மேலும் அறிய

மே 3 வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் என்ன: முடிவுகள் எப்போது தெரியும்

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 234 சட்டமன்றத் தொகுதிகள் அமைந்துள்ளன. ஏப்ரல் 6-ஆம் தேதி இந்த 234 சட்டபேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் எண்ணும் பணி மே மாதம் 2-ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 234 சட்டமன்றத் தொகுதிகள் அமைந்துள்ளன. ஏப்ரல் 6-ஆம் தேதி இந்த 234 சட்டபேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் எண்ணும் பணி மே மாதம் 2-ஆம் தேதி நடைபெறுகிறது.

கொரோனா தொடர்பான சமூக இடைவெளி விதிகளை கருத்தில்கொண்டு, வாக்குபதிவு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு ஒரு வாக்குச்சாவடிக்கான வாக்காளர்களின் எண்ணிக்கை 1500-ல் இருந்து 1000 ஆக குறைக்கப்பட்டது.

தபால் வாக்குப்பதிவு : 

யாரெல்லாம் அஞ்சல் ஓட்டு போட தகுதியானவர்கள் ? 

பாதுகாப்புப் படை பணியாளர்கள், அயல்நாட்டு தூதரக பணியில் உள்ளோர், தடுப்புக்காவலில் சிறையில் உள்ளோர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் நாளில் பணியில் உள்ள நடத்துநர்கள், ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேர்பட்டோர், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள், வானூர்தி பணியாளர்கள் உள்ளிட்டோரில் தேர்தல் நாளன்று பணியில் உள்ளோர் அஞ்சல் ஓட்டு போட தகுதியானவர்கள்.            

அஞ்சல் வாக்கு சீட்டுகள் எண்ணும் பணி முழுவதும் முடிவடைந்த பின்னர்தான், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகள் எண்ணிக்கையின் கடைசி சுற்று பணி முடிக்கப்படும். அஞ்சல் வாக்குச் சீட்டுகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்குகள் எண்ணும் பணி அனைத்தும் முடிக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திலும் குலுக்கல் முறையின் தேர்ந்தெடுக்கப்படும் 5 வாக்குச் சாவடிகளின் VVPAT paper Slips வாக்கு எண்ணிக்கை பணி துவக்கப்படும்.   

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்படும்  தபால் வாக்குகள் பாதுகாக்கப்படும் இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி கண்காணிக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வி வி பேட் கருவி என்றால் என்ன:   

வாக்குப் பதிவு இயந்திரங்கள் (EVMs) என்பது, வாக்குப்பதிவு இயந்திரம் (Ballot unit), கட்டுப்பாட்டு இயந்திரம் (Control Unit ) மற்றும் VVPAT என மூன்று கருவிகளை உள்ளடைக்கியது.         

தேர்தலின் போது வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான வி வி பேட் கருவி அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலும் பொருத்தப்பட்டது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் 50 வாக்குகள் செலுத்தப்பட்டு, அவைகள் வி வி பேட் மூலம் சாரிபார்க்கப்பட்டு, வேட்பாளர்களில் மூவர்களுக்கு காண்பிக்கப்பட்ட பின், வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். 

வாக்குப்பதிவு முடிந்த பிறகு ( ஏப்ரல் 6 - மே 2):    

வாக்குப்பதிவு முடிந்த பின், ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்படும். 

பாதுகாப்பு அறையானது இரட்டை பூட்டு அமைப்பை கொண்டிருக்க வேண்டும். பூட்டின் ஒரு சாவியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மற்றொரு சாவியை சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் அலுவலரும் வைத்திருக்குமாறு ஏற்பாடு செய்யப்படும். 

வாக்குகள் எண்ணப்படுவதற்காக, ஓட்டுகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டுக் கருவிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணிநேரமும் தீவிரமாக கண்காணிக்கப்படும். வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட உடனே அறையை ஒட்டிய உட்புற சுற்றுப்பகுதியில் மத்திய போலீஸ் படையும், அறைக்கு வெளியில் மாநில ஆயுதப் போலீஸ் படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும். 

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க, போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமிக்குமாறு எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள், அந்த இடத்தின் உட்புற சுற்றளவுக்கு வெளியில் நின்று கண்காணிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு பெரிய திரையில் சி.சி.டி.வி காட்சி காட்சிப்படுத்தப்படும். இதனால் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையை அவர்களால் தொடர்ந்து கண்காணித்து வர முடியும்.   

வாக்கு எண்ணிக்கை (மே 2-ஆம் தேதி):  

வாக்குகள் எண்ணப்படும் நாளன்று, பாதுகாப்பு அறையானது வேட்பாளர்கள்/அவர்களின் பிரதிநிதிகள், தேர்தல் அதிகாரி மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் வீடியோ பதிவின் கீழ் திறக்கப்படும். 

வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பற்றி: 

சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி, வாக்கு எண்ணிக்கை மையத்தில், வாக்கு எண்ணிக்கை முகவர்களாக 15 நபர்களை நியமிக்கலாம். முகவர்களுக்கு தனியாக Counting Agent Identity Card என்று சொல்லக்கூடிய அடையாள அட்டையை தேர்தல் நடத்தும் அலுவலகம் கொடித்திருக்கும். வாக்கு எண்ணிக்கையின் போது, முகவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய சாப்பாடு, டி, தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை  மாவட்டம் நிர்வாகம் வழங்கும். இதில், ஒரு தகவல் என்னவென்றால், இதற்கானத் தொகையினை  வேட்பாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலக தனி வட்டாட்சியரிடம் செலுத்திட வேண்டும்.           

வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திலும் வைக்கப்பட்ட சீல், முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் அகற்றப்பட்டு, வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.  உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஒவ்வொரு தொகுதியிலும் ஐந்து வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள், வி வி பேட்டில் பதிவான ரசீதுகளுடன் சரிபார்க்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியது.

வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் மற்றும் விவி பேட்  வாக்குகள் இடையே முரண்பாடு இருந்தால் என்ன ஆகும்?

அத்தகைய சந்தர்ப்பத்தில், வி வி பேட்டில் பதிவான ரசீதுகளின் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் நிர்ணயிக்கப்படுகின்றன.   

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

'சங்கி' பட்டம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி - திருப்பரங்குன்றத்தில் பரபரப்புரை !
'சங்கி' பட்டம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி - திருப்பரங்குன்றத்தில் பரபரப்புரை !
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தீப்பிடித்த சிறுபான்மையினர் விவகாரம்... கோவையில் சீமான் ஆவேசப் பேச்சு...
தீப்பிடித்த சிறுபான்மையினர் விவகாரம்... கோவையில் சீமான் ஆவேசப் பேச்சு...
BJP Candidates: பாஜகவை பாடாய்படுத்தும் 6 தொகுதிகள் - அண்ணாமலைக்கு ரெண்டுல ஒன்னு கன்ஃபார்ம்? வானதி விடாப்பிடி
BJP Candidates: பாஜகவை பாடாய்படுத்தும் 6 தொகுதிகள் - அண்ணாமலைக்கு ரெண்டுல ஒன்னு கன்ஃபார்ம்? வானதி விடாப்பிடி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget