மேலும் அறிய

Railway : கிராஃப் சார்ட் மூலம் ரயில்களின் இயக்கம் கண்காணிப்பு.. இதைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

ரயில் இன்ஜின் பழுது மின்பாதை பழுது போன்ற நேரங்களில் அவற்றை கட்டுப்பாட்டு துறை ஊழியர்கள் திறமையாக கையாண்டு ரயில் இயக்கத்தை உறுதி செய்கிறார்கள்.

காவல்துறைக்கு கட்டுப்பாட்டு அறை உள்ளது போல ரயில்கள் இயக்கத்திற்கு கட்டுப்பாட்டு துறை உள்ளது. இந்த கட்டுப்பாட்டு துறை  மதுரை கோட்ட அலுவலகத்தில் செயல்படுகிறது. இந்தத் துறைக்கு விடுமுறையே கிடையாது. 365 நாட்களும் 24 மணி நேரமும் ஓய்வில்லாமல் செயல்படுகிறது. சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் இந்த கட்டுப்பாட்டு துறை மூலமாகவே இயக்கப்படுகிறது.

 
ரயில் இயக்கம், வர்த்தகம், சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு, பொறியியல், இயந்திரவியல், மின் பாதை, பாதுகாப்பு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் இந்த கட்டுப்பாட்டு துறை மூலம் ரயில் இயக்கத்திற்கு பெரிதும் உதவி புரிகிறார்கள்.  சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களை இயக்குவதற்கு நேரடியாக நிலைய அதிகாரிகள் உதவிகரமாக இருக்கிறார்கள். கட்டுப்பாட்டுத்துறை ரயில் இயக்க அலுவலர் ரயில்களை இயக்குவதற்கான ஆலோசனைகள் மற்றும் உத்தரவுகளை வழங்குகிறார்.

Railway : கிராஃப் சார்ட் மூலம் ரயில்களின் இயக்கம் கண்காணிப்பு.. இதைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
அதன்படி நிலைய அதிகாரிகள் செயல்படுகிறார்கள். திட்டப்பணிகள், பராமரிப்பு பணிகள் போன்றவை இந்த கட்டுப்பாட்டு துறை மூலமாக ரயில் போக்குவரத்தை நிறுத்தி அல்லது மாற்றுப்பாதையில் இயங்க வைத்து செயல்படுத்தப்படுகிறது. இதுபோன்ற கட்டுப்பாட்டுத்துறை சென்னை, சேலம், திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய ரயில்வே கோட்டங்களிலும் இயங்கி வருகிறது. இந்தக் கோட்டங்களில் செயல்படும் கட்டுப்பாட்டு துறைகளை கண்காணிக்க சென்னை ரயில்வே தலைமையகத்தில் தலைமை கட்டுப்பாட்டு துறை செயல்பட்டு வருகிறது. அவசர காலங்களில் ரயில்களை தடையின்றி இயக்கிட இந்த கட்டுப்பாட்டு துறை ஊழியர்கள் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.  சமீபத்திய மாணவர்கள் போராட்டம் காரணமாக பல்வேறு ரயில்கள் இயக்கம் தடைப்பட்ட போது அதற்காக பல்வேறு மாற்று நடவடிக்கைகளை இந்த கட்டுப்பாட்டு துறை செயல்படுத்தி வந்தது. ரயில்கள் காலம் தவறாமையை கடைப்பிடிக்க இந்த கட்டுப்பாட்டு துறை ஊழியர்கள் தெளிவாக திட்டமிடுகிறார்கள்.

Railway : கிராஃப் சார்ட் மூலம் ரயில்களின் இயக்கம் கண்காணிப்பு.. இதைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
ரயில்கள் தங்குதடையின்றி செல்வதும், அதை கண்காணிப்பதும் ரயில்வே கட்டுபாட்டுத்துறை ஊழியர்களின் பொறுப்பாகும். ரயில் இயக்கத்தில் முந்தைய நாள் ஏற்பட்ட பிரச்னைகளுக்கான தீர்வு, அவை மீண்டும் நடைபெறாமல் தவிர்ப்பது, எதிர்வரும் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களை கையாள அருகிலுள்ள கோட்டங்கள் மற்றும் தலைமையகத்தின் ஆலோசனை மற்றும் உதவிகளை பெறுதல் இவர்களின் முக்கிய பணியாகும். இந்த கட்டுப்பாட்டு துறை அலுவலகங்களில்  "கிராஃப் சார்ட்" (Graph Chart)  போல ஒரு பக்கம் நேரம் மற்றொரு பக்கம் ரயில் நிலைய பெயர்களை எழுதி கோடுகள் வரைந்து ரயில் இயக்கத்தை கட்டுப்படுத்துகிறார்கள். தேஜாஸ் போன்ற முக்கியமான ரயில்களுக்கு பிங்க் கலர், பயணிகள் ரயில்களுக்கு சிவப்பு கலர், சரக்கு ரயில்களுக்கு பச்சை கலர், என்ஜின் தனியாக செல்லும் போது கருப்பு கலர் கோடுகள் வரைந்து ரயில் போக்குவரத்து கண்காணிக்கப்படுகிறது. ஒற்றை ரயில் பாதையில் இந்த கோடுகள் சந்திக்கும் இடங்களில் ஏதாவது ஒரு ரயிலை நிறுத்தி வழி விடுவதற்கு இந்த கட்டுப்பாட்டு துறை உத்தரவிடும். தற்போது இந்த முறை கணினி மயமாக்கப்பட்டு கட்டுப்பாட்டு அலுவலக மென்பொருள் வாயிலாக செயல்படுகிறது.

