மேலும் அறிய

மருத்துவமனையில் மரணக் குழிகள்... உயிர் பயத்தில் நோயாளிகள்...

மயிலாடுதுறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நுழைவு வாயிலில் கழிவுநீர் கால்வாய் மூடிகள் உடைந்து அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மற்றும் முதியவர்கள் விபத்தில் சிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, தற்போது நிர்வாகச் சீர்கேடு மற்றும் தரமற்ற கட்டுமானப் புகார்களால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஏழை எளிய மக்களின் மருத்துவப் புகலிடமாகத் திகழும் இந்த வளாகத்தில், நோயாளிகளின் பாதுகாப்பிற்குப் பதில் பேராபத்தே காத்திருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மக்களின் நம்பிக்கை; மருத்துவமனையின் நிலை

மயிலாடுதுறை மாவட்டமாகத் தரம் உயர்த்தப்பட்ட பிறகு, இம்மாவட்டத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களுக்கு இந்தத் தலைமை மருத்துவமனைதான் முதன்மையான சிகிச்சை மையமாகும். நாள்தோறும் 2000-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாகவும் (OP), 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் இங்கு தங்கிச் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கால அவசர சிகிச்சை முதல் பிரசவம் வரை அனைத்திற்கும் மக்கள் இந்த மருத்துவமனையையே முழுமையாகச் சார்ந்துள்ளனர்.


மருத்துவமனையில் மரணக் குழிகள்... உயிர் பயத்தில் நோயாளிகள்...

பிரம்மாண்டத் திறப்புவிழாவும்.. தற்போதைய நிலையும்..

மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, அதிநவீன வசதிகளுடன் கூடிய ஏழு அடுக்கு புதிய பிரம்மாண்டக் கட்டிடம் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இதனைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார். "நவீன வசதிகள் இனி நம் ஊரிலேயே கிடைக்கும்" எனப் பெருமிதத்தில் இருந்த மக்களுக்கு, சில நாட்களிலேயே ஏமாற்றமே மிஞ்சியது.

பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தின் முகப்புப் பகுதியிலேயே தற்போது ஆபத்து பதுங்கியுள்ளது. மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்களின் சிமெண்ட் மூடிகள் அனைத்தும் உடைந்து உருக்குலைந்து காணப்படுகின்றன.


மருத்துவமனையில் மரணக் குழிகள்... உயிர் பயத்தில் நோயாளிகள்...

நோயாளிகளுக்குக் காத்திருக்கும் பேராபத்து

புதிய கட்டிடத்தின் நுழைவு வாயிலில் கழிவுநீர் கால்வாய் மூடிகள் உடைந்திருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சமூக ஆர்வலர்கள் அடுக்கடுக்கான புகார்களை முன்வைக்கின்றனர்.

*விபத்து அபாயம்: அவசர சிகிச்சைக்காக ஸ்ட்ரெச்சர்களிலும், சக்கர நாற்காலிகளிலும் அழைத்து வரப்படும் நோயாளிகள், இந்தக் குழிக்குள் விழுந்து அடிபடும் சூழல் உள்ளது.

*இரவு நேர இருள்: போதிய வெளிச்சம் இல்லாத இரவு நேரங்களில், மருத்துவமனைக்கு வரும் முதியவர்களும் குழந்தைகளும் இந்தக் கால்வாயை கவனிக்காமல் விழுந்து பெரும் காயங்களுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.

*சுகாதாரச் சீர்கேடு: மூடிகள் உடைந்திருப்பதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய்கள் பரவும் மையமாகவும் இது மாறி வருகிறது.


மருத்துவமனையில் மரணக் குழிகள்... உயிர் பயத்தில் நோயாளிகள்...

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் குமுறல்

இது குறித்து சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் கூறுகையில், "முதலமைச்சர் திறந்து வைத்த புதிய கட்டிடம் என்பதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்தோம். ஆனால், வாசலிலேயே கால்வாய் மூடி உடைந்திருப்பதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. கையில் குழந்தையை வைத்துக்கொண்டு நடப்பவர்கள் நிலைமை மிகவும் மோசம்," என ஆதங்கப்பட்டார்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:

"புதிதாகத் திறக்கப்பட்ட கட்டிடத்தில் ஒரு மாதத்திற்குள்ளேயே மூடிகள் உடைந்துள்ளன என்றால், கட்டுமானப் பணியின் தரம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பது புரிகிறது. இது அரசுப் பணத்தை வீணடிக்கும் செயல் மட்டுமல்ல, மக்களின் உயிரோடு விளையாடும் அலட்சியப் போக்காகும்."


மருத்துவமனையில் மரணக் குழிகள்... உயிர் பயத்தில் நோயாளிகள்...

நிர்வாகத்தின் மௌனம்; மக்களின் எதிர்பார்ப்பு

தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடத்தில் இத்தகைய விபத்து அபாயங்களை அப்படியே விட்டு வைத்திருப்பது அதிகாரிகளின் மெத்தனத்தையே காட்டுகிறது என்றவர்கள். கீழ்காணும் கோரிக்கைகளை அரசுக்கு வைத்துள்ளனர்.

* உடனடியாக உடைந்த கால்வாய் மூடிகளை அகற்றிவிட்டு, தரமான இரும்பு அல்லது வலுவடைந்த கான்கிரீட் மூடிகளைப் பொருத்த வேண்டும்.

* புதிய கட்டிடத்தின் ஒட்டுமொத்த கட்டுமானத் தரத்தையும் ஒரு தணிக்கைக்கு (Quality Audit) உட்படுத்த வேண்டும்.

* மருத்துவமனை வளாகத்தைச் சுற்றியுள்ள இதர சுகாதாரப் பணிகளையும் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர்.

ஒரு மாவட்டத்தின் தலைமை மருத்துவமனை என்பது அந்த மாவட்டத்தின் சுகாதாரக் குறியீடு. பிரம்மாண்டமான கட்டிடங்கள் மட்டுமே தரமான சிகிச்சையை உறுதி செய்துவிடாது; அங்குள்ள அடிப்படை வசதிகளும், பாதுகாப்பான சூழலுமே மக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்கும். மாவட்ட நிர்வாகமும், மக்கள் நல்வாழ்வுத் துறையும் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு இந்த "அவலத்தை" நீக்க வேண்டும் என்பதே மயிலாடுதுறை மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மருத்துவமனையில் மரணக் குழிகள்... உயிர் பயத்தில் நோயாளிகள்...
மருத்துவமனையில் மரணக் குழிகள்... உயிர் பயத்தில் நோயாளிகள்...
நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறும் சீர்காழி அரசு மருத்துவமனை: அதிருப்தியில் மக்கள்..!
நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறும் சீர்காழி அரசு மருத்துவமனை: அதிருப்தியில் மக்கள்..!
'செய்வினையை எடுக்கணும்' பெண்ணிடம் நூதன மோசடி - 20 வயது இளைஞர் கைது...!
'செய்வினையை எடுக்கணும்' பெண்ணிடம் நூதன மோசடி - 20 வயது இளைஞர் கைது...!
மயிலாடுதுறையில் பரபரப்பு...மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிப்பு...!
மயிலாடுதுறையில் பரபரப்பு...மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிப்பு...!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Hyundai Verna Facelift Vs Old Verna: அட்டகாசமான ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டுக்கும் பழைய வெர்னாவுக்கு என்ன வித்தியாசம் தெரியுமா.?
அட்டகாசமான ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டுக்கும் பழைய வெர்னாவுக்கு என்ன வித்தியாசம் தெரியுமா.?
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
Embed widget