மேலும் அறிய

சீர்காழி அருகே சோலார் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

சீர்காழி அருகே தொடங்கப்பட உள்ள சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்திற்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 

சீர்காழி அடுத்த பெருந்தோட்டம் ஊராட்சியில் தொடங்கப்பட உள்ள தனியார் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்திற்கு எதிப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு அளித்துள்ளனர். 

தனியார் சோலார் பவர் பிளான்ட்க்கு எதிர்ப்பு 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கீழநெப்பத்தூர் கிராமத்தில் மெகா கிரீட் ஓல்ட்ராஸ் என்று தனியார் நிறுவனம் சோலார் பவர் பிளான்ட் அமைக்கும் பணியில் அதற்கான தடவாள பொருட்களும் கொண்டுவந்து வைத்து பணிகளை செய்துள்ளது. இந்த சோலார் பவர் பிளான்ட் அமைப்பதற்கு கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆதரவாகவும், பெரும்பான்மையானோர் எதிர்ப்பாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. இதனால் கீழ நெப்பத்தூர், மேல் நெப்பத்தூர், நெப்பத்தூர், திருநகரி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என கூறி இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


சீர்காழி அருகே சோலார் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை

இதனைத் அடுத்து சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படமால் வண்ணம் வருவாய் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீக்கப்பட்ட பின்பு இது தொடர்பாக நிரந்தர தீர்வு காணப்படும் என அறிவுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பணிகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.


சீர்காழி அருகே சோலார் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் 

இந்நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடித்து தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப்பெற்ற பின்னர் மீண்டும், சோலார் மின் உற்பத்திக்கான பணிகள் தொடங்கப்படும் என்றும், அதனை முழுமையாக தடுத்து நிறுத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து இன்று ஊர் மக்கள் ஒன்றுதிரண்டு, இதுதொடர்பாக கீழநெப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர்.


சீர்காழி அருகே சோலார் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

கூட்டத்திற்கு அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் செல்லப்பா, சி.பி.ஐ.எம்.எல். கட்சி மாவட்ட செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் தனியார் சோலார் பவர் பிளான்ட் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஆதரவாக செயல்படுவதை கண்டித்தும், சோலார் பவர் பிளான்ட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் மக்களை திரட்டி மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


சீர்காழி அருகே சோலார் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

மீண்டும் பேச்சுவார்த்தை 

அதனைத் தொடர்ந்து மீண்டும் கடந்தவாரம் சீர்காழி கோட்டாட்சியர் தலைமையில் இருதரப்பினருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அக்கூட்டத்திலும் உடன்பாடு எட்டப்படாத காரணத்தால், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பிலும் முக்கியஸ்தர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், நெப்பத்தூர் கிராமத்தில் இருந்து 200-க்கு மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற பவர்பிளான்ட் நிர்வாகிகள் இத்திட்டத்தால் விவசாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தன்னிலை விளக்கம் அளித்தனர்.


சீர்காழி அருகே சோலார் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத கிராமமக்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேளாண்மை அல்லாத எந்த திட்டத்தையும் அமல்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, சோலார் பிளான்ட் நிர்வாகிகள் தங்கள் திட்டம் குறித்து கிராமமக்களிடம் நேரடி கள ஆய்வு மூலம் விளக்கமளித்து, அவர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே திட்டத்தை தொடர வேண்டும். கிராம மக்கள் எதிர்ப்பை மீறி அங்கு சோலார் திட்டத்தை தொடரக் கூடாது என கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். 


