மேலும் அறிய

மயிலாடுதுறைக்கு கனமழை எச்சரிக்கை! மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை! அவசர எண்கள் இதோ!

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மயிலாடுதுறை: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கு திசையில் நகரும். அதே சமயம், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகி, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்டாவில் அபாயம்: மயிலாடுதுறைக்கு கனமழை எச்சரிக்கை

இந்த வானிலை மாற்றங்களின் தாக்கத்தால், டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகியவற்றில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மழை பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில், அனைத்துத் துறை அதிகாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மழை நீர் தேக்கம், வெள்ளப்பெருக்கு, மரம் விழுதல், மின் தடையை சரிசெய்தல் போன்ற அவசர காலப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக தங்க, வெள்ள நிவாரண முகாம்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

பொதுமக்களுக்கான அவசரத் தொடர்பு எண்கள் அறிவிப்பு

பேரிடர் தொடர்பான புகார்கள் மற்றும் உதவிகளைப் பொதுமக்கள் உடனடியாக தெரிவிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, அவற்றின் தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் மழை பாதிப்புகள், வெள்ளம், மரம் விழுதல், மின்சாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து பின்வரும் எண்களில் உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

* மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்கள்:

   * 1077

   * 04364-222588

   * 7092255255

* மயிலாடுதுறை நகராட்சி கட்டுப்பாட்டு அறை எண்: 04364-222555

 * சீர்காழி நகராட்சி கட்டுப்பாட்டு அறை எண்: 04364-240566

 * நீர்வளத்துறை கட்டுப்பாட்டு அறை எண்: 04364-222315, 225904

 * தீயணைப்புத்துறை எண்: 04364-222101

 * காவல்துறை எண்: 9442626792

 * மின்சார வாரியம் கட்டுப்பாட்டு அறை எண்: 04364-252218, 279301

 * சுகாதாரத்துறை எண்: 9443188904

 * நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டு அறை எண்: 04364-222277

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்லுமாறும், பாதுகாப்பான முறையில் இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், அரசின் அறிவிப்புகளையும், வானிலை நிலவரங்களையும் தொடர்ந்து கவனிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

இலவச சைக்கிள் முதல் லேப்டாப் வரை... கொட்டிக்கொடுக்கும் சலுகைகளுடன் அரசு ITI சேர்க்கை!
இலவச சைக்கிள் முதல் லேப்டாப் வரை... கொட்டிக்கொடுக்கும் சலுகைகளுடன் அரசு ITI சேர்க்கை!
"கொலை வழக்காக மாற்ற சட்டத்தில் இடமில்லை?" - சாத்தங்குடி வழக்கில் திருமாவளவன் உடைத்த உண்மை!
TET தேர்வு எழுத போறீங்களா? இந்த 4 பொருட்கள் இல்லைனா உள்ளே விடமாட்டாங்க பாத்துக்குங்க..!
TET தேர்வு எழுத போறீங்களா? இந்த 4 பொருட்கள் இல்லைனா உள்ளே விடமாட்டாங்க பாத்துக்குங்க..!
ரேஷன் கடைக்கு போக வேண்டாம்.. உங்க வீட்டுக்கே வரும் அரிசியும் சர்க்கரையும்! எப்போ தெரியுமா?
ரேஷன் கடைக்கு போக வேண்டாம்.. உங்க வீட்டுக்கே வரும் அரிசியும் சர்க்கரையும்! எப்போ தெரியுமா?

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Today : சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
TVK Alliance: வைகோவா? திருமாவா? தவெக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் யார்? விஜய் முடிவு என்ன?
TVK Alliance: வைகோவா? திருமாவா? தவெக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் யார்? விஜய் முடிவு என்ன?
இலவச சைக்கிள் முதல் லேப்டாப் வரை... கொட்டிக்கொடுக்கும் சலுகைகளுடன் அரசு ITI சேர்க்கை!
இலவச சைக்கிள் முதல் லேப்டாப் வரை... கொட்டிக்கொடுக்கும் சலுகைகளுடன் அரசு ITI சேர்க்கை!
கரூர் செல்லும் விஜய்; 41 பேர் குடும்பங்களுக்கு நேரில் அரசு வேலை வழங்கப்போகும் முதலமைச்சர்?
கரூர் செல்லும் விஜய்; 41 பேர் குடும்பங்களுக்கு நேரில் அரசு வேலை வழங்கப்போகும் முதலமைச்சர்?
TVK Vs DMK: சிறந்த வாஷிங் மெஷின் யார்? தவெக Vs திமுக இடையே கடும் போட்டி - அதிர்ச்சி தரும் பட்டியல்
சிறந்த வாஷிங் மெஷின் யார்? தவெக Vs திமுக இடையே கடும் போட்டி - அதிர்ச்சி தரும் பட்டியல்
இயற்கை கொடுத்த சர்ப்ரைஸ்! நாவல் பழங்களின் அதீத விளைச்சலுக்குப் பின்னுள்ள தாவரவியல் உண்மை!
இயற்கை கொடுத்த சர்ப்ரைஸ்! நாவல் பழங்களின் அதீத விளைச்சலுக்குப் பின்னுள்ள தாவரவியல் உண்மை!
Tata Car Offers: 1.2 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அறிவித்த டாடா - எந்த காருக்கு எவ்ளோ?
Tata Car Offers: 1.2 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அறிவித்த டாடா - எந்த காருக்கு எவ்ளோ?
NEET, JEE மாணவர் சேர்க்கை ”பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம்” அரசு பரிசீலனை
NEET, JEE மாணவர் சேர்க்கை ”பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம்” அரசு பரிசீலனை
Embed widget