விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!
வருவாய்த்துறை கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை அருகிலே செயல்படும் கல் குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய. கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு.
கல் குவாரியின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் ஏ.லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு..," தங்கள் கிராமத்தில் சுமார் 800 குடும்பங்கள் வசதித்து வருகின்றனர். எங்கள் கிராமத்தில் செயல்பட்டு வரும் குவாரியால் அமைந்துள்ள இடத்தில் இருந்து 40 மீட்டருக்குள்ளேயே கிராம மக்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக விளங்கும் நீர்நிலை அமைந்துள்ளது. விதிமுறைகளின்படி நீர்நிலைகளில் இருந்து 50 மீட்டர் தொலைவிற்குள் குவாரி அமைக்கக் கூடாது என்ற விதியை மீறி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குவாரி செயல்பாடுகளால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, விவசாயம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. குவாரியின் அருகில் பட்டாசு ஆலை அமைந்துள்ளதால், வெடிபொருட்களைப் பயன்படுத்தி பாறைகளை வெடி வைக்கும் போது பெரிய அளவிலான விபத்துகள் ஏற்பட வாய்புள்ளது. மேலும், குவாரி வெடி வைப்பதால் வீடுகளில் விரிசல்கள் ஏற்படுகின்றன. இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஏ.லட்சுமிபுரத்தில் பட்டாசு ஆலை அருகிலே செயல்படும் கல் குவாரியின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.
பட்டசு ஆலை அருகே குவாரி செயல்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இலக்கியா, பட்டசு ஆலை அருகே குவாரி செயல்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்றார். இதையடுத்து நீதிபதிகள் தாசில்தார் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















