Private Companies Holiday : தனியார் நிறுவன ஊழியர்களுக்கு குஷி.! இந்த தேதியில் சம்பளத்துடன் கட்டாயம் லீவு கொடுங்க- தேர்தல் ஆணையம் உத்தரவு
Private Companies Holiday : தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தனியார் நிறுவன ஊழியர்கள் வாக்களிக்கும் வகையில் ஏப்ரல் 23ஆம் தேதி சம்பளத்தோடு ஊதியம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நெருங்கும் தேர்தல்- தயாராகும் அரசியல் கட்சிகள்
நாடே எதிர்பார்த்து காத்திருந்த 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 9ஆம் தேதியும், தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கூட்டணி, தொகுதி உடன்பாடு, வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தேர்தல் பணியில் தேர்தல் ஆணையம்
இது ஒருபக்கம் நடைபெறும் நிலையில், தேர்தல் ஆணையம் சார்பாகவும் வாக்குப்பதிவிற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரிகளோடு ஆய்வு செய்து பதற்றமான தொகுதிகளின் பட்டியலை கணக்கில் எடுத்து கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறது. அதே நேரம் ஏப்ரல் 23ஆம் தேதி வியாழக்கிழமை வாக்குப்பதிவிற்கான நாளாக குறிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவித்தாலும், தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்காமல் தொழிலாளர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிடும்.
ஏப்ரல் 23ஆம் தேதி கட்டாயம் விடுமுறை
எனவே அனைவரும் வாக்களுக்கும் வகையில் ஏப்ரல் 23ஆம் தேதி சம்பளத்தோடு விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாக்குப்பதிவு நாளன்று தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிபிஓ நிறுவனங்களும் தங்களது பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் இந்திய தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து அதை நடைமுறைப்படுத்த சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்



















