மேலும் அறிய

தேனி: தமிழ்நாடு சீருடை பணிக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

சீருடை பணிக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு ஏதுவாக தேனி மாவட்ட காவல் துறை நிர்வாகம் சார்பாக உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது. உதவி மையத்தை 04546-253106 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இரண்டாம்நிலைக் காவலர், சிறப்பு காவல்படை, இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான பொதுத்தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறித்துள்ளது. இதற்கு இணையவழியில் விண்ணப்பம் பதிவு செய்வதற்கு உதவும் வகையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தேனி: தமிழ்நாடு சீருடை பணிக்கு  விண்ணப்பம் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான பதவிகள்  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்படும். பொதுத்தேர்வு, நேர்முகத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கடந்த சில நாள்களுக்கு முன்பு காவல்துறை துணை ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெற்ற நிலையில் இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்புத்துறைக்கான பதவிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 30.06.2022 தேதியிட்ட அறிவிப்பாணை எண் 02/2022 வழியாக இத்தேர்வுகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியின் கீழ் வரும் இந்த பதவிகள் முழுநேரப் பணியாகும். இதில் இரண்டாம் நிலைக் காவலர் மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படைக்கு பொது மற்றும் ஆண்கள் பிரிவில் 1526 பேரும், பெண்கள் 654 பேர் என மொத்தமாக 2180 பதவிகளுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி: தமிழ்நாடு சீருடை பணிக்கு  விண்ணப்பம் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

அதேபோல, இரண்டாம் நிலைக் காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல்படைக்கு பொது மற்றும் ஆண்கள் பிரிவில் 1091 பணியிடங்களும், சிறை மற்றும் சீர்திருத்தத்துறையில் இரண்டாம் நிலை சிறைக்காவலர் பணியிடங்களுக்கு பொது மற்றும் ஆண்கள் பிரிவில் 153 பணியிடங்களும், பெண்கள் பிரிவில் 8 பணியிடங்களும் என மொத்தமாக 161 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்பாளர் பணிகளுக்காக பொது மற்றும் ஆண்கள் பிரிவில் 120 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட நான்கு பதவிகளுக்கு ஆண்கள் 2,890 பேர் பெண்கள் 662 பேர் என்று மொத்தமாக 3552 பதவிகளுக்கு பொதுத் தேர்வுகள் மூலம் பணியாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

Job Notification : காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது தேர்வு வாரியம்.. முழு விவரம்..

தேனி: தமிழ்நாடு சீருடை பணிக்கு  விண்ணப்பம் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

தற்போது சீருடை பணியாளர் தேர்வுக்கு தயாராகும் மற்றும் விண்ணப்பிப்பவர்கள் வசதிக்காக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உதவி சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட போலீசார் இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். எனவே, இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்தல் குறித்த விவரங்களை இந்த உதவி மையத்தை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.  இந்த உதவி மையம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இந்த மையத்தை 04546-253106 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget