மேலும் அறிய

சிறந்த காளைக்கு டாடா ஏசி, சிறந்த மாடுபிடி வீரருக்கு ஆட்டோ பரிசு - தொட்டப்பநாயக்கனூர் ஜல்லிக்கட்டில் அசத்தல் !

உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஜமீன் ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

சிறந்த காளை மற்றும் மாடிபிடி வீரருக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கும் வண்ணம் தமிழகத்திலேயே முதன்முறையாக சிறந்த காளைக்கு டாடா ஏசி, சிறந்த மாடுபிடி வீரருக்கு ஆட்டோ பரிசாக வழங்கப்பட்டது.
 

மதுரை ஜல்லிக்கட்டு

தமிழர் திருநாளாக தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே கரும்புகள், சொந்த ஊர் திரும்பும் மக்கள், கோயிலில் குவியும் மக்கள் ஆகியோருக்கு நிகராக மக்கள் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளே.

ஜல்லிக்கட்டு போட்டிக்காக ரூ.13 லட்சம் நிதி வழங்கிய 8 கிராம மக்கள் - மதுரையில் நெகிழ்ச்சி

 
ஜல்லிக்கட்டில் நெகிழ்ச்சி 

மதுரையில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றது ஆகும். இங்கு நடைபெறும் போட்டிகளை காண தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் திரளாக படையெடுத்து செல்வார்கள். இந்நிலையில் இந்தாண்டு கூடுதல் விருந்தாக கீழக்கரை பிரமாண்ட மைதானத்திலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த சூழலில் மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள  பழமை வாய்ந்த தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்காக - 8 கிராம மக்கள் ஒன்று திரண்டு சுமார் 13 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கம் நிதி உதவி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.


சிறந்த காளைக்கு டாடா ஏசி, சிறந்த மாடுபிடி வீரருக்கு ஆட்டோ பரிசு -  தொட்டப்பநாயக்கனூர் ஜல்லிக்கட்டில் அசத்தல் !

தமிழகத்திலேயே முதன்முறையாக
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட பழமை வாய்ந்த ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாபெரும் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று காலை 9 மணிக்கு துவங்கியது. 8 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 493 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் களம் கண்டனர். திமிலுடன் திமிரி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். பல்வேறு காளைகள் மாடுபிடி வீரர்களின் கைகளில் சிக்காமல் சீறி பாய்ந்தன. சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கும் வண்ணம் தமிழகத்திலேயே முதன்முறையாக சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட குலமங்கலம் வழக்கறிஞர் திருப்பதி காளைக்கு டாடா ஏசி வாகனம் பரிசாக வழங்கப்பட்டது, இதே போன்று 9 காளைகளை அடக்கிய பேச்சியம்மன்கோவில்பட்டியைச் சேர்ந்த கனி சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டு ஆட்டோ பரிசாக வழங்கப்பட்டது. திருப்பத்தூர் சீமான் முரசு காளைக்கும், 6 காளைகளை பிடித்த கீரிபட்டி சிவனேஸ்வரனுக்கும்  இரண்டாம் பரிசாக இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

சிறந்த காளைக்கு டாடா ஏசி, சிறந்த மாடுபிடி வீரருக்கு ஆட்டோ பரிசு -  தொட்டப்பநாயக்கனூர் ஜல்லிக்கட்டில் அசத்தல் !
 
 
இப்போட்டியில் பங்கேற்று வாடிவாசல் வழியே அவிழ்க்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது எம்.ஆர். வெள்ளை என்ற காளை மதுரை போடி இரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. சுமார் 47 மாடுபிடி வீரர்கள் பார்வையாளர்கள் காயமடைந்த நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 7 பேர் மேல் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உசிலம்பட்டி டி.எஸ்.பி., நல்லு தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூழலில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup 2024 Final: சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
Breaking News LIVE: படிப்படியாக மதுக்கடைகளை குறைப்பதே அரசின் எண்ணம் - அமைச்சர் முத்துசாமி
Breaking News LIVE: படிப்படியாக மதுக்கடைகளை குறைப்பதே அரசின் எண்ணம் - அமைச்சர் முத்துசாமி
CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

T20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup 2024 Final: சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
Breaking News LIVE: படிப்படியாக மதுக்கடைகளை குறைப்பதே அரசின் எண்ணம் - அமைச்சர் முத்துசாமி
Breaking News LIVE: படிப்படியாக மதுக்கடைகளை குறைப்பதே அரசின் எண்ணம் - அமைச்சர் முத்துசாமி
CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை - ஸ்டாலின்
CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை - ஸ்டாலின்
Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? அப்ப இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்களேன்!
Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? அப்ப இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்களேன்!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Fire Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்
Fire Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்
Embed widget