மேலும் அறிய

காவல்துறை துணை கண்காணிப்பாளர் தாக்கியதால் உயிரிழந்த கணவன் - சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

திருநெல்வேலி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தாக்கியதால் உயிரிழந்த கணவரின் வழக்கை சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய வழக்கில், சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 
இதுதொடர்பாக திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தை சேர்ந்த இசக்கி சங்கரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் எனது குடும்பத்தினருடன் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் வசித்து வருகிறேன். 2018ம் ஆண்டு மார்ச் மாதம் திடீரென்று தாழையூத்து பகுதி காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் அவரது காவல்துறை குழுவினருடன் எங்கள் வீடு புகுந்து எனது கணவர் முருகேசன் மற்றும் அவரது நண்பர் மாணிக்க ராஜ் கொடூரமாக தாக்கி அங்கிருந்து சிவந்திபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
 
சிவந்திப்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று பார்த்தபொழுது காவல்துறை துணை கண்காணிப்பாளர் கொடூரமாக எனது கணவர் மற்றும் அவரது நண்பரை தாக்கி கொண்டிருந்தார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து எனது கணவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 31.3.2018 அன்று உயிரிழந்தார்.
 
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கானது 2018 ஆண்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 4 வருட காலம் ஆகியும் சிபிசிஐடி விசாரணையில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. எனவே, எனது கணவரின் வழக்கை சிபிசிஐடியிடமிருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது நீதிபதி,மரணம் குறித்து விசாரணை செய்த நீதிமன்ற நடுவர் அறிக்கையை தாக்கல் செய்யவும், சிபிசிஐடி தரப்பில் தற்போதைய நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் மற்றும் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 
 
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Biggboss Tamil Season 8 LIVE:  முதல் பங்கேற்பாளராக ரவீந்தர் சந்திரசேகரனை அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி
Biggboss Tamil Season 8 LIVE: முதல் பங்கேற்பாளராக ரவீந்தர் சந்திரசேகரனை அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Biggboss Tamil Season 8 LIVE:  முதல் பங்கேற்பாளராக ரவீந்தர் சந்திரசேகரனை அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி
Biggboss Tamil Season 8 LIVE: முதல் பங்கேற்பாளராக ரவீந்தர் சந்திரசேகரனை அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Embed widget