மேலும் அறிய

தேனி: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் மேலும் 3 இடைத்தரகர்கள் கைது

இன்று காலை முதல் மூன்று பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த 2019 ஆம் ஆண்டு தேனி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு படித்து வந்த உதித்சூர்யா என்ற மாணவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அப்போதைய மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கில் மேலும் பலர் சிக்கினர்.


தேனி: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் மேலும் 3 இடைத்தரகர்கள் கைது

மேலும் கேரளா,ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இடைத்தரகர்களுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருந்ததால் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. அந்த வகையில் கடந்த 3 தினங்களுக்கு முன்னதாக ஜார்க்கண்ட் சேர்ந்த கிருஷ்ணா முராரே (37) என்பவரை தேனி சிபிசிஐடி காவல்துறையினர்  சென்னையில் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பீகாரைச் சேர்ந்த மேலும் இருவருக்கு இந்த ஆள் மாறாட்ட விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பெங்களூரில் தங்கியிருந்த பீகாரைச் சேர்ந்த சாகித் சின்ஹா (39) மற்றும் ரகுவன்ஸ் மணி (39) ஆகிய இருவரையும் தேனி சி.பி.சி.ஐ.டி.போலீசார் நேற்று காலை பெங்களூரில் கைது செய்து நேற்று இரவு தேனி சிபிசிஐடி அலுவலகம் அழைத்து வந்தனர்.


தேனி: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் மேலும் 3 இடைத்தரகர்கள் கைது

இன்று காலை முதல் மூன்று பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சாகித் சின்ஹா மற்றும் ரகுவன்ஸ் மணி ஆகிய இருவரும் பீகாரில் எஜுகேஷன் கன்சல்டிங் ஏஜென்சி(Education Consulting Agency) நடத்தி வந்ததும், அதன் மூலமாக நீட் தேர்வில் மாணவ, மாணவிகளை ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுத்தியதும், அதற்காக லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரையும் தேனி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி லலிதா ராணி முன்னிலையில் ஆஜர் படுத்திய 15 நாட்கள் சிறைகாவலி வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் குற்றம் சுமத்தப்பட்ட மூவரையும் சிறைக்கு கொண்டு சென்றனர். மேலும் வருகின்ற 23ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்த நீதிபதி உத்தரவு விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தேனி: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் மேலும் 3 இடைத்தரகர்கள் கைது

இந்த வழக்கில் இதுவரை 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், இடைத்தரகர்கள் என இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு சிலர் விசாரணைக் கைதியாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், பெரும்பாலானோர் தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணையின் தொடர்ச்சியாக கைது நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மதுரை மக்களே அலர்ட்..! நாளை 8 மணி நேரம் பவர் கட் - லிஸ்டில் உங்க ஏரியா இருக்கானு பாருங்க..!
மதுரை மக்களே அலர்ட்..! நாளை 8 மணி நேரம் பவர் கட் - லிஸ்டில் உங்க ஏரியா இருக்கானு பாருங்க..!
மதுரை மக்களே... நாளை (07.07.2026) மின்தடை: உங்கள் பகுதி இதில் உள்ளதா?
மதுரை மக்களே... நாளை (07.07.2026) மின்தடை: உங்கள் பகுதி இதில் உள்ளதா?
மத்திய அரசு வேலை: காந்திகிராம் GIRHFWT-ல் பட்டதாரிகளுக்கு பொன்னான வாய்ப்பு!
மத்திய அரசு வேலை: காந்திகிராம் GIRHFWT-ல் பட்டதாரிகளுக்கு பொன்னான வாய்ப்பு!
பழனி ரோப்கார் ஆன்லைன் முன்பதிவு: இனி வரிசையில் நிற்க வேண்டாம்!
பழனி ரோப்கார் ஆன்லைன் முன்பதிவு: இனி வரிசையில் நிற்க வேண்டாம்!

வீடியோ

TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
E.V.Velu Asset : ‘திமுக குடும்பத்தின் கஜானா – ஏவ வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
'ஏ.வ.வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
Minister Keerthana: கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
Sierra QWD Vs RWD: டாடா சியரா EV வாங்கப் போறீங்களா.? QWD-ஆ.? RWD-ஆ.? உங்க பணத்துக்கு மதிப்பான சிறந்த மாடல் எது.? ஒப்பீடு
டாடா சியரா EV வாங்கப் போறீங்களா.? QWD-ஆ.? RWD-ஆ.? உங்க பணத்துக்கு மதிப்பான சிறந்த மாடல் எது.? ஒப்பீடு
Director Mohan G: தமிழகம் முழுக்க நாடக காதல்.. உடனே பெற்றோருக்கு உதவி பண்ணுங்க.. கொந்தளித்த மோகன் ஜி!
Director Mohan G: தமிழகம் முழுக்க நாடக காதல்.. உடனே பெற்றோருக்கு உதவி பண்ணுங்க.. கொந்தளித்த மோகன் ஜி!
TN Govt Lawyer: அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
Embed widget