மேலும் அறிய

வாழத்தான் வழியில்லை! செத்தாலும் கூட இடமில்லையா? கரூர் அருகே நவீன தீண்டாமை..

இரண்டு சமுதாய மக்களுக்கு தனியாக அமைத்து தரப்பட்டுள்ள சுடுகாட்டில் குறிப்பிட்ட சமுதாய மக்களின் உறவினர்கள் இறந்தால் அவர்களது உடலை அடக்கம் செய்யவிடாமல் நவீன தீண்டாமையை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கரூர் அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்ய மார்பளவு தண்ணீரில் சடலத்தை தோள்களில் தூக்கிக்கொண்டு, பொதுமக்கள் வாய்க்காலை கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் - சுடுகாடு அமைத்து தர வேண்டுமென ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர்.

 

வாழத்தான் வழியில்லை! செத்தாலும் கூட இடமில்லையா? கரூர் அருகே நவீன தீண்டாமை..

 

கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா பள்ளபாளையம் கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு நான்கு தலைமுறையாக இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு ஆறடி நிலம் கூட இல்லாததால், அங்கு செல்லும் ராஜாவாய்க்கால் கரையோரம் புதைத்து வருவதாகவும், சுடுகாடு அமைத்து தர வேண்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: Karur : சட்டவிரோத குடியேற்றம்! சிக்க வைத்த பாஸ்போர்ட்.. கரூரில் மூவர் கைது

மேலும், அதே ஊரை சேர்ந்த இரண்டு சமுதாய மக்களுக்கு தனியாக அரசு சார்பில் சுடுகாடு அமைத்து தரப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட சமுதாய மக்களின் உறவினர்கள் இறந்தால் அவர்களது உடலை அடக்கம் செய்யவிடாமல் நவீன தீண்டாமையை கடைப்பிடிப்பதாகவும் கூறுகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், பள்ளபாளையம் கிராமத்தில் நான்கு தலைமுறையாக வசித்து வரும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு, அரசும் அரசு அதிகாரிகளும், அங்கு வசிக்கும் மற்ற சமூக மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் அடிப்படை வசதிகளை வழங்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருவதால், இறந்தவர்களின் சடலங்களை புதைப்பதற்கு மார்பளவு தண்ணீரில் சுமந்து சென்று அங்கு செல்லும் ராஜாவாய்க்கால் கரையில், புதைக்கும் நிலை நீடித்து வருகிறது. 



அதனால் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கு சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். 40 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் இந்த பிரச்சனையை முடித்து தரவில்லை எனில் அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

 


வாழத்தான் வழியில்லை! செத்தாலும் கூட இடமில்லையா? கரூர் அருகே நவீன தீண்டாமை..

இந்த நிலையில், பள்ளபாளையம் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தவர் உடலை அடக்கம் செய்வதற்காக பொதுமக்கள் மார்பளவு தண்ணீரில் சடலத்தை  தங்கள் தோள்களில் தூக்கிக்கொண்டு,  ராஜவாய்க்காலை கடந்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
ABP Premium

வீடியோ

Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Silver Rate: வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
New Kia Seltos Vs Honda Elevate: புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
Embed widget