சீர்காழி அருகே சோலார் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

மீண்டும் மீண்டும் எதிர்ப்பு 

இந்நிலையில் மீண்டும் அப்பகுதியை சேர்ந்த மெய்யன் தெரு, சுள்ளான் தெரு மற்றும் அல்லிமேடு ஆகிய மூன்று கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த கிராமங்களில் 500 -க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வறுவதாகவும், சூரிய மின் சக்தி உற்பத்தி திட்டத்தை தொடங்குவதால் தங்கள் பகுதியில் நீர்வழிப் பாதை தடைப்படும் என்றும், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள செல்லனாறு வடிகால் திட்டத்தை அமல்படுத்த முடியாமல் போகும் என்றும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வேளாண் துறை சாராத எந்த திட்டத்தையும் நடைமுறைப்படுத்த அனுமதிக்க கூடாது என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Vice President: பாதியிலேயே ராஜினாமா செய்த குடியரசு துணை தலைவர் - அடுத்து யார்? 2வது மிகப்பெரிய பதவிக்கு ரேஸ்
Vice President: பாதியிலேயே ராஜினாமா செய்த குடியரசு துணை தலைவர் - அடுத்து யார்? 2வது மிகப்பெரிய பதவிக்கு ரேஸ்
VP Jagdeep Resign: வேலையை காட்டிய பாஜக? முதல்முறை ”யாருக்கோ பிடிக்கல” ஜெகதீப் தன்கர் ராஜினாமா பின்புலம்
VP Jagdeep Resign: வேலையை காட்டிய பாஜக? முதல்முறை ”யாருக்கோ பிடிக்கல” ஜெகதீப் தன்கர் ராஜினாமா பின்புலம்
Jagdeep Dhankhar Resign: பெரும் அதிர்ச்சி! குடியரசுத் துணைத்தலைவர் திடீர் ராஜினாமா - ஜெகதீப் தன்கருக்கு என்னாச்சு?
Jagdeep Dhankhar Resign: பெரும் அதிர்ச்சி! குடியரசுத் துணைத்தலைவர் திடீர் ராஜினாமா - ஜெகதீப் தன்கருக்கு என்னாச்சு?
MK Stalin Health: அடுத்த 3 நாட்கள்.. மருத்துவர்கள் கண்காணிப்பில் மு.க. ஸ்டாலின் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
அடுத்த 3 நாட்கள்.. மருத்துவர்கள் கண்காணிப்பில் மு.க. ஸ்டாலின் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War
Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vice President: பாதியிலேயே ராஜினாமா செய்த குடியரசு துணை தலைவர் - அடுத்து யார்? 2வது மிகப்பெரிய பதவிக்கு ரேஸ்
Vice President: பாதியிலேயே ராஜினாமா செய்த குடியரசு துணை தலைவர் - அடுத்து யார்? 2வது மிகப்பெரிய பதவிக்கு ரேஸ்
VP Jagdeep Resign: வேலையை காட்டிய பாஜக? முதல்முறை ”யாருக்கோ பிடிக்கல” ஜெகதீப் தன்கர் ராஜினாமா பின்புலம்
VP Jagdeep Resign: வேலையை காட்டிய பாஜக? முதல்முறை ”யாருக்கோ பிடிக்கல” ஜெகதீப் தன்கர் ராஜினாமா பின்புலம்
Jagdeep Dhankhar Resign: பெரும் அதிர்ச்சி! குடியரசுத் துணைத்தலைவர் திடீர் ராஜினாமா - ஜெகதீப் தன்கருக்கு என்னாச்சு?
Jagdeep Dhankhar Resign: பெரும் அதிர்ச்சி! குடியரசுத் துணைத்தலைவர் திடீர் ராஜினாமா - ஜெகதீப் தன்கருக்கு என்னாச்சு?
MK Stalin Health: அடுத்த 3 நாட்கள்.. மருத்துவர்கள் கண்காணிப்பில் மு.க. ஸ்டாலின் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
அடுத்த 3 நாட்கள்.. மருத்துவர்கள் கண்காணிப்பில் மு.க. ஸ்டாலின் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
Honey Rose: ஹனிரோஸ் ஒரு திருநங்கை.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த பயில்வான் ரங்கநாதன்!
Honey Rose: ஹனிரோஸ் ஒரு திருநங்கை.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த பயில்வான் ரங்கநாதன்!
Metro Travel Card: மெட்ரோ ரயில் பயணிகளே, ஆகஸ்ட் 1-ல் இருந்து அந்த கார்டு இருந்தா தான்... CMRL-ன் முக்கிய அறிவிப்பு
மெட்ரோ ரயில் பயணிகளே, ஆகஸ்ட் 1-ல் இருந்து அந்த கார்டு இருந்தா தான்... CMRL-ன் முக்கிய அறிவிப்பு
மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பொதுமக்கள் - மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த  திட்டம்..!
மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பொதுமக்கள் - மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்..!
Chennai Police Order: இரவு நேர குற்றத் தடுப்பு; காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன பண்ணப் போறாங்க தெரியுமா.?
இரவு நேர குற்றத் தடுப்பு; காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன பண்ணப் போறாங்க தெரியுமா.?
Embed widget