மேலும் அறிய

தேனி: மழையில்லை... வானம் பார்க்கும் பூமி.. கால தாமதமாகும் முதல் போக நெல் சாகுபடி பணிகள்

மழை இல்லாததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.90 அடிக்கு கீழ் சரிந்தது. இந்த நிலையில் முதல்போக நெல் சாகுபடியை தொடங்க விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

தமிழக, கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி அதில், 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள  உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நீதிமன்றம் உத்தரவிட்டு 9 ஆண்டுகள் ஆகியும் பேபி அணை பலப்படுத்தும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. இந்த அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 14 ஆயிரம் 707 ஏக்கர் விவசாய நிலங்களின் முதல் போக நெல் சாகுபடிக்கு ஜூன் 1-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

தேனி: மழையில்லை... வானம் பார்க்கும் பூமி.. கால தாமதமாகும் முதல் போக நெல் சாகுபடி பணிகள்

அதன்படி, இந்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 118.45 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்ட பிறகு அணை பகுதியில் போதிய மழை பெய்யவில்லை. தென்மேற்கு பருவமழையும் தீவிரம் அடையாமல் உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 116.90 அடியாக குறைந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 93 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 302 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர் இருப்பு 2,069 மில்லியன் கன அடியாக இருந்தது.நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் முதல்போக நெல் சாகுபடியை தொடங்க விவசாயிகள் தயக்கம் அடைந்துள்ளனர். வீரபாண்டி, உப்பார்பட்டி, சின்னமனூர், உள்பட பல இடங்களில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே உழவுப் பணிகள் செய்த நிலையில், இன்னும் நாற்றாங்கால் கூட அமைக்காமல் விவசாயிகள் பலர் உள்ளனர்.

தேனி: மழையில்லை... வானம் பார்க்கும் பூமி.. கால தாமதமாகும் முதல் போக நெல் சாகுபடி பணிகள்

இதனால், முதல்போக நெல் சாகுபடி பணிகள் மேலும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. தற்போதைய சூழலில் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அணையில் பாசனத்துக்கு தேவையான தண்ணீர் இருந்தது. கடந்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட போது அணையின் நீர்மட்டம் 132.35 அடியாக இருந்தது. கடந்த ஆண்டு ஜூன் 19-ந்தேதி நிலவரப்படி அணையில் 130 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தது. இந்த ஆண்டு கோடை மழை கை கொடுக்காமலும், பருவமழை தீவிரம் அடையாமலும் உள்ளதால் முதல்போக சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்குமா? என்ற கேள்வியுடன் வான்மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். இதே நிலை நீடித்தால் அடுத்த சில நாட்களில் அணையில் இருந்து திறக்கும் தண்ணீர் அளவை குறைக்கவோ, அல்லது நிறுத்தவோ வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

தேனி: மழையில்லை... வானம் பார்க்கும் பூமி.. கால தாமதமாகும் முதல் போக நெல் சாகுபடி பணிகள்

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் முல்லைப்பெரியாறு அணையில் 108 அடி வரை மட்டுமே தண்ணீர் எடுக்க முடியும். 108 அடி என்பது அணையின் கிடப்பு நீர். 108 அடிக்கு மேல் இருந்தால் தான் அணையின் சுரங்கப் பகுதி வழியாக தமிழகத்துக்கு திறக்கப்படும் மதகுகளுக்கு தண்ணீர் வரும். இன்னும் 9 அடி அளவு வரை அணையில் இருந்து தண்ணீர் எடுக்கலாம். அதற்குள் பருவமழை கைகெடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையமும் அறிவித்துள்ளது. எனவே, மழை கைகொடுக்கும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் உயர்ந்து, அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. அதுவரை விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்
உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?
Vice President Jagdeep Dhankhar | அழுத்தம் கொடுத்த பாஜக? ஜெகதீப் தன்கர் ராஜினாமா!உண்மை பின்னணி என்ன?
ADMK BJP Alliance | கூட்டணி கட்சிகள் போர்க்கொடி.. இபிஎஸ்-க்கு நெருக்கடி! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்
Mayiladuthurai Womens College | அவசரகதியில் கல்லூரி திறப்பு? ”பெஞ்ச் கூட இல்லை” மாணவிகள் வேதனை
6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்
உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
Delhi High Court: “பெண்ணுடன் நட்பு இருந்தாலும் அவள் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை“-டெல்லி கோர்ட்
“பெண்ணுடன் நட்பு இருந்தாலும் அவள் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை“-டெல்லி கோர்ட்
Trump Warns Tech., Giants: இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
12th Supplementary Exam Result: வெளியான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
12th Supplementary Exam Result: வெளியான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
Aadi Month Koozh: பக்தர்களே.. ஆடி மாதம் அம்மன் கோயிலில் கூழ்  ஊற்றுவது ஏன்? இதுதான் காரணமா!
Aadi Month Koozh: பக்தர்களே.. ஆடி மாதம் அம்மன் கோயிலில் கூழ் ஊற்றுவது ஏன்? இதுதான் காரணமா!
Embed widget