மேலும் அறிய

”சீமான் விடுதலை புலிகளை காட்டி கொடுத்தார் ” -ராஜீவ் காந்தி பகீர் குற்றச்சாட்டு

DMK Rajiv Gandhi Speech About NTK Seeman: சீமான் ஒரு பொய்யர்,ஆமைக்கறி, மான்கறி என எங்களை போன்ற இளஞர்களை ஏமாற்றிவிட்டார் என திமுகவைச் சேர்ந்த ராஜீவ் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுக்ளை வைத்திருக்கிறார்.

தமிழ்நாட்டு அரசியலில் நுழைவதற்காக , எங்களை போன்ற இளைஞர்களிடம் பிரபாகரனுடன் இருந்த புகைப்படத்தை காட்டியும் , பிரபாகரன் துப்பாக்கி சொல்லிக் கொடுத்தார் என்றும்; இட்லிக்குள் ஆமைக்கரி சாப்பிட்டேன் என்றும் உண்மைக்கு புறம்பான கதைகளை கூறியது மட்டுமல்லாமல், விடுதலை போராளிகளை சிங்கள காட்டி கொடுத்தது மட்டுமன்றி, எங்களை லட்சகணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை கெடுத்துள்ளார் என நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியும், தற்போதைய திமுக மாணவர் அணி தலைவருமான ராஜீவ காந்தி கடுமையான குற்றசாட்டை வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 சீமான் - பிரபாகரன் சந்திப்பு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரனோடு எடுத்திருக்கும் புகைப்படம் , உண்மையில்லை; பெரியார் குறித்து சர்ச்சை கருத்தை  சீமான் தெரிவித்ததால், உணமையை சொல்ல வேண்டிய சூழ்நிலை என்று, அந்த புகைப்படத்தை நான் தான் எடிட்  செய்தேன் என சொன்னது, பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்திருந்தார் சீமான்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியும், தற்போதைய திமுக மாணவர் அணி தலைவருமான ராஜீவ் காந்தி செய்தியாளர்களை பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் தெர்வித்ததாவது , “  சீமான், பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் உண்மையில்லை, அதை நான்தான் எடிட் செய்தேன் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்தார். தற்போது, இயக்குநர் சந்தோஷ் தெரிவித்திருக்கிறார்,” சீமான், பிரபாகரனை சந்தித்தது உண்மைதான்; ஆனால் 10 நிமிடங்கள் கூட இல்லை; அந்த வீடியோ தன்னிடம் இருக்கிறது என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடவில்லை என தெரிவித்திருக்கிறார்.


”சீமான் விடுதலை புலிகளை காட்டி கொடுத்தார் ” -ராஜீவ் காந்தி பகீர் குற்றச்சாட்டு

”தமிழீழ அரசியலை மழுங்கடித்துள்ளார்”

ஆனால், சீமான் பொய்யான புகைப்படத்தை காட்டி, எங்களை போன்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை கெடுத்திருக்கிறார் என தோன்றுகிறது. தமிழ் சமூகத்தில் மேலோங்கியிருந்த தமிழீழ ஆதரவையும்;  சமூக நீதி ஆதரவையும் மட்டுப்படுத்துவதற்கு, சீமான் என்ற மனிதர் வளர்த்து எடுக்கப்பட்டுள்ளார் என்பது அதிர்ச்சியளிக்கிறது.  நான் சண்டை காட்சியில், இப்படி சுடு என்று பிரபாகரன் சொல்லி கொடுத்தார் என்று பொய் சொல்லி, தமிழீழ அரசியலை மழுங்கடிக்கச் செய்திருக்கிறார். 2009 போர் உச்சத்தில் இருந்த போது, சீமான் என்ன செய்து கொண்டிருந்தார். 2008 ஈழத்திற்கு சென்று வந்த பிறகு, ஈழத்தில் இதுதான் நடந்தது என்று, ஏன் எங்குமே சொல்லவில்லை.

Also Read: Israel Hamas Ceasefire: டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?

”போராட்டத்திற்கு வராமல் சூட்டிங் சென்றார்”

2008ல் போராட்டம் , தமிழ்நாட்டில் தீவிரமடைந்து வந்த நிலையில், கோவை சிறையில் இருந்து வெளியே வந்த சீமான் போராட்டத்திற்கு வரவில்லை; நேரடியாக சென்ற இடம், மாயாண்டி குடும்பத்தார் படத்திற்கு. இனம்தான் பெரிது என்றால், போராட்டத்திற்கு வந்திருக்க வேண்டும்.; பணத்தை தேடி படத்திற்குச் சென்றார். நான் வலியுறுத்திய போதிலும், பொழப்ப பார்க்க வேண்டாமா என கேட்டார் சீமான். 17 பேர் தீக்குளித்த போது; ஜனவரி , பிப்ரவரி மார்ச் ஆகிய 3 மாதங்களில் சீமான் எங்கே இருந்தார். ஒருமுறை திரையுலகினர் நடத்திய மனித சங்கிலி போராட்டத்திற்கு வந்தார்.


”சீமான் விடுதலை புலிகளை காட்டி கொடுத்தார் ” -ராஜீவ் காந்தி பகீர் குற்றச்சாட்டு

”போராளிகளை காட்டி கொடுத்தார்”

எங்களுக்கு என்ன அச்சம் வருகிறது என்றால், தமிழீழத்தில் பார்த்த செய்த செய்தியை ,விடுதலை புலிகள் குறித்தான தகவல்களை, சிங்கள உளவுத்துறைக்கு காட்டி கொடுத்துவிட்டு , போர் முடிந்தவுடன் சூசையர் ஆடியோவை காட்டி அரசியல் செய்து வருகிறார். பிரபாகரன் மறைந்தது தெரிந்தும் , இளைஞர்களிடம் எழுச்சி வந்து விடக்கூடாது என ,மறைத்து அரசியல் செய்தவர்.
இனப்படுகொலை தொடர்பாக , சட்டரீதியாக ஒன்றுகூட எடுக்காமல், ஈழப்போராளிகளை காட்டி கொடுத்திருக்கிறார். 

Also Read: Ceasefire: விடியலை பார்க்கவுள்ள மக்கள்! இஸ்ரேல் - ஹமால் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.!

”அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்”

தமிழ்நாட்டில், மத்திய அரசிடம் சுயாட்சி கேட்டு கொண்டிருப்பவர்களிடம், நீ வந்தேறி; தெலுங்கர்; திராவிடர் என பேசி ; இனத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். 15 வருடங்களாக தமிழ் இனத்திற்காக என்ன செய்தார். தற்போது பார்க்கையில், ஆர்.எஸ்.எஸ்-ன் கைக்கூழி என தெரிகிறது. அவர், வாட்சப் ஸ்டேட்டஸிஸ் சமஸ்கிருத திணிப்பை விட ; இந்தி திணிப்பை விட பெரியார் திணிப்பு மோசமானது என வைத்திருக்கிறார்.

எங்களை போன்ற இளைஞர்களிடம் எத்தனை கதைகள், இட்லிக்குள் ஆமைக்கறி, மான்கறி; என மாவீரனை, போராளிகளை கொச்சைப்படுத்தியிருக்கிறார். பிரபாகரனால், அடையாளம் காணப்பட்டவன், நான்தான், என இளைஞர்களிடம் தமிழீழம் எழுச்சியுறாமல் பார்த்து கொண்டும், காட்டியும் கொடுத்தவர்; இளைஞர்களை ஏமாற்றும் சீமான், அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியவர் என முன்னாள் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும் , தற்போதைய திமுக இளைஞர் அணி தலைவருமான ராஜீவ் காந்தி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget