மேலும் அறிய

வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு...எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு வழிவகுக்குமா ராகுல் காந்தியின் திட்டம்..?

தொடர் பின்னடைவுகளுக்கு மத்தியில் காங்கிரஸ் முக்கிய அரசியல் நகர்வை மேற்கொண்டுள்ளது.

மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 11 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் ஏற்கனவே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதற்கு பெரும் பின்னடைவு ஏற்படும் வகையில் ஒரு அரசியல் நிகழ்வு சமீபத்தில் நடந்தது.

காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிராந்திய கட்சிகள்:

தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக இருப்பவர் மம்தா பானர்ஜி. மேற்குவங்கத்தின் முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா, கடந்த சில மாதங்கள் முன்பு வரை பாஜகவை கடுமையாக எதிர்த்து வந்தார். 

ஆனால், அவருடைய கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களின் வீட்டில் சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை சோதனை நடத்தியதை தொடர்ந்து, அவரின் செய்லபாட்டில் மாற்றம் தெரிய தொடங்கியது.

அதன் தொடர்ச்சியாக, பாஜகவை எதிர்ப்பது போன்றே காங்கிரஸ் கட்சியையும் சமமாக எதிர்க்க தொடங்கினார். இப்படி, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், மம்தாவை சமீபத்தில் சந்தித்து பேசினார். 

இதை தொடர்ந்து, பிஜு ஜனதா தளத்தின் தலைவரும் ஒடிசா முதலமைச்சருமான நவீன் பட்நாயக்கை மம்தா சந்தித்தார். பாஜகவை போன்றே காங்கிரஸை எதிர்க்க இந்த மூன்று முக்கிய தலைவர்களும் முடிவு எடுத்ததாக தகவல் வெளியானது.

பின்னடைவுகளுக்கு மத்தியில் புத்துணர்ச்சி:

தொடர் பின்னடைவுகளுக்கு மத்தியில் காங்கிரஸ் முக்கிய அரசியல் நகர்வை மேற்கொண்டுள்ளது. பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் விதமாக காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ் குமார், பிகார் துணை முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

ஐக்கிய ஜனதா தள தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷீத் ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, "இது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு. வரும் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதே இதன் நோக்கம்" என்றார்.

பின்னர், பேசிய ராகுல் காந்தி, "எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ஒரு வரலாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு செயல்முறை. இது நாட்டிற்கான எதிர்க்கட்சிகளின் பார்வையை வளர்த்தெடுக்கும்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget