மேலும் அறிய
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் 20,000இல் இருந்து 15,000 கன அடியாக குறைந்தது...!
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததால், தொடர்ந்து நீர்வரத்து சரிந்து, காவிரி ஆற்றில் விநாடிக்கு 20,000 கன அடியிலிருந்து 15,000 கன அடியாக குறைந்தது.

தமிழகம் நோக்கி வரும் காவிரி நீர்
கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. இதனால் கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது.
இதனால் கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,150 கன அடியாக உள்ளது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 83.51 அடியாக உள்ளது. மேலும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,345 கன அடியாக உள்ளது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 124.50 அடியாக உள்ளது. இந்நிலையில் கபினியிலிருந்து 2,000 கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் வினாடிக்கு 3,600 கன அடி என இரண்டு அணைகளிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக கேரளா, கர்நாடக, தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு, வினாடிக்கு 40,000 கன அடி வரை நீர்வரத்து அதிகரித்தது. தற்போது மழை குறைந்ததால், படிப்படியாக நீர்வரத்து குறைந்து, நேற்று காலை நிலவரப்படி பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 33,000 கன அடியிலிருந்து 20,000 கன அடியாக குறைந்துள்ளது. இன்று மேலும் நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 20,000 கன அடியிலிருந்து 15,000 கன அடியாக குறைந்துள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து குறைந்தாலும் ஒகேனக்கலில் ஐந்தருவி, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் நலன் கருதி சின்னாறு முதல் கோத்திக்கல் வரை மாவட்ட நிர்வாகம் பரிசல் அனுமதி வழங்கியது. தற்போது நீர்வரத்து 20,000 கன அடிக்கு கீழ் வந்துள்ளதால், மீண்டும் மாமரத்துக்கடவு பகுதியில் பரிசல் இயக்க அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது.
தொடர்ந்து காவிரி ஆற்றில் ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால், தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது என, காவிரி கரையோர மக்களுக்கு கர்நாடக நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion