மேலும் அறிய

சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணை எப்போது முடியும் ? - மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 17 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் சாத்தான்குளம் தந்தை- ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ்   உயிரிழந்த வழக்கு விசாரணையை கீழமை நீதிமன்றத்தில் விரைவாக நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும்" என சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்வராணி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்  மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் சாத்தான்குளம் தந்தை- ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு விசாரணையை கீழமை நீதிமன்றத்தில்  ஆறு மாதத்திற்குள்  விசாரணையை முடிக்க கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
 

சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணை எப்போது முடியும் ? - மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி
 
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால்,  6 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க இயலவில்லை. எனவே,  மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் சாத்தான்குளம் தந்தை- ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ்   உயிரிழந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க மேலும் கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது .
 
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி முரளிசங்கர், சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு குறித்த வழக்கில், தற்போது வரை விசாரணை எந்த நிலையில் உள்ளது? விசாரணையை முழுவதும் நடத்தி முடிக்க எவ்வளவு காலம் ஆகும்? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இது குறித்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

 
நிதிநிறுவன மோசடி வழக்கு - காவல்துறையில் விளக்கம் கேட்டு பதில் தர அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு
 
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் பீரங்கிமேடு பகுதியைச்சேர்ந்த கரிகாலன்,   உயர்நீதிமன்ற மதுரை கிளையில்தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, பாதுகாப்புத்துறையின்கீழ் உள்ள திருச்சி கன அலாய் ஊடுருவல் திட்டத்தில் பணியாற்றி கடந்த 2019 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றேன். ஓய்வு பலனாக 30 லட்சம் வழங்கப்பட்டது. இந்த தொகையைக்கொண்டு எனது 2 மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டு இருந்தேன். அந்த சமயத்தில் திருச்சி தில்லைநகரில் ஆயுசுநூறு என்ற நிதி நிறுவனத்தில் குறுகிய கால முதலீட்டுத்திட்டங்கள் இருப்பதாக அறிந்து, அதன் நிர்வாக இயக்குனர் சிவபாலன் மற்றும் சிலரை சந்தித்தேன். மளிகைப்பொருட்கள் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டிற்கு உரிய பொருட்களை விற்கும் சூப்பர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் விற்பனைக்கும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். 
 
இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் பங்குத்தொகை, ஊக்கத்தொகையை மாதந்தோறும் அளிப்பதாக கூறினர். அவர்களின் கவர்ச்சிகரமான பேச்சை நம்பி என் பெயரிலும், எனது மனைவி பெயரிலுமாக ரூ.27 லட்சத்து 50 ஆயிரத்தை முதலீடு செய்தேன். நான் மட்டுமல்லாமல் எனது மனைவியுடன் பணியாற்றும் சக ஆசிரியைகள் உள்ளிட்டவர்களும் இந்த நிதிநிறுவன திட்டங்களில் பல லட்சங்களை முதலீடு செய்தனர். 
 