Railway : கிராஃப் சார்ட் மூலம் ரயில்களின் இயக்கம் கண்காணிப்பு.. இதைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
இந்த முறையில் பதியப்படும் ரயில் வருகை மற்றும் புறப்பாடு நேரம் பயணிகளுக்கு பல்வேறு செயலிகள் மூலம் உறுதியான தகவலாக வழங்கப்படுகிறது. இந்த கட்டுப்பாட்டு துறை ஊழியர்கள் வேலை நேரம் நடு இரவில் ஆரம்பிப்பது போலவும் முடிவடைவது போலவும் அமையும். எனவே ஊழியர்கள் பல நேரங்களில் அலுவலகத்திலேயே தங்கி பணியாற்றக்கூடிய சூழ்நிலை ஏற்படும். பயணிகள் ரயிலில் இருந்து தவறி விழுவது போன்ற எதிர்பாராத சம்பவங்கள் மேல் நடவடிக்கைக்காக உடனடியாக கட்டுப்பாட்டு துறை ஊழியர்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. ரயில்பாதை விரிசல் ரயில் இன்ஜின் பழுது மின்பாதை பழுது போன்ற நேரங்களில் அவற்றை கட்டுப்பாட்டு துறை ஊழியர்கள் திறமையாக கையாண்டு ரயில் இயக்கத்தை உறுதி செய்கிறார்கள்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இன்னும் குறையாத வெயில்.. கோடைக்கால வெயில் மற்றும் வெப்ப அலை தடுப்பு வழிமுறைகள் !
இன்னும் குறையாத வெயில்.. கோடைக்கால வெயில் மற்றும் வெப்ப அலை தடுப்பு வழிமுறைகள் !
மதுரை மக்கள் கவனத்திற்கு... (29.05.2026) அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது !
மதுரை மக்கள் கவனத்திற்கு... (29.05.2026) அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது !
மதுரையில் மண் சரிந்து 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு.. நல்வாயப்பாக தப்பிய 3 தொழிலாளர்கள் !
மதுரையில் மண் சரிந்து 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு.. நல்வாயப்பாக தப்பிய 3 தொழிலாளர்கள் !
நீண்ட நாள் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி - மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி என்ன?
நீண்ட நாள் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி - மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Eps : வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாக செயல்படுங்க.! விஜய் அரசை இறங்கி அடிக்கும் இபிஎஸ்
வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாக செயல்படுங்க.! விஜய் அரசை இறங்கி அடிக்கும் இபிஎஸ்
CV Shanmugam: அய்யய்யோ.. அவசரப்பட்டுட்டோமோ? கப்சிப்பான சிவி சண்முகம்! அடுத்து என்ன செய்யப்போகிறார்?
CV Shanmugam: அய்யய்யோ.. அவசரப்பட்டுட்டோமோ? கப்சிப்பான சிவி சண்முகம்! அடுத்து என்ன செய்யப்போகிறார்?
TVK VIJAY: ”மாடர்ன் சங்கான விசில்?” மின்வெட்டு, பெண்கள் பாதுகாப்பு, எக்ஸ்ட்ரா ரூ.20? - CM விஜய் ஆக்‌ஷன் எங்கே?
”மாடர்ன் சங்கான விசில்?” மின்வெட்டு, பெண்கள் பாதுகாப்பு, எக்ஸ்ட்ரா ரூ.20? - CM விஜய் ஆக்‌ஷன் எங்கே?
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி? உறவினர்கள் சாலை மறியல்!
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி? உறவினர்கள் சாலை மறியல்!
நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு... அவதிப்படும் மக்கள்.. அதிகாரிகள் அலட்சிய பதில்! நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?
நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு... அவதிப்படும் மக்கள்.. அதிகாரிகள் அலட்சிய பதில்! நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?
TASMAC: வெறும் 150 மதுக்கடைகள் மட்டுமே மூடல்; 3 நாளுக்குள் முழுசா மூடுங்க! அன்புமணி கோரிக்கை
TASMAC: வெறும் 150 மதுக்கடைகள் மட்டுமே மூடல்; 3 நாளுக்குள் முழுசா மூடுங்க! அன்புமணி கோரிக்கை
Minister Ramesh: விஜய் சாதி பார்த்து அறநிலையத்துறை கொடுத்தாரா? - கொந்தளித்த அமைச்சர் ரமேஷ்!
Minister Ramesh: விஜய் சாதி பார்த்து அறநிலையத்துறை கொடுத்தாரா? - கொந்தளித்த அமைச்சர் ரமேஷ்!
Gold rate today : 2 நாட்களாக அடுத்தடுத்து குறையும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
2 நாட்களாக அடுத்தடுத்து குறையும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Embed widget