மேலும் அறிய

அரிட்டாபட்டி எனும் அதிசியத்தை ஏன் பாதுகாக்க வேண்டும் - தொல்லியல் அறிஞர்கள் அறிக்கை !

Arittapatti : என்றென்றைக்கும் பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய வரலாற்று ஆதாரங்கள் அழிந்துபடும் வகையிலும் செயல்படுத்தப்படும் முயற்சியை ஆய்வாளர்களாகிய நாங்கள் கண்டிக்கிறோம்.

அரிட்டாபட்டி பகுதியில் அதன் சுற்று வட்டார கிராமங்களில் டங்ஸ்டன் இழை சுரங்கத்தை அனுமதிக்க கூடாது என்று கிராம மக்கள் போராடி வருகின்றனர்.

அரிட்டாபட்டி கிராமம்

"மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அமைந்துள்ள அரிட்டாபட்டி எனும் சிற்றூர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச் சுவடுகளைக் கொண்டதாகும். இங்குள்ள கழிஞ்சமலை என்னும் மலையில் சுமார் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரண்டு தமிழி (Tamil Brahmi)கல்வெட்டுகள் உள்ளன. இது ஒரு தொன்மையான சமணத் தலமானதும் கூட. கி.பி 7-8ஆம்நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டியர் காலத்தில் குடைவிக்கப்ப்படு ஒரு குடைவரை (சிவன்)கோயிலும் உள்ளது.
 
 
இங்கு தமிழ் நாட்டில் மிக அருகில் நிலையில் கிடைக்கும் லகுலீசர் சிற்பம் ஒன்றும் குடைவிக்கப்பட்டுள்ளது. முன்னர்கூறிய தமிழி கல்வெட்டுகள் காணப்படும் இடத்தின் அருகிலேயே சுமார் 10 அடி தூரத்தில் மலையில் ஒரு சமணத்தீர்த்தங்கரர் சிற்பம் வெட்டப்பட்டு அதன் கீழ் அதனை வெட்டு வித்தவர் பெயரும் ஊரின் பழமையான பெயரும் காணப்படுகிறது. இக்கல்வெட்டு பழமையான வட்டெழுத்தில் உள்ளது.

இராணுவ நடவடிக்கை போன்ற செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன:

'திருப்பிணையன் மலை பொற்கோட்டுக் காரணத்தார் பேரால் அச்சணந்தி செய்வித்தத் திருமேனி பாதிரிக் குடியார் ரட்சை என்பது அந்தக் கல்வெட்டின் வாசகம் ஆகும். இக்கல்வெட்டின் படி இவ்வூரின் பெயர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாதிரிக்குடி என அழைக்கப்பட்டது என்பதும், இம்மலையின் பெயர் திருப்பிணையன் மலை என்றும் இச்சிலையைச் செய்ய வைத்தவர் அச்சணந்தி என்ற சமண துறவி என்பதும் அறியப்படுகிறது.
 
இத்துடன் இவ்வூரில் கி.பி 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோயில் ஒன்றும் இருந்து அழிந்துள்ளது. இங்குள்ள கட்டுமான கற்களில் கி.பி 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டு மூலம் இவ்வூர் அக்காலத்தில் ஐநூற்றுப் பெருந்தெரு என்ற பெயரில் ஒரு வணிகத் தலமாக இருந்தது வெளிப்படுகிறது. இதன் பின்னர் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமலை நாயக்கர் காலத்தைச் சேர்ந்த ஒரு செப்பேடும் இருந்துள்ளது. இதில் இவ்வூரின் காவல் முக்கியத்துவம் இராணுவ நடவடிக்கை போன்ற செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 

வன்மையாக கண்டிக்கிறோம்:

இத்தகைய சிறப்பு வாய்ந்த அரிட்டாபட்டிக்கு சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே மாங்குளம் என்னும் ஊரின் மலைக்குகையில் ஆறு தமிழி கல்வெட்டுகள் வெட்டப்பட்டமை 1882 ஆண்டிலேயே ராபர்ட் சீவல் என்னும் ஆங்கிலேயே அறிஞரால் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை ஆண்ட நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சங்க இலக்கியங்களில் பேசப்படும் மன்னர் இவர் ஆவார். மேலும் இக்கல்வெட்டுகளில் நந்தஸ்ரீ குவன் என்னும் சமண துறவி பெயரும் வெள்ளறை நிகமம் என்னும் வணிக நிறுவனத்தின் பெயரும் இடம் பெற்றது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இம்மலையின் சுற்று வளாகத்தில் பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் நிலவுகிறது. இத்தகைய வரலாற்று முக்கியத்துவமும், பாரம்பரிய பெருமையும் நிறைந்த அரிட்டாபட்டி என்னும் இவ்வூரில் மத்திய அரசு டங்ஸ்டன் இழை சுரங்கம் அமைக்கும் முயற்சியை தொல்லியல் ஆய்வாளர்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

டங்ஸ்டன் இழை சுரங்கத்தை அனுமதிக்க கூடாது:

ஒருபுறம் வரலாற்று சின்னங்களைப் பாதுகாப்பதற்குப் பல கோடிகளை செலவழிக்கும் மத்திய அரசு தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் வளர்ச்சி என்ற முனைப்பில் இத்தகைய வரலாற்றுச் சின்னங்களுக்கு ஊறு நேரும் வகையிலும், என்றென்றைக்கும் பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய வரலாற்று ஆதாரங்கள் அழிந்துபடும் வகையிலும் செயல்படுத்தப்படும் முயற்சியை ஆய்வாளர்களாகிய நாங்கள் கண்டிக்கிறோம். தொல்லியல் எனவே, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அரிட்டாபட்டி பகுதியில் அதன் சுற்று வட்டார கிராமங்களில் டங்ஸ்டன் இழை சுரங்கத்தை அனுமதிக்க கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறோம்”. என்று  தொல்லியல் அறிஞர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனை சாந்தலிங்கம் ஒருங்கிணைத்துள்ளார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Iran Blames Israel: “அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நாங்க நிறுத்தறோம்“ - போர் குறித்து ஈரான் கூறியது என்ன தெரியுமா.?
“அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நாங்க நிறுத்தறோம்“ - போர் குறித்து ஈரான் கூறியது என்ன தெரியுமா.?
Trump Warns Iran: “அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
“அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
Anbumani Apology to Ramadoss: “என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக செய்கிறேன்“-சரண்டரான அன்புமணி
“என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக செய்கிறேன்“-சரண்டரான அன்புமணி
Ahmedabad Flight Crash: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்திருக்கும்? யாருடைய தவறு? புட்டு புட்டு வைத்த விமானி அசோகன்
Ahmedabad Flight Crash: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்திருக்கும்? யாருடைய தவறு? புட்டு புட்டு வைத்த விமானி அசோகன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்MDMK Join ADMK BJP Alliance | பாஜக கூட்டணியில் மதிமுக?அதிர்ச்சியில் திமுக! எல்.முருகன் ட்விஸ்ட்”PHOTO-க்கு போஸ் மட்டும் தான்”ஆய்வுக்கு வந்த MLA அடித்து விரட்டிய பொதுமக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Blames Israel: “அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நாங்க நிறுத்தறோம்“ - போர் குறித்து ஈரான் கூறியது என்ன தெரியுமா.?
“அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நாங்க நிறுத்தறோம்“ - போர் குறித்து ஈரான் கூறியது என்ன தெரியுமா.?
Trump Warns Iran: “அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
“அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
Anbumani Apology to Ramadoss: “என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக செய்கிறேன்“-சரண்டரான அன்புமணி
“என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக செய்கிறேன்“-சரண்டரான அன்புமணி
Ahmedabad Flight Crash: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்திருக்கும்? யாருடைய தவறு? புட்டு புட்டு வைத்த விமானி அசோகன்
Ahmedabad Flight Crash: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்திருக்கும்? யாருடைய தவறு? புட்டு புட்டு வைத்த விமானி அசோகன்
British Fighter Jet in Kerala: கேரளாவுக்கு அவசரமாக பறந்து வந்த இங்கிலாந்து போர் விமானம் - ஓ.. இதுதான் விஷயமா.?
கேரளாவுக்கு அவசரமாக பறந்து வந்த இங்கிலாந்து போர் விமானம் - ஓ.. இதுதான் விஷயமா.?
பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
என் ஃபோட்டோவை வைத்து அசிங்கம்..அம்மா பார்த்தால்...பாடகி ஜோனிதா காந்தி அதிர்ச்சி
என் ஃபோட்டோவை வைத்து அசிங்கம்..அம்மா பார்த்தால்...பாடகி ஜோனிதா காந்தி அதிர்ச்சி
Embed widget