மேலும் அறிய

தாமிரபரணியில் சட்டவிரோத மணல் குவாரி செயல்படுவதாக தொடரப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

’’ஒவ்வொரு குடிமகனின் உயிர் மற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பது அரசின் கடமை. ஆகவே மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு’’

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் எல்கைக்கு உட்பட்ட பகுதியில், அகரம் கிராமத்தில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடை பெறுகிறது  என்றும் ,இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்து எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை, எனவே  சட்டவிரோத மணல் குவாரிகளை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் தரப்பில்," தாமிரபரணி ஆற்று மணலில் பல கனிமங்கள் உள்ளன. மேலும் அணு சக்திக்கு தேவையான கனிமங்களும் உள்ளன. இவை அரிய வகையில் கிடைக்கும் கனிமங்கள் போல தெரிகிறது" என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 

தாமிரபரணியில் சட்டவிரோத மணல் குவாரி செயல்படுவதாக தொடரப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி அமர்வு,  இன்று நீதிபதிகள் உத்தரவை வெளியிட்டனர். அதில்," மாவட்ட ஆட்சியர் மற்றும் அணு ஆராய்ச்சித்துறையின் பதில்மனுவின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள மணலில் 10% கார்னைட், இலுமினைட், மோனசைட் போன்ற அரிய கனிமங்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. அந்த பகுதியை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து, கனிமங்களை அரசுக்கு உதவும் வகையில் விதிகளின்படி கையாள வேண்டும். இந்த வழக்கில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர், கழுகுப்பார்வையிலான படங்கள், வீடியோ பதிவு உள்ளிட்டவற்றை தாக்கல் செய்திருக்கிறார்.
 

தாமிரபரணியில் சட்டவிரோத மணல் குவாரி செயல்படுவதாக தொடரப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
 
அதன் மூலம் தாமிரபரணி ஆற்றில் பல இடங்களில் மணல் எடுக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. அதனடிப்படையில் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி DSP அந்தஸ்த்திற்கு குறையாத காவல்துறை அதிகாரி விசாரிக்கவும் உத்தரவிடப்படுகிறது. அப்பகுதியில் எடுக்கப்பட்ட மணல் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதா?  என விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனின் உயிர் மற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பது அரசின் கடமை. ஆகவே மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்க  தமிழக காவல்துறை தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் " என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
 

கடலூர்: மாற்று இடம் கேட்டதற்காக குறவர்கள் மீது தாக்குதல் - மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் கைது

 

தலைப்பு செய்திகள்

6.75 லட்சம் விருதுநகர் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்: தமிழக அரசின் அசத்தல் திட்டம்!
6.75 லட்சம் விருதுநகர் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்: தமிழக அரசின் அசத்தல் திட்டம்!
பிராய்லர் கோழிகளை பண்ணைகளில் இருந்து அனுப்புவதற்கு முன் தீவன நிறுத்தம் செய்யக் கோரி வழக்கு !
பிராய்லர் கோழிகளை பண்ணைகளில் இருந்து அனுப்புவதற்கு முன் தீவன நிறுத்தம் செய்யக் கோரி வழக்கு !
மதுரையில் நாளை (1.08.2026) மின்தடை: உங்கள் பகுதிக்கு பாதிப்பா?
மதுரையில் நாளை (1.08.2026) மின்தடை: உங்கள் பகுதிக்கு பாதிப்பா?
தாமிரபரணி ஆறு மாசுபடுத்துபவர்களுக்கு அபராதம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தாமிரபரணி ஆறு மாசுபடுத்துபவர்களுக்கு அபராதம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget