மேலும் அறிய

மயிலாடுதுறையில் சோகம்: கூடுதல் பணிச்சுமையால் பறிபோன ஆசிரியரின் உயிர்...

மயிலாடுதுறை அருகே பணிச்சுமையால் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகாவைச் சேர்ந்த ஆதிதிராவிடர் நலத்துறையில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வந்த மகேந்திரன் என்பவர், தனக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்ட பணிச்சுமையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகேந்திரனின் மரணத்திற்கு நீதி கோரி அவரது உறவினர்கள், அவரது உடலை அடக்கம் செய்யமாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கூடுதல் பொறுப்பால் ஏற்பட்ட மன உளைச்சல்

குத்தாலம் தாலுகா, பூவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் தத்தங்குடியில் செயல்பட்டு வரும் துவக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவரது ஆசிரியர் பணிக்குக் கூடுதலாக, மணல்மேடு, சீர்காழி, ஆக்கூர் ஆகிய மூன்று இடங்களில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதிகளின் காப்பாளர் பொறுப்பும் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

மூன்று விடுதிகளின் காப்பாளர் பொறுப்பு மற்றும் ஆசிரியர் பணியை ஒரே நேரத்தில் கவனிப்பது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாக மகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் உயர் அதிகாரிகளுக்குக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

குடும்பப் பொறுப்புகள் மற்றும் உடல்நலப் பிரச்சனைகள்

மகேந்திரனுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. அவரது மனைவி ஆசிரியராகப் பணியாற்றி வரும் நிலையில், அவர் வயதான தனது தாய் தந்தையரைப் பராமரிக்கும் பொறுப்பில் இருந்துள்ளார். மேலும், தனக்கு நெஞ்சு வலி மற்றும் முதுகு தண்டுவடப் பிரச்சனைகள் உள்ளதாகவும், அதற்காகத் தான் சிகிச்சை எடுத்து வருவதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சூழலில், மூன்று விடுதிகளைப் பார்க்க இயலாது என்றும், காப்பாளர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளுக்கு அவர் கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.

விடுதி உணவுப் பணம் பிரச்சனை

கூடுதல் பணிச்சுமையைத் தாண்டி, விடுதி நிர்வாகத்திலும் அவருக்குப் பிரச்சனைகள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மூன்று விடுதிகளுக்கும் கடந்த ஐந்து மாதங்களாக மாணவர்களின் உணவுக்கான அரசாங்க ஒதுக்கீட்டுப் பணம் வந்து சேரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், விடுதி உணவுப் பிரச்சனையைச் சமாளிக்க மகேந்திரன் தனது சொந்த சம்பளப் பணத்தைச் செலவிட்டுள்ளார். இந்தப் பணத் தட்டுப்பாடு தொடர்பாக அவர் தனது வீட்டிலும் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளார்.

ஆசிரியர் பணியின் அழுத்தம், கூடுதல் காப்பாளர் பொறுப்பின் சுமை, குடும்பப் பொறுப்புகள் மற்றும் சம்பளப் பணத்தைச் செலவிட்டது தொடர்பான மன உளைச்சல் ஆகியவற்றின் காரணமாக மகேந்திரன் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மகேந்திரனின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது.

நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்

"கூடுதல் பணிச்சுமை மற்றும் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல் மன அழுத்தத்தை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மகேந்திரனின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். உரிய நீதி கிடைக்கும் வரை மகேந்திரனின் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர் மகேந்திரனின் தற்கொலை, அரசுத் துறைகளில் பணியாற்றுவோருக்கு அதிகப்படியான கூடுதல் பொறுப்புகளை ஒதுக்குவதால் ஏற்படும் மன மற்றும் உடல் ரீதியான தாக்கங்களை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு, மகேந்திரனின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்

இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில சட்ட உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS: ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ்.. சமரசம் பேசுவாரா தினகரன்? இரக்கம் காட்டுவாரா இபிஎஸ்?
OPS: ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ்.. சமரசம் பேசுவாரா தினகரன்? இரக்கம் காட்டுவாரா இபிஎஸ்?
PM Modi Speech: திமுகவுக்கு கவுன்ட் டவுன்.. ஊழலற்ற தமிழகம்! சூளுரைத்த பிரதமர் மோடி
PM Modi Speech: திமுகவுக்கு கவுன்ட் டவுன்.. ஊழலற்ற தமிழகம்! சூளுரைத்த பிரதமர் மோடி
Vijay IT Case: விஜய் மீதான ஐடி அபராத வழக்கு.. வருமான வரித்துறை கடும் எதிர்ப்பு... தீர்ப்பு எப்போது?
Vijay IT Case: விஜய் மீதான ஐடி அபராத வழக்கு.. வருமான வரித்துறை கடும் எதிர்ப்பு... தீர்ப்பு எப்போது?
EPS Speech: ’’பிரதமர் வந்ததும் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது: தீயசக்தி திமுகவை விரட்டுவோம்’’- ஈபிஎஸ் சூளுரை!!
EPS Speech: ’’பிரதமர் வந்ததும் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது: தீயசக்தி திமுகவை விரட்டுவோம்’’- ஈபிஎஸ் சூளுரை!!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”விசில் அடிக்க தெரியாதுபா?” பாவமாக சொன்ன விஜய் வைரலாகும் வீடியோ!
”விசில் போடு...” TVK கேட்ட அதே சின்னம் நிறைவேறிய விஜய்யின் ஆசை
அதெப்படி திமிங்கலம்..! கால்வாய்க்கு கொசுவலை சென்னை மாநகராட்சி NEW IDEA
கேரளாவை உலுக்கிய தற்கொலை தலைமறைவான ஷிம்ஜிதா தேடுதல் வேட்டையில் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS: ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ்.. சமரசம் பேசுவாரா தினகரன்? இரக்கம் காட்டுவாரா இபிஎஸ்?
OPS: ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ்.. சமரசம் பேசுவாரா தினகரன்? இரக்கம் காட்டுவாரா இபிஎஸ்?
PM Modi Speech: திமுகவுக்கு கவுன்ட் டவுன்.. ஊழலற்ற தமிழகம்! சூளுரைத்த பிரதமர் மோடி
PM Modi Speech: திமுகவுக்கு கவுன்ட் டவுன்.. ஊழலற்ற தமிழகம்! சூளுரைத்த பிரதமர் மோடி
Vijay IT Case: விஜய் மீதான ஐடி அபராத வழக்கு.. வருமான வரித்துறை கடும் எதிர்ப்பு... தீர்ப்பு எப்போது?
Vijay IT Case: விஜய் மீதான ஐடி அபராத வழக்கு.. வருமான வரித்துறை கடும் எதிர்ப்பு... தீர்ப்பு எப்போது?
EPS Speech: ’’பிரதமர் வந்ததும் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது: தீயசக்தி திமுகவை விரட்டுவோம்’’- ஈபிஎஸ் சூளுரை!!
EPS Speech: ’’பிரதமர் வந்ததும் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது: தீயசக்தி திமுகவை விரட்டுவோம்’’- ஈபிஎஸ் சூளுரை!!
TN 12th Hall Ticket: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு? அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு
TN 12th Hall Ticket: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு? அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு
Silk Smitha: சில்க் ஸ்மிதாவின் ரீல் கேரக்டருக்கும், ரியல் கேரக்டருக்கும் சம்பந்தமே இல்லை - நடிகர் மோகன் வேதனை
Silk Smitha: சில்க் ஸ்மிதாவின் ரீல் கேரக்டருக்கும், ரியல் கேரக்டருக்கும் சம்பந்தமே இல்லை - நடிகர் மோகன் வேதனை
TTV Dhinakaran:
TTV Dhinakaran: "சண்டை இருந்தது உண்மை.." இபிஎஸ்-ஐ முழு மனதுடன் ஏற்றுக்கொண்டோம் - மோடிக்கு தினகரன் உத்தரவாதம்
தொடரும் ஐஐடி மாணவர்கள் தற்கொலை: அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு- உயர்நிலைக் குழு அமைப்பு
தொடரும் ஐஐடி மாணவர்கள் தற்கொலை: அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு- உயர்நிலைக் குழு அமைப்பு
Embed widget