மேலும் அறிய

Ditwah cyclone: தத்தளிக்கும் மயிலாடுதுறை புறநகர் பகுதிகள்: 14 செ.மீ கனமழையால் குடியிருப்புக்குள் வெள்ளம்! அதிகாரிகள் அலட்சியம், மக்கள் தவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் குடியிருப்புக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மயிலாடுதுறை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள 'டிட்வா' புயல் சின்னத்தின் கோரத் தாண்டவத்தால், மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்து வரும் இந்தத் தீவிர மழையால், மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டு, பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் இதுவரை எட்டிப் பார்க்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

சராசரிக்கும் அதிகமான மழைப்பொழிவு – நகரம் முழுவதும் நீர் தேக்கம்

இன்று காலை 6 மணி நிலவரப்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் சராசரியாக 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த அதீத மழைப்பொழிவு காரணமாக, தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.

மயிலாடுதுறையின் புறநகர்ப் பகுதிகளான பட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சீனிவாசபுரம், ராமகிருஷ்ணா நகர், ஏ.ஆர்.சி. ரத்தினம் நகர், கீழப்பட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. வீடுகளைச் சுற்றிலும் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்பதால், குடியிருப்புவாசிகள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

அடைக்கப்பட்ட வடிகால் வாய்க்கால்

இப்பகுதியில் வெள்ளம் தேங்குவதற்கான முக்கியக் காரணமாக, அருகில் உள்ள ஒரு பெரிய குளத்தில் தண்ணீர் நிரம்பி மறுகால் செல்லும் வடிகால் வாய்க்கால் முழுமையாகச் சேதமடைந்து அடைப்பட்டுப் போனதுதான் என கூறப்படுகிறது. 

பொதுவாக, குளத்தின் நீர்மட்டம் உயர்ந்தால், உபரி நீர் இந்த வடிகால் வாய்க்கால் வழியாக வெளியேறிவிடும். ஆனால், வாய்க்கால் அடைபட்டுப் போனதாலும், பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாலும், தண்ணீர் வெளியேற வழியின்றி குடியிருப்புப் பகுதிகளை நோக்கித் திரும்பி, தற்போது சாலைகளையும் வீடுகளையும் சூழ்ந்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், தேங்கியுள்ள தண்ணீரின் மட்டம் மேலும் மேலும் உயர்ந்து வருகிறது. இதனால், மக்களின் அன்றாடச் செயல்பாடுகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கி நிற்பதால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், பாதசாரிகள் நடந்து செல்லக்கூட வழியின்றித் தத்தளித்து வருகின்றனர்.

பலன் தராத மனுக்கள் – அதிகாரிகளின் அலட்சியம்

இந்தப் புறநகர் பகுதிகளில் வெள்ளம் தேங்குவது இது முதல் முறையல்ல. ஒவ்வொரு மழைக்காலத்திலும் இதே நிலைதான் தொடர்கிறது. வடிகால் வாய்க்காலைச் சீரமைக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கடந்த காலங்களில் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.

குறிப்பாக, தமிழக அரசின் மக்கள் தொடர்பு திட்டமான 'உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில்' கூட இதுகுறித்துப் புகார் மனு அளிக்கப்பட்டதாகவும், ஆனால் இன்றுவரை எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

தற்போது, கனமழையால் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் தொலைபேசி வாயிலாகப் பொதுமக்கள் மீண்டும் புகார் அளித்துள்ளனர்.

"நாங்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்குத் தொலைபேசி வாயிலாகப் புகார் தெரிவித்துக் கொண்டிருக்கிறோம். மூன்று நாட்களாகத் தண்ணீர் குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்துள்ளது. ஆனால், ஒரு அதிகாரி கூட இதுவரை எங்கள் பகுதிக்கு வந்து பார்வையிடவில்லை. நிவாரணப் பணிகளைத் தொடங்கவும் இல்லை. அரசின் அலட்சியம் எங்களுக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது," என்று சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். 

விஷ ஜந்துகள் அச்சுறுத்தல் – மக்கள் மன்றாடல்

வீடுகளைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால், பொதுமக்களுக்கு மற்றுமொரு அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. மழை நீர் தேங்கியுள்ளதால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும், சில சமயங்களில் வீடுகளுக்குள்ளும் நுழையும் அபாயம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மழை நீரும், கழிவு நீரும் கலந்து தேங்கி இருப்பதால், சுகாதாரக் கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இனியும் கால தாமதம் செய்யாமல், உடனடியாகப் பொறியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களை அனுப்பி, வடிகால் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்காலைச் சீர் செய்து தண்ணீரை வடிய வைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நூற்றுக்கணக்கான புறநகர் பகுதி மக்கள் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் உடனடியாக இந்தப் புறநகர்ப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, மக்களின் துயரத்தைப் போக்க நிரந்தரமான தீர்வைக் காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"போதைப்பாதை அழிவுப்பாதை; கல்விப்பாதையே உயர்வுப்பாதை" - நீடூர் இப்தார் விழாவில் மயிலாடுதுறை SP அட்வைஸ்..!
சீர்காழி வீதிகளில் அணிவகுத்த ராணுவம் வீரர்கள் ; அதிரடி பாதுகாப்பு ஏற்பாடுகளால் பரபரப்பு..!
சீர்காழி வீதிகளில் அணிவகுத்த ராணுவம் வீரர்கள் ; அதிரடி பாதுகாப்பு ஏற்பாடுகளால் பரபரப்பு..!
4 மூட்டை நெல் விற்றால் ஒரு பவுன் தங்கம் வாங்கலாம்.. ஆனால் இப்போ? அய்யாக்கண்ணு ஆதங்கம்..
4 மூட்டை நெல் விற்றால் ஒரு பவுன் தங்கம் வாங்கலாம்.. ஆனால் இப்போ? அய்யாக்கண்ணு ஆதங்கம்..
மயிலாடுதுறை: தொடர் கஞ்சா விற்பனை - குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது!
மயிலாடுதுறை: தொடர் கஞ்சா விற்பனை - குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay in AIADMK alliance : ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
TNEB Salary Hike : அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Tomato And Onion Price : போட்டி போட்டு குறையும் தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ வெறும் இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
போட்டி போட்டு குறையும் தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ வெறும் இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Railway announcement : திண்டிவனம், திருவள்ளூர், புதுக்கோட்டையில் இனி ரயில்கள் நிற்கும்- பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு
திண்டிவனம், திருவள்ளூர், புதுக்கோட்டையில் இனி ரயில்கள் நிற்கும்- பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு
Embed widget