மேலும் அறிய

தருமபுரியில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம்

தருமபுரி அருகே கால்நடைகளுக்கான சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தொடங்கி வைத்தார்.

தருமபுரி அருகே கால்நடைகளுக்கான சிறப்பு கால்நடை  சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தொடங்கி வைத்தார்.
 
தருமபுரி  அடுத்த தேவரசம்பட்டியில் தருமபுரி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் கால்நடைகளுக்கான சிறப்பு கால்நடை  சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி கலந்து கொண்டு கால்நடைகளுக்கான சிறப்பு கால்நடை  சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமினை துவக்கி வைத்தார்.  இந்த முகாமில் மாடுகள், ஆடுகள், கோழிகள், நாய்கள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கு நோய் தடுப்பூசிகளும், குடற்புழு நீக்க சிகிச்சையும், பரிசோதனைகளும், கால்நடை வளர்ப்பு மற்றும் செல்லப் பிராணிகளை பாரமரித்தல் குறித்த விழிப்புணர்வும் கால்நடை வளர்ப்போருக்கு வழங்கப்பட்டது.  தொடர்ந்து சிறந்த கறவை மாடுகள் மற்றும் சிறந்த கன்றுகள் பாரமரிப்பாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
 

தருமபுரியில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம்
 
மேலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் 20 முகாம்கள் வீதம் 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் 200 கால்நடைகளுக்கான சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.  இந்த முகாம்களில் மாடுகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கும், நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கும் நோய் தடுப்பூசிகளும், குடற்புழு நீக்க சிகிச்சையும், பாரிசோதனைகளும், கால்நடை வளர்ப்பு மற்றும் செல்லப் பிராணிகள் பாரமரிப்பு குறித்த விழிப்புணர்வும் அளிக்கப்படும்.  எனவே, பொதுமக்கள், கால்நடை வளர்ப்போர் அந்தந்த பகுதிகளில் நடைபெற உள்ள இச்சிறப்பு கால்நடை  சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை பயன்படுத்திக்கொண்டு தங்களது மாடுகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கும், நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கும் நோய் தடுப்பூசிகளும், பாரிசோதனைகளும், குடற்புழு நீக்க சிகிச்சையும் செய்துக்கொண்டு கால்நடை வளர்ப்பு மற்றும் செல்லப் பிராணிகள் பாரமரிப்பு குறித்த விழிப்புணர்வையும் அறிந்து பயன்பெற வேண்டும் என ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்தார்.

 
தருமபுரியில் போக்குவரத்து விதிமீறல் புதிய அபராதம் குறித்து வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மற்றும்  துண்டு பிரசுரம் வினியோகம் செய்து விழிப்புணா்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல் துறையினர். 
 
புதிய மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி, போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அபராதம், தண்டனைகள் விதிக்கப்படுகிறது. அதன்படி, தலைக்கவசம் அணியாதது, இருசக்கர வாகனத்தில் 3 போ் அமா்ந்து செல்வது, கைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்குவது, 4 சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் இயக்குவது,  சாலையில் வெள்ளைக்கோட்டை தாண்டி நிற்பது ஆகிய விதி மீறல்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுபவா்களுக்கும், அந்த வாகனத்தில் உடன் செல்பவா்களுக்கும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ஓட்டுநா் உரிமம் இல்லாதவா்களுக்கு ரூ. 5,000, தடை செய்யப்பட்ட பகுதியில் வாகனங்களில் செல்பவா்களுக்கு ரூ.500, ஒரு வழிப் பாதையில் எதிா் திசையில் செல்பவா்களுக்கு ரூ. 500 என பல்வேறு விதிமீறல்களுக்கு புதிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தருமபுரியில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம்

இதனை தொடர்ந்து தருமபுரி நகரில் நான்கு முனைச்சாலை சந்திப்பு, பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, எஸ்.வி. சாலை, நேதாஜி புறவழிச்சாலை, மதிகோன்பாளையம், பென்னாகரம் சாலை, பெரியாா் சிலை உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில்  போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா்கள் சரவணன், சின்னசாமி ஆகியோா் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
 
மேலும் புதிய அபராத விவரங்கள் குறித்த துண்டு பிரசுரஙங்களை வினியோகம் செய்து. விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும் விதிமுறைகளை மீறுவோா்களிடமிருந்து நவீன கருவி மூலம் ஆன்லைனில் உடனடி அபராதம் வசூலிக்கப்படும். எனவே, பொதுமக்கள் அரசின் போக்குவரத்து விதிமுறைகளைப் முறையாக பின்பற்றி, தலைக்கவசம் அணிந்தும், சீட்பெல்ட் அணிந்தும் வாகனங்களை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தினா். இதேபோல, மாவட்டம் முழுவதும் காவல் துறையினர், போக்குவரத்துப் பிரிவு காவல் துறையினர் அந்தந்த பகுதிகளில் பொதுமக்களிடம் புதிய மோட்டாா் வாகன சட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
ABP Premium

வீடியோ

Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget