மேலும் அறிய

Pongal 2024: நெகிழி மாலைகளுக்கு தடை விதிக்க வேண்டும் - நெட்டி மாலை தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் வைத்தது ஏன்?

பாரம்பரிய நெட்டி மாலைகளை தின்றால் மாடுகளுக்கு எந்த பாதிப்பும் வராது. இதனால் மண்ணுக்கும் பாதிப்பில்லை எனவே மாற்றம் மக்களிடம் வந்தால் மட்டுமே தங்களது மூன்றுமாத உழைப்பின் பலனை முழுதாய் பெறமுடியும்.

தை முதல் தேதி அன்று தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையும், அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல் ஆகிய பண்டிகைகள் ஆண்டு தோறும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் உழவர்களுக்கு உற்ற நண்பனாக விளங்கும் ஆடு, மாடுகளுக்கு உள்ளிட்ட கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதம் 2-ஆம் நாள் மாட்டுப் பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, நெட்டி மாலை, நெற்கதிர் மாலை ஆகியவற்றை அணிவித்து, பொங்கல் வைத்து வழிபடுவது தமிழர்கள் பண்பாடு.


Pongal 2024: நெகிழி மாலைகளுக்கு தடை விதிக்க வேண்டும் - நெட்டி மாலை தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் வைத்தது ஏன்?

நெட்டி மாலைகள்:

இவ்விழாவில் மாடுகளை அலங்கரிப்பதற்கான முக்கிய இடத்தை பிடிப்பது பாரம்பரிய நெட்டி மாலைகளே. அந்த நெட்டி மாலைகள் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த மூங்கில் தோட்டம் கிராமத்தில், மாட்டுப் பொங்கல் விழாவுக்காக, ஆடு, மாடுகள் அலங்கரிப்பதற்காக தயாரிக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நெட்டி மாலை செய்யும் தொழிலை சுமார் 200 குடும்பங்கள் மேல் குடிசைத் தொழிலாக செய்து வந்த நிலையில், தற்போது நெட்டி செடிகள் மயிலாடுதுறை பகுதியில் முற்றிலும் அழிந்ததனாலும், பிளாஸ்டிக் மாலைகளின் வரவாலும் இத்தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.


Pongal 2024: நெகிழி மாலைகளுக்கு தடை விதிக்க வேண்டும் - நெட்டி மாலை தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் வைத்தது ஏன்?

நெட்டி செடிகள்:

தற்போதைய நிலையில் இப்பகுதியில் 5 குடும்பத்தினர் மட்டுமே இத்தொழிலை செய்து வருகின்றனர். இதுகுறித்து இக்கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், தங்கள் குடும்பத்தில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே நெட்டி மாலை தயாரிப்பு பணியில் கடந்த மூன்று தலைமுறைகளாக ஈடுபட்டு வருவதாகவும், குடும்பத்தினர் அண்டை மாநிலமான பாண்டிச்சேரிக்கு சென்று கண்மாய் ஓரங்களில் இரண்டு நாட்கள் தங்கி அங்கு விளையக்கூடிய நெட்டி செடிகளை பறித்துவந்து, அதை நன்கு உலர வைத்து பின்பு பலவித வடிவங்களில் வடிவமைத்து அதற்கான வர்ண சாயத்தில் நனைத்து சூரிய ஒளியில் காய வைக்கிறனர்.


Pongal 2024: நெகிழி மாலைகளுக்கு தடை விதிக்க வேண்டும் - நெட்டி மாலை தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் வைத்தது ஏன்?

பின்னர் இந்த நெட்டி மாலைகளை கட்டுவதற்காக இயற்கை குணம் கொண்ட தாழம்பூ மரத்தில் இருந்து எடுக்கக்கூடிய இழை நார்களை கொண்டு நெட்டி மாலைகள் உருவாக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் அவர்கள் கூறுகையில் இதற்கான வர்ண சாயங்கள் கும்பகோணத்திலிருந்து வாங்கப்படுவதாகவும், இதற்கு ஆகக்கூடிய செலவு முன்பைவிட தற்போது அதிகரித்துள்ளதாகவும், ஒருநாள் விற்பனையை நம்பி குடும்பத்தினரோடு மூன்று மாதம் உழைத்து உருவான நெட்டிமாலைகள் தற்போது உள்ள சூழ்நிலையில் போதிய விற்பனை நடைபெறுமா? என கவலை தெரிவிக்கும் இவர்கள், இதற்கு முக்கிய காரணம் சந்தைகளில் விற்பனையாகும் நெகிழி மாலைகள்தான் என்கின்றனர்.


Pongal 2024: நெகிழி மாலைகளுக்கு தடை விதிக்க வேண்டும் - நெட்டி மாலை தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் வைத்தது ஏன்?

