Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையோடு ஜூன் 18ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தில் ஆளுநர் என்ன செய்யப்போகிறார் இதனை தமிழக முதலமைச்சர் எப்படி சமாளிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக வீழ்த்தப்பட்டுள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை பிடித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் கூட்டணி அரசு அமைந்துள்ள நிலையில், முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். இதனையடுத்து ஆளுநர் உரையுடன் கூடிய முதல் சட்டப்பேரவை கூட்டம் வருகிற 18ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளாக ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் தனது உரையை சரியான முறையில் படிக்காமல் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் திமுக அரசின் திட்டங்களுக்கு எதிராக செயல்பட்டார்.
வெளிநடப்பு செய்த ஆளுநர்
சட்டமன்றத்தில் தேசிய கீதம் முன்னதாக இசைக்கப்பட வேண்டும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது என பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து திமுக அரசின் ஆளுநர் உரையை வாசிக்க மறுத்திருந்தார். இந்த நிலையில் வருகிற ஜூன் 18 ஆம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் அப்போது தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றவுள்ளார். எனவே ஜூன் 18ஆ ம் தேதி ஆளுநர் என்ன செய்யப்போகிறார் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதனை முதலமைச்சர் விஜய் சமாளிப்பாரா அல்லது ஆளுநரோடு அனுசரித்து செல்வாரா என பொறுத்திருந்த பார்க்க வேண்டும். ஆளுநர் உரை மீதான விவாத கூட்டம் சுமார் 4 முதல் 5 நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது. இதனையடுத்து தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய கீதமா.? தமிழ் தாய் வாழ்த்தா.?
முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், தமிழக சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தொடர், வரும் 2026-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 18-ஆம் நாள் (வியாழக்கிழமை) காலை 10:00 மணிக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். அன்றைய தினம் தமிழக ஆளுநர் அவர்கள் உரையாற்றி கூட்டத்தொடரைத் தொடங்கி வைப்பார்.
ஆளுநர் உரைக்குப் பிறகு, சட்டமன்றத்தின் அடுத்தடுத்த செயல்பாடுகள் மற்றும் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்க ‘அலுவல் ஆய்வு நிலைக்குழு’கூடும். அக்குழுவின் முடிவின்படி கூட்டத்தொடருக்கான முழுமையான கால அட்டவணை வெளியிடப்படும். சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுமா அல்லது தேசிய கீதம் பாடப்படுமா என்ற கேள்விக்கு தமிழக சட்டப்பேரவையின் மரபுகள் கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்தார்.
Before You Go
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை
ட்ரெண்டிங் செய்திகள்





















