல் ரயில் நிலையம் வரை செல்லும் பழுதான சாலையை செப்பனிடும் பணிகளை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.செந்தில்குமார் ஆய்வு
 
தருமபுரி நகரையொட்டிய பகுதிகளான ஆசிரியர் காலனி, வெண்ணாம்பட்டி, ஆயதபடை குடியிருப்பு, குள்ளனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தங்களது பகுதிக்கு செல்ல வேண்டும். அதே போல் ரயில்வே தானிய கிடங்கில் இருந்து சரக்குகளை சரக்கு வாகனத்தில் எடுத்து செல்ல வேண்டும் என்றால், தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை ஒட்டி உள்ள ரயில்வேக்கு சொந்தமான சாலையில் தான் செல்ல வேண்டும்.
 

தருமபுரி: அரூர் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு - குடியிருப்புக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி
 
ஆனால் இந்த சாலை மக்கள் பயன்படுத்த இயலாத நிலையில் குண்டும் குழியுமாக உள்ளதாலும், மழை காலத்தில் தண்ணீர் வெளியே செல்ல இயலாத நிலையில் குளம் போல் தேங்கி கிடப்பதால், அந்த சாலையை பயன்படுத்தும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பொது மக்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். இதனை அடுத்து அப்பகுதி பொது மக்கள் திமுக நாடாளுமன்ற உறுப்பினரான மருத்துவர். செந்தில்குமாரிடம் கோரிக்கை வைத்ததையடுத்து தருமபுரி நகராட்சி, இலக்கியம்பட்டி ஊராட்சி மற்றும் தென்மேற்கு ரயில்வே துறை சார்பில் சுமார் 80 லட்சம் ரூபாய் செலவில் பழுதான சாலையை செப்பனிட்டு புதிய தார் சாலை அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டு செப்பனிடும் பணிகள் துவங்கியது.
 
அதனையடுத்து இன்று அந்த சாலை பணியை தென்மேற்கு ரயில்வே துறை அதிகாரிகள் குழுவுடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அந்த சாலையில் போதிய கழிவு நீர் கால்வாய் இல்லாதததை பொது மக்கள் சுட்டிகாட்டியதையடுத்து ரயில்வே துறையினர் கால்வாய் அமைக்கும் பணியினை செய்து தருவதாக கூறினர். அதனையடுத்து பாரதிபுரம் வெண்ணாம்பட்டி பகுதிகளில் அமைய உள்ள ரயில்வே மேம்பால பகுதியை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது தென்மேற்கு ரயில்வே தலைமை பொறியாளர் ஆர்.கே.சிங், முதண்மை துணை பொறியாளர் ரமேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
Embed widget