மேலும் அறிய

மதுக்கடை திறப்பு; ஜூன் 17 கண்டன ஆர்பாட்டம் - டாக்டர் ராமதாஸ்

தமிழ்நாட்டில் நடைபெறுவது மக்கள் நலனுக்கான அரசு அல்ல,மது ஆலைகளின் நலனுக்கான அரசு என மருத்துவர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்

அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் பல லட்சம் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது அவர்களது குடும்பங்களின் உடைமைகளை பறிக்கும் வண்ணம் மீண்டும் டாஸ்மார்க் கடைகளை திறந்து இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற 17 ம் தேதி போராட்டம் நடத்தப்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். 
 

மதுக்கடை திறப்பு; ஜூன் 17 கண்டன ஆர்பாட்டம் - டாக்டர் ராமதாஸ்
 
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் மக்களை இரு வழிகளில் மிக மோசமாக  சூறையாடியிருக்கிறது. முதலாவது மனிதர்களைத் தாக்கி நோய்வாய்ப்படுத்துவதன் மூலமான உடல்நலத் தாக்குதல் அடுத்தது மனிதர்களுக்கான வாழ்வாதாரங்களை முடிந்தவரை அழித்து வாழ முடியாமல்  முடக்குவது ஆகும். இந்த இரு வகை தாக்குதல்களையும் இன்னும் கொடூரமாக்கும் வலிமை மதுவுக்கு  உண்டு. அதனால், குறைந்தபட்சம் கொரோனாவின் பிடியிலிருந்து தமிழகம் மீளும் வரையிலாவது  மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைவரும் பலமுறை வலியுறுத்தியும் கூட, அவை அனைத்தையும் புறக்கணித்து விட்டு 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறந்து மிகப்பெரிய தீங்கை திமுக அரசு உண்டாக்கி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் .

மதுக்கடை திறப்பு; ஜூன் 17 கண்டன ஆர்பாட்டம் - டாக்டர் ராமதாஸ்
மேலும் மதுக்கடைகளில் ஒரு நேரத்தில் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் பாதுகாப்பு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால், மதுக்கடைகள் திறக்கப்பட்ட அடுத்த நிமிடமே பாதுகாப்பு விதிகள் அனைத்தும் காற்றில் பறக்கத் தொடங்கி விட்டன. பெரும்பான்மையான கடைகளில் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கும் சில கடைகளில் இரு கிலோமீட்டருக்கும் கூடுதலான தொலைவுக்கும் குடிமகன்கள்  நீண்ட வரிசையில் நின்று மது வாங்கி அருந்தினார்கள். அவர்களுக்கு இடையில் சமூக இடைவெளி என்பது பெயரளவில் கூட இல்லை.
 
 
மது வாங்க வந்திருந்தவர்களில் பெரும்பான்மையினர் முகக்கவசம் அணியவில்லை அணிந்திருந்த சிலரும் கூட வாய்க்கும், தாடைக்கும் தான் முகக்கவசம் அணிந்து  இருந்தனர். அதேபோல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தான் மதுக்கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மதுக்கடைகளுக்கு வந்தவர்களை எல்லாம், வாக்குச்சாவடிக்கு வாக்களிப்பதற்கு வந்தவர்களைப் போல வரவேற்று 5 மணிக்குள் மதுக்கடை வளாகத்திற்கு வந்த அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, டோக்கன் பெற்ற அனைவருக்கும் மதுப்புட்டிகள் வழங்கப்பட்டன.

மதுக்கடை திறப்பு; ஜூன் 17 கண்டன ஆர்பாட்டம் - டாக்டர் ராமதாஸ்
 
மதுக்கடைகளை திறக்க நேரிட்டது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில், மதுக்கடைகளில் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படாவிட்டால், தளர்வுகள்  திரும்பப்பெறப்படும் என்று கூறியிருந்தார். அதனடிப்படையில் பார்த்தால் தமிழ்நாட்டில் நேற்று திறக்கப்பட்ட மதுக்கடைகளில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலான மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மதுவை விற்று தான் வருவாய் ஈட்டி நிர்வாகம் செய்ய வேண்டிய நிலையிலுள்ள அரசு அதை செய்யாது.தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறப்பதற்காக முதலமைச்சர் பல்வேறு காரணங்களைக் கூறியிருக்கிறார். கொரோனா குறைந்து விட்டதால் தான் மதுக்கடைகளை திறக்கிறோம் என்று முதல் நாள் கூறுகிறார் கள்ள மது விற்பனையைத் தடுப்பதற்காகத் தான் மதுக்கடைகள் திறக்கப்படுவதாக அடுத்த நாள் தெரிவிக்கிறார். இவை எதுவுமே உண்மை இல்லை என்பது அவரது மனசாட்சிக்கே தெரியும். அவர் கூறும் காரணங்கள் உண்மை இல்லை என்பதால் தான் முதலமைச்சரின் வார்த்தைகளில் தடுமாற்றம் தெரிகிறது.

மதுக்கடை திறப்பு; ஜூன் 17 கண்டன ஆர்பாட்டம் - டாக்டர் ராமதாஸ்
 
 கொரோனா காலத்தில் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நாளை மறுநாள் வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு மாநிலம் தழுவிய நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின்  மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகளும் தங்களின் வீட்டு வாசலில், கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து, 5 பேருக்கு மிகாமல் கூடி, மதுவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும், கறுப்புக் கொடியையும்   ஏந்தி முழக்கமிட்டு போராட்டம்  நடத்தப்படும் என அவருடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Tamilnadu Round Up: திமுக மீது CM விஜய் தாக்கு, கத்தாரில் தமிழர்கள் 3 பேர் பலி, குறைந்த தங்கம் - தமிழ்நாட்டில் இதுவரை
திமுக மீது CM விஜய் தாக்கு, கத்தாரில் தமிழர்கள் 3 பேர் பலி, குறைந்த தங்கம் - தமிழ்நாட்டில் இதுவரை
CM Vijay:ஃபயர் விடுவாரா? சட்டப்பேரவை நேரலையில் CM விஜய் இன்று பதிலுரை - உதயநிதி, EPS-க்கு பதில் வருமா?
ஃபயர் விடுவாரா? சட்டப்பேரவை நேரலையில் CM விஜய் இன்று பதிலுரை - உதயநிதி, EPS-க்கு பதில் வருமா?
இத மட்டும் பண்ணா போதும்.. மொத்தமாக மாறப்போகும் காஞ்சிபுரம்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
இத மட்டும் பண்ணா போதும்.. மொத்தமாக மாறப்போகும் காஞ்சிபுரம்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு குஷி.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ...
நகைப்பிரியர்களுக்கு குஷி.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ...
Tamilnadu Round Up: திமுக மீது CM விஜய் தாக்கு, கத்தாரில் தமிழர்கள் 3 பேர் பலி, குறைந்த தங்கம் - தமிழ்நாட்டில் இதுவரை
திமுக மீது CM விஜய் தாக்கு, கத்தாரில் தமிழர்கள் 3 பேர் பலி, குறைந்த தங்கம் - தமிழ்நாட்டில் இதுவரை
Consecutive holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து கழகம் அசத்தல் அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து கழகம் அசத்தல் அறிவிப்பு
Tiruchendur: “நிம்மதியா சாமி கும்பிட விடுங்க” .. திருச்செந்தூர் கோயில் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த முடிவு!
Tiruchendur: “நிம்மதியா சாமி கும்பிட விடுங்க” .. திருச்செந்தூர் கோயில் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த முடிவு!
ஆசிரியர் இல்லாமல் பாழாகும் கல்வி.. மனசாட்சி இருக்கா முதலமைச்சரே? - விஜயை விளாசிய ஹெச்.ராஜா!
ஆசிரியர் இல்லாமல் பாழாகும் கல்வி.. மனசாட்சி இருக்கா முதலமைச்சரே? - விஜயை விளாசிய ஹெச்.ராஜா!
CM Vijay: விஜயை வில்லங்கத்தில் மாட்டி விட்ட ரூட் ஜெகதீஷ்.. வாழ்த்து பதிவால் வெடித்த சர்ச்சை.. குஷியில் எதிர்க்கட்சிகள்!
CM Vijay: விஜயை வில்லங்கத்தில் மாட்டி விட்ட ரூட் ஜெகதீஷ்.. வாழ்த்து பதிவால் வெடித்த சர்ச்சை.. குஷியில் எதிர்க்கட்சிகள்!
இத மட்டும் பண்ணா போதும்.. மொத்தமாக மாறப்போகும் காஞ்சிபுரம்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
இத மட்டும் பண்ணா போதும்.. மொத்தமாக மாறப்போகும் காஞ்சிபுரம்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
Embed widget