மேலும் அறிய
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மட கௌமாரமடம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு மற்ற வழக்கோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.

மதுரைக் கிளை
Source : whatsapp
பழனி தண்டாயுதபாணி சுவாமி மலை அடிவாரத்தில் உள்ள கௌமார மடத்திற்கு சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு.
பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இடம்
திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் கனகராஜ் மனைவி கலாமணி அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதம். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் , இந்து சமய அறநிலை துறை செயலாளர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. திண்டுக்கல் மாவட்டம் பூலாம்பட்டியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கருப்பசாமி தாக்கல் செய்த மனு. பழனி கோவில் அடிவாரத்தில் பட்டணம் மாரிமுத்து சுவாமிகள் மடம் உள்ளது. இது கௌமாரமடாலயத்திற்க்கு சொந்தமானது இது பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இடம் இதன் மொத்த நிலங்கள் 1.77 ஏக்கர் பரப்பளவு கொண்டது தற்போதைய சந்தை மதிப்பீட்டில் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புடையது.
பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட கோரி மனு
இந்த சொத்துக்கள் மடத்திற்கு காரணமாக கொடுத்ததின் நோக்கம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இளைப்பாறவும் வாகனங்களை நிறுத்திக் கொள்வதற்கும் உணவுகளுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கு ஆகும் ஆனால் இந்நிலையில் இந்த சொத்துக்களை உடுமலை பகுதியைச் சேர்ந்த அம்பிகா திண்டுக்கல் சேர்ந்த பாஜக பிரமுகர் கனகராஜ் மனைவி கலாமணி உள்ளிட்டோர் ஆக்கிரோப்பு செய்து அதில் வணிக நிறுவனங்கள் வாடகை வாகன நிறுத்தம் இடங்கள் வைத்து நடத்தி வருகின்றனர். மேலும் மடத்திற்கு சொந்தமான சொத்தை 99 வருட குத்தகை ஒப்பந்தமும் போட்டுள்ளனர் மத நிறுவனங்கள் சொந்தமான சொத்துக்களை ஐந்து வருடங்களுக்கு மேல் தனிநபருக்கு குத்தகை பதிவு செய்ய முடியாது என்பது விதி இதனை மறைத்து மோசடியாக குத்தகை பத்திரங்கள் போடப்பட்டுள்ளது எனவே குத்தகை பத்திரங்களை ரத்து செய்து 150 கோடி ரூபாய் மதிப்பீட்டு சொத்துக்களை மீட்டு பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு என்று நீதிபதிகள் கார்த்திகேயன் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவில் நிலங்களை மோசடியாக குத்தகை பதிவு செய்து தனி நபர்கள் வருவாய் ஈட்டி வருகின்றனர் இது சட்டவிரோதம் மடத்தின் சொத்துக்கள் மீட்கப்பட உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். அரசு தரப்பில் இதே கோரிக்கையுடன் மேலும் சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் மனு குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மட கௌமாரமடம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு மற்ற வழக்கோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