திடீரென ஊரடங்கை காரணம் காட்டி நிதிநிறுவனத்தை மூடிவிட்டனர். வட்டியோ, ஊக்கத்தொகையோ எதையும் எங்களுக்கு தரவில்லை. இந்த மோசடி குறித்து பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே நிதிநிறுவனம் நடத்தி எங்கள் பணத்தை மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அந்த பணத்தை மீட்டு ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரரின் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட போலீசில் விளக்கம் கேட்டு தெரிவிக்கும்படி அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை வருகிற 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சிவகங்கை: கோடை வெயில் கொடுமை.. பொதுமக்கள், முதியோர், கால்நடைகள் கவனமாக இருக்க எச்சரிக்கை!
சிவகங்கை: கோடை வெயில் கொடுமை.. பொதுமக்கள், முதியோர், கால்நடைகள் கவனமாக இருக்க எச்சரிக்கை!
எஸ்.வி.சேகர் பரபர பேச்சு: விஜய், பாஜக, அதிமுக மீது குற்றச்சாட்டு! திமுக ஆட்சி அமைக்குமா?
எஸ்.வி.சேகர் பரபர பேச்சு: விஜய், பாஜக, அதிமுக மீது குற்றச்சாட்டு! திமுக ஆட்சி அமைக்குமா?
போடி தொகுதியில் போட்டியிடுவேன்: ஓபிஎஸ் பரபரப்பு! அதிமுக கூட்டணி குழப்பம், திமுக வெற்றி வாய்ப்பு!
போடி தொகுதியில் போட்டியிடுவேன்: ஓபிஎஸ் பரபரப்பு! அதிமுக கூட்டணி குழப்பம், திமுக வெற்றி வாய்ப்பு!
காழ்ப்புணர்ச்சி காரணமா? த.வெ.க நிர்வாகி மீது பொய் குற்றச்சாட்டு: பரபரப்பை கிளப்பும் இரு தரப்பு... உண்மை என்ன?
காழ்ப்புணர்ச்சி காரணமா? த.வெ.க நிர்வாகி மீது பொய் குற்றச்சாட்டு: பரபரப்பை கிளப்பும் இரு தரப்பு... உண்மை என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுகவின் முக்கிய புள்ளி தவெகவில்? பரபரப்பில் தொண்டர்கள் - பின்னணி என்ன?
அதிமுகவின் முக்கிய புள்ளி தவெகவில்? பரபரப்பில் தொண்டர்கள் - பின்னணி என்ன?
ABP EXCLUSIVE:
ABP EXCLUSIVE: "விபச்சாரிதான்.. மன்னிப்பு கேட்க முடியாது" தவெக ஆதரவு பெண்களை விமர்சித்த பொன்ராஜ் திமிர் பேச்சு!
Iran Hormuz: 6 நாடுகள் மட்டும் ஹார்மஸ் வழியாக பயணிக்கலாம், இந்தியா செய்தது என்ன? - ஈரான் அறிவிப்பு
Iran Hormuz: 6 நாடுகள் மட்டும் ஹார்மஸ் வழியாக பயணிக்கலாம், இந்தியா செய்தது என்ன? - ஈரான் அறிவிப்பு
’’காங்கிரஸால் கூட்டணியின் வெற்றி வாய்ப்பே கேள்விக்குறி’’ அதிரவைத்த திருமா பேச்சு- நடந்தது என்ன?
’’காங்கிரஸால் கூட்டணியின் வெற்றி வாய்ப்பே கேள்விக்குறி’’ அதிரவைத்த திருமா பேச்சு- நடந்தது என்ன?
Train Middle Berth sleeping time: ரயிலில் மிடில் பெர்த்தில் இனி இந்த நேரத்தில் மட்டுமே தூங்க முடியும்.! பயணிகளுக்கு புதிய விதிமுறை வெளியீடு
ரயிலில் மிடில் பெர்த்தில் இனி இந்த நேரத்தில் மட்டுமே தூங்க முடியும்.! பயணிகளுக்கு புதிய விதிமுறை வெளியீடு
பெரம்பூரில் நாளை மறுநாள் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்; ஒரேநாளில் 5 தொகுதிகளில் பரப்புரை- இதோ லிஸ்ட்!
பெரம்பூரில் நாளை மறுநாள் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்; ஒரேநாளில் 5 தொகுதிகளில் பரப்புரை- இதோ லிஸ்ட்!
1- 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை
1- 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை
TN Election 2026: இன்றே கடைசி..! தேர்தலில் வாக்களிக்க உடனே விண்ணப்பியுங்கள் - வாக்காளர் அட்டை பெற டிப்ஸ்
TN Election 2026: இன்றே கடைசி..! தேர்தலில் வாக்களிக்க உடனே விண்ணப்பியுங்கள் - வாக்காளர் அட்டை பெற டிப்ஸ்
Embed widget