மேலும் அறிய

மழை நிவாரணம் வழங்குவதில் முறைகேடு - திருவாரூரில் விவசாயிகள் சாலை மறியல்

நெல் பயிர் மழையால் பாதிக்கப்படாத விவசாயிகளுக்கு நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டதாக கூறி போலியான சான்று வழங்கி வருவதாக புகார்

திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அறுவடை பணிகள் தீவிரமாக திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வந்த நேரத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இடைவிடாமல் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் பயிர்கள் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் திருவாரூர் மாவட்டத்தில் முழுமையாக பாதிக்கப்பட்டது. அதனை அடுத்து விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் வேளாண்துறை அதிகாரிகள் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்து வந்தனர்.

மழை நிவாரணம் வழங்குவதில் முறைகேடு - திருவாரூரில் விவசாயிகள் சாலை மறியல்
 
அதனை அடுத்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் குழு அமைத்து டெல்டா மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். மேலும் தமிழக முதல்வர் டெல்டா மாவட்டங்களில் நேரடியாக வந்து கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனை அடுத்து அமைச்சர்கள் குழு டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து அதன் அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்திருந்தது. அதனை அடுத்து தமிழக முதல்வர் குறுவை நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்டிருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தது. அதனை அடுத்து டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து வேளாண் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு பணி நடத்தி வருகின்றனர்.

மழை நிவாரணம் வழங்குவதில் முறைகேடு - திருவாரூரில் விவசாயிகள் சாலை மறியல்
 
இந்த நிலையில் திருவாரூர் அருகே பின்னவாசல் கிராமத்தில் இந்த ஆண்டு சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் கலியமூர்த்தி நெல் பயிர் மழையால் பாதிக்கப்படாத விவசாயிகளுக்கு நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டதாக கூறி போலியான சான்று வழங்கி வருவதாக அந்தப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டி இன்று திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் பின்னவாசல் கடைவீதியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாதிக்கப்படாத விவசாயிகளுக்கு போலியான சான்று வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த சான்றிதழை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் வட்டாட்சியர் மற்றும் திருவாரூர் மாவட்ட வேளாண்மை துறை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்ஷிமா மற்றும் காவல்துறையினர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் போலியாக கொடுக்கப்பட்ட சான்றிதழ்கள் உடனடியாக ரத்து செய்யப்படும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. விவசாயிகளின் போராட்டத்தால் திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

காரைக்குடி மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: ஜி-பே மூலம் ரூ.15 லட்சம் பரிமாற்றம் அம்பலம்!
காரைக்குடி மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: ஜி-பே மூலம் ரூ.15 லட்சம் பரிமாற்றம் அம்பலம்!
காதலிக்கு ஐபோன் - தங்கச் சங்கிலி பறிப்பு !! வரிக்குதிரை படத்தால் சிக்கிய நபர்
காதலிக்கு ஐபோன் - தங்கச் சங்கிலி பறிப்பு !! வரிக்குதிரை படத்தால் சிக்கிய நபர்
கால்நடைகளால் விபத்து: உரிமையாளர்களுக்கு உயர் நீதிமன்றம் கடும் உத்தரவு!
கால்நடைகளால் விபத்து: உரிமையாளர்களுக்கு உயர் நீதிமன்றம் கடும் உத்தரவு!
திருப்பரங்குன்றம் மலை: ப்ரைவி கவுன்சில் உத்தரவுக்குப் பிந்தைய விரிவாக்கப் பணிகள் குறித்து அறிக்கை கோரிய உயர் நீதிமன்றம்!
திருப்பரங்குன்றம் மலை: ப்ரைவி கவுன்சில் உத்தரவுக்குப் பிந்தைய விரிவாக்கப் பணிகள் குறித்து அறிக்கை கோரிய உயர் நீதிமன்றம்!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
How Car Airbags Work: இவ்ளோ நாள் கார் ஓட்டுறீங்களே, ஏர்பேக்குல என்ன இருக்கு, அது உயிர எப்படி காப்பாத்துதுன்னு தெரியுமா.?
இவ்ளோ நாள் கார் ஓட்டுறீங்களே, ஏர்பேக்குல என்ன இருக்கு, அது உயிர எப்படி காப்பாத்துதுன்னு தெரியுமா.?
EPFO Auto Settlement: PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
Revolt RVX: ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
Embed widget