மேலும் அறிய

AIADMK: அதிமுகவில் 4 குழு.. சட்டப்பேரவையில் அடுத்து என்ன நடக்கும்? - விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு!

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி மோதல் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வில் கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தியும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் நிர்வாகிகள் செயல்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் பாதியில் வெளியேறினார். பின்னர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கடுமையான மோதல் நிலவியதை அடுத்து, கடந்த ஜூலை 11-ந் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். அத்துடன் ஒபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.


இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “தற்போது அதிமுகவில் இருப்பது உட்கட்சி பிரச்னை. அதில் நாங்கள் யாரும் தலையிட முடியாது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்புகள் எழுதியுள்ள கடிதம் தொடர்பாக உரிய நேரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும். தற்போது அவசரமாக முடிவு எடுக்க வேண்டும் வகையில் முக்கியமான மக்கள் பிரச்னை இது இல்லை. 

 

ஆகவே இந்த விவகாரத்தில் எந்தவித விருப்பு வெறுப்பு இல்லாமல் சரியான முடிவு எடுக்கப்படும். அதிமுக தற்போது 4 குழுக்களாக உள்ளனர். அவர்களின் உட்கட்சி பிரச்னையில் அரசு எப்போதும் தலையிடாது.  சட்டமன்றத்தை எப்படி ஜனநாயக முறையில் உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்த பொதுக்குழுவிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், ஒருங்கிணைப்பாளரான தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு நடத்தப்படுவதாக மனுத்தாக்கல் செய்திருந்தார். பொதுக்குழு உறுப்பினரான வைரமுத்துவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை அப்போது விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று வழக்கைத் தள்ளுபடி செய்தார். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மீண்டும் இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று வெளியான தீர்ப்பில் அ.தி,மு,க, பொதுக்குழு  கூட்டம் செல்லாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஜூன் 23-ந் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.       


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள் - 11 மணி வரை இன்று
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
Embed widget