மேலும் அறிய

யார் அந்த டிஎஸ்பி? - மதுபான பார்களுக்கு தொடர்ந்து சீல் வைத்து அதிரடி காட்டும் டி.எஸ்.பி..!  

இவர் பொறுப்பேற்ற மூன்று மாதங்களில் இதுவரை 6 மதுபான பார்களுக்கு சீல் வைத்துள்ளதும், தொடர்ந்து சீல் வைப்பு நடவடிக்கை எடுத்து வருவதும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்தி வரும் சோதனையில் உரிமம் பெறாத மது பானக்கூடங்களுக்கு சீல் வைத்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காவல்துறை நடவடிக்கை 

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளிமாநில மது வகைகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் அன்னை அபிராமி மற்றும் காவல்துறையினர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை காரணமாக புதுச்சேரி மாநில மது மற்றும் சாராயம் விற்பனை தொடர்பாக நாள்தோறும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குற்றங்கள் குறைய தொடங்கியுள்ளது. 

Parandur: களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!

சாராயம் பறிமுதல் 

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப் பொருள் தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரைச் சேர்ந்த 44 வயதான தமிழரசன், சோழம்பேட்டையை சேர்ந்த 23 வயதான சங்கர், முத்தூரை சேர்ந்த 28 வயதான சரண்ராஜ், நல்லூர் சேர்ந்த 48 வயதான பரமசிவம், அனந்தமங்கலத்தை சேர்ந்த 54 வயதான மணி, சீர்காழி ஆர்ப்பாக்கத்தை சேர்ந்த 60 வயதான ராஜகுமாரி, மயிலாடு துறை சேந்தங்குடி சேர்ந்த 46 வயதான சக்தி, தாண்டவன்குளத்தை சேர்ந்த 30 வயதான ரமேஷ் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து புதுச்சேரி மாநில மது மற்றும் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டன.

Sharon Raj Murder Case: ஜூஸில் விஷம்.. காதலனை கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை, கேரள நீதிமன்றம் அதிரடி


யார் அந்த டிஎஸ்பி? - மதுபான பார்களுக்கு தொடர்ந்து சீல் வைத்து அதிரடி காட்டும் டி.எஸ்.பி..!  

அனுமதி இன்றி செயல்பட்ட பார்களுக்கு சீல்

மேலும், டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்த மற்றும் அருகே உள்ள மதுக்கூடங்களிலும் இது தொடர்பாக காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், மாதானம் பெரியகொப்பியம், புத்தூர் மற்றும் புதுப்பட்டினம் கிராமங்களில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகில் உரிமம் பெறாமல் அரசுக்கு இழப்பீடு ஏற்படும் வண்ணம் மதுபானக்கூடம் நடத்தப்படுவது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த மூன்று மதுக்கூடங்களுக்கும், (பார்கள்) வட்டாட்சியர் ஜெயபாலன் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இதில், சம்பந்தப்பட்ட 42 வயதான பாபு விஜய், 50 வயதான கண்ணன், 44 வயதான சுந்தரி உள்ளிட்ட 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தப்பியோடிய மதுக்கூட உரிமையாளர்கள் முத்துராமன், சேகர் ஆகி யோரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

TANCET CEETA: டான்செட், சீட்டா தேர்வு; ஜன.24 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி? விவரம்!


யார் அந்த டிஎஸ்பி? - மதுபான பார்களுக்கு தொடர்ந்து சீல் வைத்து அதிரடி காட்டும் டி.எஸ்.பி..!  

டிஎஸ்பி எச்சரிக்கை

மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 48 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கிவரும் நிலையில், அவற்றில் 38 கடைகளில் மதுபானக் கூடங்கள் உரிமம் பெறாமல் இயங்கி வருவதாகவும், அவற்றை உடனடியாக மூடாவிட்டால் கைது மற்றும் சீல் நடவடிக்கை தொடரும் என மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் பொறுப்பேற்ற மூன்று மாதங்களில் இதுவரை 6 மதுபான பார்களுக்கு சீல் வைத்துள்ளதும், தொடர்ந்து சீல் வைப்பு நடவடிக்கை எடுத்து வருவதும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் காவல்துறையினர் அதிரடி: பஸ்பம் ஆன 740 கிலோ போதைப்பொருட்கள்...!
மயிலாடுதுறையில் காவல்துறையினர் அதிரடி: பஸ்பம் ஆன 740 கிலோ போதைப்பொருட்கள்...!
"போதைப்பாதை அழிவுப்பாதை; கல்விப்பாதையே உயர்வுப்பாதை" - நீடூர் இப்தார் விழாவில் மயிலாடுதுறை SP அட்வைஸ்..!
சீர்காழி வீதிகளில் அணிவகுத்த ராணுவம் வீரர்கள் ; அதிரடி பாதுகாப்பு ஏற்பாடுகளால் பரபரப்பு..!
சீர்காழி வீதிகளில் அணிவகுத்த ராணுவம் வீரர்கள் ; அதிரடி பாதுகாப்பு ஏற்பாடுகளால் பரபரப்பு..!
4 மூட்டை நெல் விற்றால் ஒரு பவுன் தங்கம் வாங்கலாம்.. ஆனால் இப்போ? அய்யாக்கண்ணு ஆதங்கம்..
4 மூட்டை நெல் விற்றால் ஒரு பவுன் தங்கம் வாங்கலாம்.. ஆனால் இப்போ? அய்யாக்கண்ணு ஆதங்கம்..
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN ELECTION DATE : தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
Caretaker Government : இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
Vijay in AIADMK alliance : ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
TNEB Salary Hike : அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Embed widget