மேலும் அறிய

குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள பூர்விக இல்லத்திற்கு வருகை தரும் துர்கா ஸ்டாலின் - கவனத்தை ஈர்க்க முயற்சிக்கும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள்...!

திருவெண்காடு கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள பூர்விக இல்லத்திற்கு வருகை தரும் துர்கா ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர்.

பகுதிநேர சிறப்பாசிரியர்கள் 

தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், இசை, உடற்கல்வி, கட்டிட கலை, தோட்டக்கலை, வாழ்வியல்திறன் ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 11.11.2011 அன்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை 177-ன் படி வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்பட்ட இவர்களுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றும், இதற்காக இவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 

ஊதியம் இல்லாத மே மாதம் 

கடந்த பதிமூன்று ஆண்டுகள் கடந்து இவர்களுக்கு 7500 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டு, தற்போது 12,500 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்று வருகின்றனர். பகுதி நேர பணியாக இருந்த போதிலும், ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற தமிழ்நாடு அரசின் மீதான நம்பிக்கையில்தான் அவர்கள் இந்தப் பணியில் சேர்ந்தனர். ஆனால் 13 ஆண்டுகள் முடிந்த பின்னும் கூட இன்றுவரை அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு மறுத்து வருவது மிகுந்த வேதனைக்குரியது. மேலும் இவர்களுக்கு மட்டும் ஆண்டுகளுக்கு 11 மாதம் தான் என்பது போல ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விடுமுறை காலத்தில் அந்த குறைந்த ஊதியமும் வழங்கப்படுவது இல்லை.


குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள பூர்விக இல்லத்திற்கு வருகை தரும் துர்கா ஸ்டாலின் - கவனத்தை ஈர்க்க முயற்சிக்கும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள்...!

தொடர் கோரிக்கை 

இந்நிலையில் திமுக ஆட்சியில் பணிநிரந்தரம் செய்வதாக 2016, 2019, 2021 ஆகிய தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டதை அடுத்து பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி அறவழியில் போராடி வந்தனர். மேலும் தற்போது நடந்து முடிந்த திமுக ஆட்சியில் கடைசி முழு பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால் அதில் தங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்தனர். ஆனால், கல்வி மானிய கோரிக்கைலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினோ, கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழியோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட வில்லை.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தொகுப்பூதியத்தை கைவிட்டு, அரசு சலுகைகள் கிடைக்க காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய இன்னும் ஒரு 300 கோடி போதும். இதற்கு முதல்வர் அரசு கொள்கை முடிவு எடுத்தால் போதும். தமிழக முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 181 வது வாக்குறுதியான பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 14 கல்வி ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிவதை கைவிட்டு, நிரந்தரப்படுத்த வேண்டும் என்பதே 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை எனவும், இதனை அறிவிக்கும் வரை தாங்கள் பல்வேறு கட்ட தொடர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளதாக தெரிவித்தி அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள பூர்விக இல்லத்திற்கு வருகை தரும் துர்கா ஸ்டாலின் - கவனத்தை ஈர்க்க முயற்சிக்கும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள்...!

சிறை நிரப்பும் போராட்டம் 

இந்நிலையில் தங்களின் ஒற்றை கோரிக்கையான பணி நிரந்தரத்தை வலியுறுத்தி திமுகவின் தேர்தல் வாக்குறுதியான 181 நிறைவேற்ற கோரி வருகின்ற ஜுலை 8-ம் தேதி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மாநில தலைநகர் சென்னையில் சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். மேலும் தங்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக மாநிலம் முழுவதும் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள் என தங்கள் கோரிக்கை குறித்து அரசுக்கு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் வருகின்ற ஜுலை 7 -ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் துணைவியாரின் சொந்த ஊரான திருவெண்காட்டில் அவரது இல்லம் அருகே அமைந்துள்ள புதன் ஸ்தலமான சுவேதாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள துர்கா ஸ்டாலின் வரவுள்ள நிலையில், அவரது கவனத்திற்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கையை கொண்டு சென்று அதன் மூலம் முதல்வரின் கொண்டு செல்லும் நோக்கில் துர்கா ஸ்டாலின் இல்லம் அருகே திமுகவின் தேர்தல் வாக்குறுதியான 181 -னை நிறைவேற்ற கோரி மயிலாடுதுறை மாவட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சுவர் விளம்பரத்தை எழுதி வருகின்றனர். 

