மேலும் அறிய

தாமிரபரணியில் சட்டவிரோத மணல் குவாரி செயல்படுவதாக தொடரப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

’’ஒவ்வொரு குடிமகனின் உயிர் மற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பது அரசின் கடமை. ஆகவே மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு’’

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் எல்கைக்கு உட்பட்ட பகுதியில், அகரம் கிராமத்தில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடை பெறுகிறது  என்றும் ,இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்து எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை, எனவே  சட்டவிரோத மணல் குவாரிகளை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் தரப்பில்," தாமிரபரணி ஆற்று மணலில் பல கனிமங்கள் உள்ளன. மேலும் அணு சக்திக்கு தேவையான கனிமங்களும் உள்ளன. இவை அரிய வகையில் கிடைக்கும் கனிமங்கள் போல தெரிகிறது" என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 

தாமிரபரணியில் சட்டவிரோத மணல் குவாரி செயல்படுவதாக தொடரப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி அமர்வு,  இன்று நீதிபதிகள் உத்தரவை வெளியிட்டனர். அதில்," மாவட்ட ஆட்சியர் மற்றும் அணு ஆராய்ச்சித்துறையின் பதில்மனுவின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள மணலில் 10% கார்னைட், இலுமினைட், மோனசைட் போன்ற அரிய கனிமங்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. அந்த பகுதியை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து, கனிமங்களை அரசுக்கு உதவும் வகையில் விதிகளின்படி கையாள வேண்டும். இந்த வழக்கில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர், கழுகுப்பார்வையிலான படங்கள், வீடியோ பதிவு உள்ளிட்டவற்றை தாக்கல் செய்திருக்கிறார்.
 

தாமிரபரணியில் சட்டவிரோத மணல் குவாரி செயல்படுவதாக தொடரப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
 
அதன் மூலம் தாமிரபரணி ஆற்றில் பல இடங்களில் மணல் எடுக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. அதனடிப்படையில் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி DSP அந்தஸ்த்திற்கு குறையாத காவல்துறை அதிகாரி விசாரிக்கவும் உத்தரவிடப்படுகிறது. அப்பகுதியில் எடுக்கப்பட்ட மணல் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதா?  என விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனின் உயிர் மற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பது அரசின் கடமை. ஆகவே மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்க  தமிழக காவல்துறை தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் " என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
 

கடலூர்: மாற்று இடம் கேட்டதற்காக குறவர்கள் மீது தாக்குதல் - மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் கைது

 

தலைப்பு செய்திகள்

தேவகோட்டை பள்ளியில் சர்வதேச செஸ் தினம்: இளம் சதுரங்க வீரர்களுக்கு சிறப்பு!
தேவகோட்டை பள்ளியில் சர்வதேச செஸ் தினம்: இளம் சதுரங்க வீரர்களுக்கு சிறப்பு!
தமிழ்நாடு நாள்: பள்ளி மாணவர்களின் அசத்தல் வெற்றி, பரிசுகள் அறிவிப்பு!
தமிழ்நாடு நாள்: பள்ளி மாணவர்களின் அசத்தல் வெற்றி, பரிசுகள் அறிவிப்பு!
தஞ்சையில் பனை மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளது : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தஞ்சையில் பனை மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளது : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Madurai ; மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தேதி இது தான்... உயர்நீதிமன்றத்தில் அறிவிப்பு !
Madurai ; மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தேதி இது தான்... உயர்நீதிமன்றத்தில் அறிவிப்பு !

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
TN Weather Update: தமிழத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
" உன் மனைவியை என்னுடன் அனுப்பிடு " வீட்டிற்கே சென்று கணவரிடம் கூச்சலிட்ட நபர்
Embed widget