மேலும் அறிய

மாப்படுகை கூட்டுறவு வங்கியில் ₹1 கோடி மோசடி? 75 சவரன் நகைகள் மாயம்: ஊழியரின் ஒப்புதல் கடிதத்தால் பரபரப்பு!

மயிலாடுதுறை அருகே மாப்படுகை கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த தங்க நகைகளை வைத்து ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை கிராமத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில், பொதுமக்கள் அடகு வைத்த தங்க நகைகள் மற்றும் சேமிப்புப் பணம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. நகை மற்றும் பணத்தை இழந்த பொதுமக்கள் மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதில், நகைகளைத் திரும்பத் தருவதாக வங்கி ஊழியர் ஒருவரால் எழுதப்பட்ட ஒப்புதல் கடிதம் வெளியாகி, இந்தப் பெரும் மோசடியின் தீவிரத்தை வெளிப்படுத்தியுள்ளது.

கூட்டுறவு வங்கியில் துணிகர மோசடி

மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி, அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசிய நிதித் தேவைகளுக்காகச் செயல்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டக் கூட்டுறவுத் துறை இணை இயக்குநரின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த வங்கியில், 600-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த வங்கியில் கிளர்க்காகப் பணிபுரியும் நித்யா என்ற பெண் ஊழியர், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அடகு வைத்திருந்த தங்க நகைகளை, ரகசியமாக வெளியில் வேறு இடங்களில் மறு அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வங்கியில் செயலாளராக அன்பரசன் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார்.

விவசாயிகள் கூட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்த மோசடி

சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், இந்த நகை மோசடி குறித்து விவசாயிகள் புகார் மனு அளித்திருந்தனர். அதன்பேரில் கூட்டுறவுத் துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், ஊழியர்களின் முறைகேடுகள் உறுதியானதையடுத்து, வங்கியில் பணிபுரியும் கிளர்க்குகள் நித்யா மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது சட்டப்பிரிவு 81-ன் கீழ் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது, துறை ரீதியான விசாரணையுடன், காவல்துறை பொருளாதாரக் குற்றப்பிரிவு மூலமாகவும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எஸ்.பி. அலுவலகத்தில் குவியும் புகார்கள்

மோசடியால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், நீதியைக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து வருகின்றனர். நேற்று  நடைபெற்ற விசாரணையில், நகைகளை அடகு வைத்து ஏமாந்த 17 பேர் நேரில் ஆஜராகித் தங்களது விளக்கங்களை அளித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களின் புகார்கள்

 * அலைக்கழிப்பு: நகைகளை மீட்கச் செல்லும்போது, பாதி நகைகளை மட்டுமே ஊழியர் நித்யா கொடுத்துள்ளார். பல மாதங்களாக மீதியுள்ள நகைகளைத் தருவதாகக் கூறி அலைக்கழித்ததாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

 * சேமிப்புப் பணமும் மாயம்: கூலி வேலை செய்து கிடைத்த பணத்தை வங்கியில் சேமித்து வைத்திருந்தவர்களுக்கு, அவர்களது பணம் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டு விட்டதாகத் தெரியவந்துள்ளது. ஒரு மூதாட்டி ரூ. 50 ஆயிரம் சேமித்திருந்த நிலையில், தற்போது கணக்கில் வெறும் ரூ. 10 ஆயிரம் மட்டுமே இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவரும் தனது புகாரைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளார்.

*போலி கடன் மற்றும் முறைகேடுகள்: மேலும், போலியாக விவசாயக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சிலர் கடன் வாங்கி முறையாகத் திருப்பிச் செலுத்திய பிறகும், அந்தக் கடன் தொகை வங்கியில் கட்டப்படாமல் மோசடி நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 * சேதம் அளவு: இதுவரை சுமார் 75 சவரனுக்கு மேல் அடகு வைத்த நகைகள் காணவில்லை என உறுதியான புகார்கள் எழுந்துள்ளன. மோசடியின் மொத்த மதிப்பு கோடிக்கணக்கான ரூபாய் இருக்கும் எனப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஊழியரின் ஒப்புதல் கடிதத்தால் பரபரப்பு

இந்த மோசடி புகார்களுக்கு மத்தியில், ஊழியர் நித்யா மோசடி செய்ததை மறைமுகமாக ஒப்புக்கொண்டு எழுதிய துண்டுச் சீட்டு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜேந்திரன் என்ற பாதிக்கப்பட்டவருக்கு, 3 சவரன் தங்க நகையை 'ஒரு சில நாட்களில் திருப்பி அளிப்பதாக', நித்யா தனது கையெழுத்து மற்றும் அலுவலக முத்திரையுடன் பேப்பரில் எழுதிக் கொடுத்துள்ளார். இந்த அத்தாட்சி, வங்கியின் உள் விவகாரத்தில் ஊழியர்கள் நேரடியாக மோசடியில் ஈடுபட்டதற்கான வலுவான ஆதாரமாகக் கருதப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த கோரிக்கை, பொருளாதாரக் குற்றப் பிரிவு விசாரணையை விரைந்து முடித்து, நகை மற்றும் பணத்தை இழந்தவர்களுக்கு உடனடியாகப் பணத்தை அல்லது நகைகளைப் பெற்றுத் தர வேண்டும் என்பதே ஆகும். இந்த மோசடி, கூட்டுறவு வங்கிகளின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
Tamilnadu Roundup: அதிமுகவிடம் பாஜக டிமாண்ட், பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை, வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை - 10 மணி செய்திகள்
அதிமுகவிடம் பாஜக டிமாண்ட், பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை, வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை - 10 மணி செய்திகள்
Admk Bjp Alliance: 45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
Tamilnadu Roundup: அதிமுகவிடம் பாஜக டிமாண்ட், பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை, வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை - 10 மணி செய்திகள்
அதிமுகவிடம் பாஜக டிமாண்ட், பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை, வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை - 10 மணி செய்திகள்
Admk Bjp Alliance: 45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Embed widget