மேலும் அறிய

சிறுவர்களுக்கு தின்பண்டங்கள் தர மறுத்த வழக்கு: கைதான இருவர் ஜாமீன் கோரிய வழக்கு ஒத்திவைப்பு

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் கிராமத்தைச் சேர்ந்த கைதான இருவர் ஜாமீன் கோரிய வழக்கு.

தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் கிராமத்தைச் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் தர மறுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் ஜாமின் கோரிய வழக்கை தீர்ப்பிற்காக ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 
தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள ஒரு கடையில் சிறுவர்கள் சிலர் திண்பண்டங்கள் வாங்கச் சென்றுள்ளனர். ஊர்க்கட்டுப்பாடு காரணமாக திண்பண்டம் வாங்க வரக் கூடாது. வீட்டில் போய் சொல்லுங்கள் எனக் கூறி கடைக்காரர் சிறுவர்களுக்கு திண்பண்டம் தர மறுத்துள்ளார்.
 
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் கடை உரிமையாளர் மகேஸ்வரன், ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.
 
இதையடுத்து இவர்கள் தங்களுக்கு ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கினை தீர்ப்பிற்காக திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
 

மற்றொரு வழக்கு
 
வைகை அணையிலிருந்து  ஊர்மெச்சிகுளம் கால்வாய் பாதையில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு இருந்தால் அதனை மாவட்ட ஆட்சியர் அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
 
பெரியார் வைகை பாசன பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் இணைந்து  ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலை 3 வாரத்தில் தயார் செய்யவும், அதில் ஆக்கிரமிப்பு இருந்தால் 8 வாரத்திற்குள் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 
ஊர்மெச்சி குளத்தை சேர்ந்த ஸ்ரீதர் ஆறுமுகம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள் தாக்கல் செய்த மனு.
அதில், "தென் மாவட்டத்தில் ஐந்து மாவட்டங்கள் நீர் நிலையாக ஆதாரமாக வைகை இருந்து வருகிறது வைகையில் இருந்து பரவை- ஊர்மெச்சிகுளம் பகுதியில் உள்ள பெரிய கண்மாய்க்கு கால்வாய் வழியாக  வைகை நீர் வருகிறது.
 
இந்த கால்வாய் நீர் பாசனம் தான் இந்த பகுதியில் பல்லாயிர கணக்கான ஏக்கர் விவசாயிகள் நீர் பாசனமாக எடுத்து வருகின்றனர்.  இந்நிலையில் கால்வாய் வருகின்ற பகுதிகளில்  கட்டிடங்கள் வணிக நிறுவனங்கள் என ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது இந்த ஆக்கிரமிப்பினால் தற்போது நீர்வரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்
 
எனவே, ஊர்மெச்சிகுளம் வரக்கூடிய கால்வாய் பாதையில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், வைகை அணையில் இருந்து ஊர்மிச்சிக் குளம் கால்வாய் பாதையிலுள்ள ஆக்கிரப்புகளை அகற்றுவது குறித்து பெரியார் பாசன பொதுப்பணித்துறை அதிகாரி, வட்டாட்சியர் ஆகியோர் ஒன்றிணைந்து அளவீடு செய்து 3 வாரத்தில் அறிக்கை தயாரிக்க வேண்டும்  அதில், ஆக்கிரமிப்புகளில் உள்ள கட்டிடங்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் 8 வாரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில் நிலையம் பணிகள் 50% நிறைவு... பயணிகளுக்கு காத்திருக்கும் நவீன வசதிகள்!
மதுரை ரயில் நிலையம் பணிகள் 50% நிறைவு... பயணிகளுக்கு காத்திருக்கும் நவீன வசதிகள்!
மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மாலை, மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் !
மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மாலை, மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் !
ஆகாஷ் மரணம்: 101 நாட்களுக்குப் பின் உடல் தகனம்; நீதி கேட்டு தாய் கண்ணீர்!
ஆகாஷ் மரணம்: 101 நாட்களுக்குப் பின் உடல் தகனம்; நீதி கேட்டு தாய் கண்ணீர்!
விஜயபாஸ்கர் - கட்சிக்கு சொத்துக்களை எழுதி வைப்பாரா - ஆர்.பி. உதயகுமார் கேள்வி !
விஜயபாஸ்கர் - கட்சிக்கு சொத்துக்களை எழுதி வைப்பாரா - ஆர்.பி. உதயகுமார் கேள்வி !

வீடியோ

Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi at G7: அடி சக்க.! புதிய உலக தெற்கு இணைப்பு கட்டமைப்பு; ஜி7 உச்சிமாநாட்டில் முன்மொழிந்த பிரதமர் மோடி
அடி சக்க.! புதிய உலக தெற்கு இணைப்பு கட்டமைப்பு; ஜி7 உச்சிமாநாட்டில் முன்மொழிந்த பிரதமர் மோடி
Trump Warns Iran: “ஒழுங்கா நடந்துக்கலைன்னா மறுபடியும் குண்டு வீசுவோம்“ - ஈரானை எச்சரித்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
“ஒழுங்கா நடந்துக்கலைன்னா மறுபடியும் குண்டு வீசுவோம்“ - ஈரானை எச்சரித்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
Aloor Sha Navas: திருச்சி கிழக்கில் சுயேட்சை! அடுத்த தேர்தலில் தனிக்கட்சி! ஆளூர் ஷாநவாஸ் போடும் திட்டம் என்ன?
Aloor Sha Navas: திருச்சி கிழக்கில் சுயேட்சை! அடுத்த தேர்தலில் தனிக்கட்சி! ஆளூர் ஷாநவாஸ் போடும் திட்டம் என்ன?
"10 லட்ச ரூபாய்க்கு நீட் வினாத்தாள் கசிவா? மோசடி!" ஐஐடி சென்னை இயக்குநர் பகீர்!
Arunraj Vs Udhayanidhi: “சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேச அருகதை இல்லை“: உதயநிதியை விளாசிய அருண்ராஜ்
“சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேச அருகதை இல்லை“: உதயநிதியை விளாசிய அருண்ராஜ்
E Scooters Under Rs.50,000: ஒரு முறை சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் ஓட்டலாம்.! ரூ.50,000-க்கும் குறைவான பட்ஜெட் EV ஸ்கூட்டர்கள்; லிஸ்ட்
ஒரு முறை சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் ஓட்டலாம்.! ரூ.50,000-க்கும் குறைவான பட்ஜெட் EV ஸ்கூட்டர்கள்; லிஸ்ட்
Thiruchendur Temple : திருச்செந்தூர் கோயிலுக்கு போறீங்களா.! பக்தர்களுக்கு ஜூலை 1 முதல் புது ரூல்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
திருச்செந்தூர் கோயிலுக்கு போறீங்களா.! பக்தர்களுக்கு ஜூலை 1 முதல் புது ரூல்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
தூக்கியடித்த முதல்வர் விஜய்; நான் முதல்வன் திட்டம் மொத்தமாக மாற்றம்- நடந்தது என்ன?
தூக்கியடித்த முதல்வர் விஜய்; நான் முதல்வன் திட்டம் மொத்தமாக மாற்றம்- நடந்தது என்ன?
Embed widget