மேலும் அறிய

தேனி: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் மேலும் 3 இடைத்தரகர்கள் கைது

இன்று காலை முதல் மூன்று பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த 2019 ஆம் ஆண்டு தேனி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு படித்து வந்த உதித்சூர்யா என்ற மாணவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அப்போதைய மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கில் மேலும் பலர் சிக்கினர்.


தேனி: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் மேலும் 3 இடைத்தரகர்கள் கைது

மேலும் கேரளா,ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இடைத்தரகர்களுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருந்ததால் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. அந்த வகையில் கடந்த 3 தினங்களுக்கு முன்னதாக ஜார்க்கண்ட் சேர்ந்த கிருஷ்ணா முராரே (37) என்பவரை தேனி சிபிசிஐடி காவல்துறையினர்  சென்னையில் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பீகாரைச் சேர்ந்த மேலும் இருவருக்கு இந்த ஆள் மாறாட்ட விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பெங்களூரில் தங்கியிருந்த பீகாரைச் சேர்ந்த சாகித் சின்ஹா (39) மற்றும் ரகுவன்ஸ் மணி (39) ஆகிய இருவரையும் தேனி சி.பி.சி.ஐ.டி.போலீசார் நேற்று காலை பெங்களூரில் கைது செய்து நேற்று இரவு தேனி சிபிசிஐடி அலுவலகம் அழைத்து வந்தனர்.


தேனி: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் மேலும் 3 இடைத்தரகர்கள் கைது

இன்று காலை முதல் மூன்று பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சாகித் சின்ஹா மற்றும் ரகுவன்ஸ் மணி ஆகிய இருவரும் பீகாரில் எஜுகேஷன் கன்சல்டிங் ஏஜென்சி(Education Consulting Agency) நடத்தி வந்ததும், அதன் மூலமாக நீட் தேர்வில் மாணவ, மாணவிகளை ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுத்தியதும், அதற்காக லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரையும் தேனி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி லலிதா ராணி முன்னிலையில் ஆஜர் படுத்திய 15 நாட்கள் சிறைகாவலி வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் குற்றம் சுமத்தப்பட்ட மூவரையும் சிறைக்கு கொண்டு சென்றனர். மேலும் வருகின்ற 23ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்த நீதிபதி உத்தரவு விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தேனி: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் மேலும் 3 இடைத்தரகர்கள் கைது

இந்த வழக்கில் இதுவரை 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், இடைத்தரகர்கள் என இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு சிலர் விசாரணைக் கைதியாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், பெரும்பாலானோர் தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணையின் தொடர்ச்சியாக கைது நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Embed widget