மேலும், கலைஞர் சொன்ன வாக்குறுதியான பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து முதல்வர் அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. 15 வது கல்வி ஆண்டில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தற்போது 12,500 ரூபாய் தொகுப்பூதியம் தான் சம்பளமாக வழங்கப்படுகிறது. இதனால் இன்றைய விலைவாசி உயர்வில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளோம். 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் காலமுறை சம்பளம் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மயிலாடுதுறை ஸ்டாலினுக்கு கொடுத்த வாக்குறுதி

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் கடந்த 2021 -ம் ஆண்டு நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்ற தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின், பகுதிநேர ஆசிரியரான ஸ்டாலினின் பணிநிரந்த கோரிகையை கேட்டு, இந்த ஸ்டாலின் பதவி ஏற்ற 100 நாட்களில் அந்த ஆசிரியர் ஸ்டாலினின் கோரிக்கை நிறைவேற்றபடும் என உறுதி தந்த நிலையில் 4 ஆண்டுகள் கடந்தும் அந்த வாக்குறுதி நிறைவேற்ற படவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க மாநில செயலாளர் வா.முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் உடனிருந்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"திராணி இருந்தால் தீப்பெட்டி சின்னத்தில் வா!" - துரை வைகோவிற்கு நேரடி சவால் விட்ட மார்கோனி..
சந்திரனின் சாபம் தீர்த்த திருஇந்தளூர் பெருமாள் கோயில் தேரோட்டம்: பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்!
சந்திரனின் சாபம் தீர்த்த திருஇந்தளூர் பெருமாள் கோயில் தேரோட்டம்: பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்!
"ஒரே கூட்டணி.. ஒரே தொகுதி.. ஆனால் இரண்டு வேட்பாளர்கள்!
மதங்கள் வேறாகலாம்.. மனம் ஒன்றுதான்! கோவில் டூ தர்கா: சீர்வரிசை தட்டுகளுடன் வந்த மீனவர்கள்! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய கந்தூரி விழா...
மதங்கள் வேறாகலாம்.. மனம் ஒன்றுதான்! கோவில் டூ தர்கா: சீர்வரிசை தட்டுகளுடன் வந்த மீனவர்கள்! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய கந்தூரி விழா...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்
விஜய்க்கு காவல்துறை செக்வீட்டில் இருந்தே பரப்புரை?கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP Candidates: பாஜகவை பாடாய்படுத்தும் 6 தொகுதிகள் - அண்ணாமலைக்கு ரெண்டுல ஒன்னு கன்ஃபார்ம்? வானதி விடாப்பிடி
BJP Candidates: பாஜகவை பாடாய்படுத்தும் 6 தொகுதிகள் - அண்ணாமலைக்கு ரெண்டுல ஒன்னு கன்ஃபார்ம்? வானதி விடாப்பிடி
Artemis II: 50 ஆண்டுகளில் முதல்முறை..! நிலவிற்கு மனிதர்களை அனுப்பிய நாசா - ஆர்டெமிஸ் II செய்யப்போவது என்ன?
Artemis II: 50 ஆண்டுகளில் முதல்முறை..! நிலவிற்கு மனிதர்களை அனுப்பிய நாசா - ஆர்டெமிஸ் II செய்யப்போவது என்ன?
Trump Vs Iran: சும்மா அடிச்சு விடுங்க.! புதிய அதிபர் போர்நிறுத்தம் கேட்டதாக பதிவிட்ட ட்ரம்ப்; காறித்துப்பிய ஈரான்
சும்மா அடிச்சு விடுங்க.! புதிய அதிபர் போர்நிறுத்தம் கேட்டதாக பதிவிட்ட ட்ரம்ப்; காறித்துப்பிய ஈரான்
IPL 2026: மொத ரவுண்டிற்கே நாக்-அவுட் ஆன CSK - ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம் - டாப் 4 இடங்களில் எந்த அணிகள்?
IPL 2026: மொத ரவுண்டிற்கே நாக்-அவுட் ஆன CSK - ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம் - டாப் 4 இடங்களில் எந்த அணிகள்?
Range Rover: புதிய ரூல்ஸ்..! ரூ.1 கோடி வரை குறையும் ரேஞ்ச் ரோவர் கார்களின் விலை - எந்த மாடலுக்கு எவ்வளவு சேவிங்ஸ்?
Range Rover: புதிய ரூல்ஸ்..! ரூ.1 கோடி வரை குறையும் ரேஞ்ச் ரோவர் கார்களின் விலை - எந்த மாடலுக்கு எவ்வளவு சேவிங்ஸ்?
IPL 2026 LSG vs DC: சாமியாய் மாறிய சமீர் ரிஸ்வி..! தோற்க வேண்டிய டெல்லி சூப்பர் வெற்றி! பண்ட் ரசிகர்களுக்கு ஏமாற்றம்
IPL 2026 LSG vs DC: சாமியாய் மாறிய சமீர் ரிஸ்வி..! தோற்க வேண்டிய டெல்லி சூப்பர் வெற்றி! பண்ட் ரசிகர்களுக்கு ஏமாற்றம்
TVK Vijay Nomination: விஜய் நாளை வேட்புமனுத்தாக்கல்! திருச்சி கிழக்கில் நாளை எங்கே பரப்புரை செய்கிறார்?
TVK Vijay Nomination: விஜய் நாளை வேட்புமனுத்தாக்கல்! திருச்சி கிழக்கில் நாளை எங்கே பரப்புரை செய்கிறார்?
காண்டம் தட்டுப்பாடு! ஈரானால் புதிய நெருக்கடியில் இந்தியா!8000 கோடி நட்டம்!
காண்டம் தட்டுப்பாடு! ஈரானால் புதிய நெருக்கடியில் இந்தியா!8000 கோடி நட்டம்!
Embed widget