மேலும் அறிய

”உசிலம்பட்டியில் பட்டாசு வெடித்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்“ - உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி!

உசிலம்பட்டியில் வெடி வெடிப்பாதால் ஏற்படும் தொடர் விபத்துகளை தடுக்க, இல்ல விழா நடைபெறும் மண்டபங்களுக்கு சீல் வைத்து அபராதம் வசூலிக்க வேண்டும் - என உசிலம்பட்டி எம்.எல்.ஏ பேட்டி.

நானும் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே இருக்கிறேன். வெடி, வெடிப்பதை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக உள்ளேன் என உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பேட்டியளித்தார்.

பட்டாசு வெடிக்கத் தடை:

மதுரை உசிலம்பட்டி பகுதியில் கல்யாணம், காதுகுத்து, கிடா வெட்டு என்று சுப நிகழ்ச்சிகளுக்கும் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கும் பட்டாசு வெடிப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தங்களது பட்டாசு வெடிப்புச் சத்தம் கேட்டு ஊரே வியக்க வேண்டும் என நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கின்றனர். ஆனால் இந்த செயல் உசிலம்பட்டி பகுதியில் மிகப்பெரும் பிரச்னையாக மாறிவருகிறது.

சாலைகளில் அதிகளவு பட்டாசுகளை வெடித்து சாலை போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன், விபத்தும் ஏற்படுகிறது. இதனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் பட்டாசு வெடிப்பதற்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பட்டாசு வெடிப்பதை தடுக்க முடியவில்லை. இந்நிலையில் உசிலம்பட்டியில் பட்டாசு வெடிப்பாதால் ஏற்படும் தொடர் விபத்துகளை தடுக்க, இல்ல விழா நடைபெறும் மண்டபங்களுக்கு சீல் வைத்து அபராதம் வசூலிக்க வேண்டும்., என உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன் தெரிவித்துள்ளார்.

உசிலம்பட்டியில் பட்டாசு விபத்து:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் உள்ள மண்டபத்தில், ரமேஷ் என்பவரது இல்ல விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த தாய்மாமன் ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில், முத்துப்பாண்டி என்ற இளைஞர் படுகாயமடைந்தார். இதனால் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உசிலம்பட்டி நகர் பகுதியில் வெடி வெடிப்பதால் ஏற்படும் தொடர் விபத்துகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன்,” மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என நான்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பகுதி தான் உசிலம்பட்டி. இங்குள்ள நகர் சாலைகளில் பட்டாசு, வெடித்தால் சம்பந்தப்பட்ட இல்ல விழா நடைபெறும் மண்டபத்திற்கு சீல் வைக்க வேண்டும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நடைபெற்ற நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடுமையான நடவடிக்கை தேவை:

பொதுமக்கள் அதை மீறி, பொதுமக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடிப்பதால், தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகிறது. அதை உணர்ந்து பொதுமக்கள் தானாக முன் வந்து பட்டாசு வெடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லது காவல்துறை, நகராட்சி நிர்வாகம் விழிப்புடன் இருந்து பட்டாசு வெடிப்பதை கண்காணித்து, ஓரிரு திருமண மண்டபங்களையாவது சீல் வைக்க வேண்டும். மேலும், அங்கு அபராத தொகையை வசூல் செய்தால் மட்டுமே இந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.

வெறும் ஏட்டளவில் இருந்தால் பட்டாசு வெடிப்பது, தொடர் விபத்துகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். எனவே நகராட்சி நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து வெடி வெடிப்பதை தடை செய்ய வேண்டிய அனைத்து வழிகளையும் மேற்கொள்ள வேண்டும்., நானும் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே இருக்கிறேன். வெடி, வெடிப்பதை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக உள்ளேன்” என பேட்டியளித்தார்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Muthu: “உதவி செய்யுங்க நிம்மதி ஏற்பட்டு நல்லா தூக்கம் வரும்”- மதுரை முத்துவின் நெகிழ்ச்சி பேச்சு

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Video : ட்ரம்ஸ் இசைக்கலைஞராக மாறிய மணமகன் : மதுரையில் திருமண விழாவில் சுவாரஸ்யம்

