மேலும் அறிய

Fact Check : ‘நாம் தமிழர் கட்சியினரை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னாரா திருமா?’ உண்மையில் அவர் பேசியது என்ன..?

அரசியல் கட்சிகள் மாறுபட்ட கருத்துகள் முன்மொழிகிறபோது, கருத்துக்கு கருத்தாகதான் அதை அணுகவேண்டுமே தவிர, இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல. இதில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் இசுலாமிய கைதிகளை விடுதலை செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில், அந்த கட்சியின் பேச்சாளர் ஹிம்லர் பேசும்போது, தமிழக முதல்வர் உள்ளிட்டோரை அவதூறாக பேசியதாக கூறி, திமுக மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் தலைமையிலான திமுகவினர் மேடையில் ஏறி மைக்கை பிடிங்கி, நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியதாக வெளியான வீடியோ விவகாரம் இருதரப்பிலும் பரபரப்பாக பகிரப்பட்டு வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பவருமான தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியதாக நேற்று தகவல் வெளியானது.

திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்ட நிலையில், அக்கட்சியினர் சமூக வலைதளங்களில் திருமாவளவன் பேசிய வீடியோவையும் செய்திகளையும் தொடர்ந்து பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள திமுகவினர், திருமாவளவன் அப்படி பேசவே இல்லை. அவர் பேசியது இரட்டடிப்பு செய்யப்பட்டு செய்தி வெளியாகியுள்ளது என பதிலுக்கு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மையில், திருமாவளன் பேசிய என்ன என்பதை அவரது முழு வீடியோவையும் பார்த்து அப்படியே கீழே பதிவு செய்துள்ளோம். கிறிஸ்துமஸ் விழாவிற்காக கன்னியாகுமரி மாவட்டம் அருமனைக்கு வந்தவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, பத்திரிகையாளர்கள் முன் வைத்த கேள்வியும், அதற்கான பதிலும் தொகுக்கப்பட்டுள்ளன. இதுதான் திருமாவளவன் உண்மையில் பேசியது :-Fact Check : ‘நாம் தமிழர் கட்சியினரை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னாரா திருமா?’ உண்மையில் அவர் பேசியது என்ன..?

கேள்வி : நாம் தமிழர் கூட்டத்தில் திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்துவீர்களா ?

திருமா : அந்த சம்பவம் தவறானது. இதனை திமுக தலைமை அங்கீகரித்த நிலையை பார்க்கவில்லை. அவர்கள் தன்னியல்பாக மேடைகளில் அவதூறு பேசியவர்களை எதிர்த்ததாக அந்த பகுதியை சேர்ந்த திமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவு செய்கின்றனர். என்றாலும் கூட, கருத்துக்கு கருத்துதான் எடுத்துவைக்க வேண்டும். வன்முறைகள் கூடாது. இந்த சம்பவத்தில் திமுக தலைமைக்கு உடன்பாடு இருக்காது என நான் பெரிதும் நம்புகிறேன்.

கேள்வி : திமுக தலைமைக்கு உடன்பாடு இல்லையென்றாலும், தமிழக அரசு இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா ?

திருமா : எடுக்கனும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

கேள்வி : காவல்துறை வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என நீங்கள் வலியுறுத்துவீர்களா ?

திருமா : அததான் சொல்றேன். இந்த மாதிரி அரசியல் கட்சிகள் மாறுபட்ட கருத்துகள் முன்மொழிகிற நேரத்தில், கருத்துக்கு கருத்தாகதான் அதை அணுகவேண்டுமே தவிர, இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல. இதில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

 

என்று திருமாவளன் அந்த செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

தலைப்பு செய்திகள்

Minister Keerthana:
Minister Keerthana: "பல இடங்களில் சிப்காட் பொட்டல்காடாகத்தான் உள்ளது.." திமுக-வை விளாசிய அமைச்சர் கீர்த்தனா
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget