![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி - காரணத்தை சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
![அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி - காரணத்தை சொன்ன சென்னை உயர்நீதிமன்றம் chennai high court give permission to aiadmk general body meeting அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி - காரணத்தை சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/11/f61aa898ae81dcbf984d9e2be489b2411657510647_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கட்சியின் உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றே பெரும்பாலானோர் எண்ணமாக இருக்கிறது எனவும் நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார். மேலும் கட்சி விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழுவை நடத்த வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்திருக்கிறார்.
வழக்கு விசாரணையின் போது தீர்ப்பு வாசித்த நீதிபதி, ஓபிஎஸ்க்கு குட்டு வைக்கும் விதமாக பல விஷயங்களை குறிப்பிட்டு பேசினார். விசாரணை தீர்ப்பின்படி,
சட்ட விதிகளுக்குட்பட்டு பொதுக்குழு நடத்தவில்லை என்றால் உச்சநீதிமன்றம்தான் அந்த உத்தரவின் பாதுகாவலர் என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம்தான் பரிசீலீக்க முடியுமே தவிர உயர் நீதிமன்றம் அல்ல. பொதுக்குழு கூட்டம் சட்டப்படி கூட்டப்படமாட்டாது என்று ஓ.பி.எஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்காதது ஏன் என தெரியவில்லை. பொதுக்குழு கூட்டத்தை கூட்டக் கூடாது என்ற கோரிக்கையை தவிர வேறு எந்த இடைகால நிவாரணமும் ஓ.பி.எஸ் தரப்பில் கோரப்படவில்லை. எனவே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் தயங்கவில்லை என்றார்.
மேலும் ஓபிஎஸ் குறித்து குறிப்பிட்ட நீதிபதி, ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் மூத்த தலைவர் உறுப்பினர்களை சமதானம் செய்து கட்சி நலன் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உறுப்பினர்களின் நம்பிக்கையை பெரும் வகையில் பொதுக்குழுவை அணுகுவதை விடுத்து ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுகிறார். கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். பொதுக்குழுவில் தங்கள் குறைகளுக்கு நிவாரணம் கிடைக்காவிட்டால் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம். சிறந்த நிர்வாகத்துக்காக கட்சி விதிகளை வகுக்கும் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது. ஓ.பி.எஸ் இடைக்கால நிவாரணத்தை ஏற்க முடியாது. எனவே மனு தள்ளுபடி எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: Distance MBA, MCA: தொலைதூரக் கல்வியில் எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி: விண்ணப்பிப்பது எப்படி?- முழுவிவரம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
இதையும் வாசிக்கலாம்: Distance MBA, MCA: தொலைதூரக் கல்வியில் எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி: விண்ணப்பிப்பது எப்படி?- முழுவிவரம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)