நெகிழி மாலைகளால் ஆபத்து:

கண்ணைக் கவரும் வண்ணங்களில் பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ள தடை செய்யப்பட்ட நெகிழி மற்றும் பிளாஸ்டிக் மாலைகள்தான் அதிகம் விற்பனையாவதால் வணிகர்கள் நெட்டி மாலைகளை கொள்முதல் செய்வது குறைந்துள்ளது என்றும், பொதுமக்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களையும் வடிவங்களையுமே பார்க்கிறார்களே தவிர, அதில் உள்ள ஆபத்தை உணர்வதில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் கால்நடைகள் நெகிழி மாலைகளை தின்று விட்டால் அவைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதேவேளை பாரம்பரிய நெட்டி மாலைகளை தின்றால் மாடுகளுக்கு எந்த பாதிப்பும் வராது.


Pongal 2024: நெகிழி மாலைகளுக்கு தடை விதிக்க வேண்டும் - நெட்டி மாலை தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் வைத்தது ஏன்?

இதனால் மண்ணுக்கும் பாதிப்பில்லை. எனவே மாற்றம் மக்களிடம் வந்தால் மட்டுமே தங்களது மூன்று மாத உழைப்பின் பலனை முழுதாய் பெறமுடியும் என்றும், இந்த நெகிழி மாலை விற்பனையை தமிழ்நாடு அரசு தடைசெய்ய வேண்டும் என உருக்கத்துடன் கோரிக்கை விடுத்தனர். உழவனின் தெய்வமான மாடுகளை மாட்டுப்பொங்கள் அன்று இதுபோன்ற நெட்டி மாலைகள் உருவாக்கி அவைகளை அலங்கரித்து பார்ப்பதே தமிழர் பண்டிகைக்கு நாம் செலுத்தும் மரியாதை ஆகும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
Tamilnadu Roundup: அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை, தவெக கிறிஸ்துமஸ் விழா, மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் - 10 மணி செய்திகள்
அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை, தவெக கிறிஸ்துமஸ் விழா, மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் - 10 மணி செய்திகள்
VBGRAMG Bill: நோ ப்ராப்ளம் - 125 நாள் திட்டம், அணுசக்தி மசோதாக்களுக்கு உடனே ஓகே சொன்ன குடியரசு தலைவர்
VBGRAMG Bill: நோ ப்ராப்ளம் - 125 நாள் திட்டம், அணுசக்தி மசோதாக்களுக்கு உடனே ஓகே சொன்ன குடியரசு தலைவர்
Top 10 News Headlines: உறுதிமொழி படிவம் கட்டாயம், ரூ.6 கோடி பரிசு, கால்நடைகள் ஏலம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: உறுதிமொழி படிவம் கட்டாயம், ரூ.6 கோடி பரிசு, கால்நடைகள் ஏலம் - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
Tamilnadu Roundup: அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை, தவெக கிறிஸ்துமஸ் விழா, மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் - 10 மணி செய்திகள்
அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை, தவெக கிறிஸ்துமஸ் விழா, மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் - 10 மணி செய்திகள்
VBGRAMG Bill: நோ ப்ராப்ளம் - 125 நாள் திட்டம், அணுசக்தி மசோதாக்களுக்கு உடனே ஓகே சொன்ன குடியரசு தலைவர்
VBGRAMG Bill: நோ ப்ராப்ளம் - 125 நாள் திட்டம், அணுசக்தி மசோதாக்களுக்கு உடனே ஓகே சொன்ன குடியரசு தலைவர்
Top 10 News Headlines: உறுதிமொழி படிவம் கட்டாயம், ரூ.6 கோடி பரிசு, கால்நடைகள் ஏலம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: உறுதிமொழி படிவம் கட்டாயம், ரூ.6 கோடி பரிசு, கால்நடைகள் ஏலம் - 11 மணி வரை இன்று
முருகா.. பழனி பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாமல் இருப்பது எப்படி? இத்தனை ஆரோக்கியமா?
முருகா.. பழனி பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாமல் இருப்பது எப்படி? இத்தனை ஆரோக்கியமா?
RSS ”சட்டம்லா ஒன்னும் வேண்டாம், இந்தியா இந்து நாடு தான்” - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகவன் பகவத் பேச்சு
RSS ”சட்டம்லா ஒன்னும் வேண்டாம், இந்தியா இந்து நாடு தான்” - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகவன் பகவத் பேச்சு
Cyber Crime: ஆன்லைன் சைபர் குற்றங்கள் - சிபிசிஐடி நடத்திய ஹேக்கத்தான் - யுக்தி 2.0வில் நடந்தது என்ன?
Cyber Crime: ஆன்லைன் சைபர் குற்றங்கள் - சிபிசிஐடி நடத்திய ஹேக்கத்தான் - யுக்தி 2.0வில் நடந்தது என்ன?
நாளை முதல் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு
நாளை முதல் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு
Embed widget