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kallakurichi Liquor Death: கள்ளச்சாராயத்தால் பலியானோர் எண்ணிக்கை 40-ஆக உயர்வு
கள்ளச்சாராயத்தால் பலியானோர் எண்ணிக்கை 40-ஆக உயர்வு
Breaking News LIVE: விஷச்சாராய பலி நிகழ்வும், போதை பொருட்கள் அதிகரிப்பும் தொடர்கதை - விஷால் ட்வீட்
Breaking News LIVE: விஷச்சாராய பலி நிகழ்வும், போதை பொருட்கள் அதிகரிப்பும் தொடர்கதை - விஷால் ட்வீட்
Kallakurichi Liquor Death: கள்ளச்சாராய மரணங்கள் : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியஅமைச்சர் உதயநிதி
Kallakurichi Liquor Death: கள்ளச்சாராய மரணங்கள் : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியஅமைச்சர் உதயநிதி
Kamal Haasan:
Kamal Haasan: "போதைக்கு எதிரான போரில் ஈடுபட வேண்டிய தருணம்" கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கமல் இரங்கல்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

MK Stalin on Kallasarayam  : ”விஷச்சாராயம் எப்படி வந்துச்சி..களத்துக்கு போ உதய்” ஆணையிட்ட ஸ்டாலின்Vijay Vs DMK | ”திமுக அரசின் அலட்சியம்”பொங்கி எழுந்த விஜய்!கள்ளச்சாரய விவகாரம்Kallakurichi Kalla Sarayam | DGP-யை அழைத்த ஸ்டாலின் SP-க்களுக்கு பறந்த ORDER!Trichy Surya | தமிழிசையை சீண்டிய திருச்சி சூர்யா? தூக்கி வீசிய பாஜக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kallakurichi Liquor Death: கள்ளச்சாராயத்தால் பலியானோர் எண்ணிக்கை 40-ஆக உயர்வு
கள்ளச்சாராயத்தால் பலியானோர் எண்ணிக்கை 40-ஆக உயர்வு
Breaking News LIVE: விஷச்சாராய பலி நிகழ்வும், போதை பொருட்கள் அதிகரிப்பும் தொடர்கதை - விஷால் ட்வீட்
Breaking News LIVE: விஷச்சாராய பலி நிகழ்வும், போதை பொருட்கள் அதிகரிப்பும் தொடர்கதை - விஷால் ட்வீட்
Kallakurichi Liquor Death: கள்ளச்சாராய மரணங்கள் : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியஅமைச்சர் உதயநிதி
Kallakurichi Liquor Death: கள்ளச்சாராய மரணங்கள் : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியஅமைச்சர் உதயநிதி
Kamal Haasan:
Kamal Haasan: "போதைக்கு எதிரான போரில் ஈடுபட வேண்டிய தருணம்" கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கமல் இரங்கல்
kallakurichi Illicit Liquor: சமூக போராளிகள் எங்கே? - விஜய்யை தூக்கிப்பிடித்து சூர்யாவை அடிக்கிறதா அதிமுக?
kallakurichi Illicit Liquor: சமூக போராளிகள் எங்கே? - விஜய்யை தூக்கிப்பிடித்து சூர்யாவை அடிக்கிறதா அதிமுக?
OPS On Illicit Liquor: ஸ்டாலின் பதவி விலக வேண்டும் - கள்ளச்சாராய விவகாரத்தில் ஓபிஎஸ் போர்க்கோடி
OPS On Illicit Liquor: ஸ்டாலின் பதவி விலக வேண்டும் - கள்ளச்சாராய விவகாரத்தில் ஓபிஎஸ் போர்க்கோடி
MK Stalin on Kallakurichi illicit liquor: மிகவும் வேதனை; குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து முதல்வர்
MK Stalin on Kallakurichi illicit liquor: மிகவும் வேதனை; குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து முதல்வர்
Kallakurichi Illicit Liquor: விஷ சாராயம் குடித்தால் காப்பாற்ற இவ்வளவு நேரம்தான் டைம்: மருத்துவர்கள் சொல்வது என்ன?
Kallakurichi Illicit Liquor: விஷ சாராயம் குடித்தால் காப்பாற்ற இவ்வளவு நேரம்தான் டைம்: மருத்துவர்கள் சொல்வது என்ன?
Embed widget