மேலும் அறிய

தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன் இருவேறு பிரச்னைகளில் இரு பெண்கள் தீக்குளிக்க முயற்சி

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நாளில் இரண்டு பெண்கள் நிலப் பிரச்சனை தொடர்பாக காவல் துறையினரை கண்டித்து தீக்குளிக்க முயற்சி செய்து சம்பவத்தால் பெரும் பரபரப்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் மனு நாள் கூட்டத்திற்கு, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே போத்தாபுரம் பகுதியை சேர்ந்த சிவகாமி(46) என்பவர் மனு கொடுக்க வந்தார். தொடர்ந்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தனது உடலின் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனையறிந்த காவல் துறையினர் அவரை பாதுகாப்பாக காப்பாற்றினர். சிவகாமி தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் அருகில் உள்ள, நில உரிமையாளர்களுக்கும் பாதை பிரச்சனை கடந்த ஆறு மாதகமாக உள்ள நிலையில், காரிமங்கமலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை விசாரிக்க அங்கு பணி செய்யும் உதவி காவல் ஆய்வாளர் கண்ணம்மா என்பவர் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றும் எதிர்தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டும் புகார் பெறபட்ட சான்றிதழ் (சி.எஸ்.ஆர்) வழங்காமல் மிரட்டியுள்ளார். அதனால் தனக்கு உரிய நீதி வேண்டும் என்றும், சிறப்பு உதவி ஆய்வாளரை கண்டித்து, சிவகாமி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணென்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். 
 
தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன் இருவேறு பிரச்னைகளில் இரு பெண்கள் தீக்குளிக்க முயற்சி
 
இதேபோல்  தருமபுரியை அடுத்த சவுளுப்பட்டியை சேர்ந்த சாரா என்பவர் தனது 2.5 ஏக்கர் விவசாய நிலத்தை மதிக்கோன்பாளையத்தை சேர்ந்த ஜீவா என்பவர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு, தன்னை மிரட்டி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தனது நில பிரச்சனையை தீர்த்து வைக்க கோரியும், தன்னை ஏமாற்றி வரும் ஜீவா மீது நடவடிக்கை எடுக்கக் வலியுறுத்தி, சாரா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிப்பதற்காக மண்ணெண்ணெய் கேனுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன் இருவேறு பிரச்னைகளில் இரு பெண்கள் தீக்குளிக்க முயற்சி
 
அப்பொழுது ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர் மண்ணெண்ணெய் கேனை கைப்பற்றினர். இந்நிலையில் தனது நிலை பிரச்சினையை தீர்த்து வைக்க கோரி தீக்குளிக்க வந்ததாக காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருவேறு நிலப் பிரச்சினை தொடர்பாக  தீக்குளிக்க முயற்சி செய்த சிவகாமி மற்றும் சாரா இருவரையும் காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நாளில் இரண்டு பெண்கள் நிலப் பிரச்சனை தொடர்பாக காவல் துறையினரை கண்டித்து தீக்குளிக்க முயற்சி செய்து சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Embed widget