மேலும் அறிய

CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!

10-ம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 10 அன்றும், 12-ம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 9 அன்றும் முடிகின்றன. நாடு முழுவதும் சுமார் 45 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வுகளில் பங்கேற்க உள்ளனர்.

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதில் மாணவர்களின் சுமையைக் குறைக்கவும், கற்றல் திறனை மேம்படுத்தவும் பல அதிரடி மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

தேர்வு அட்டவணை


2026ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 17, 2026 அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 10 அன்றும், 12-ம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 9 அன்றும் முடிகின்றன. நாடு முழுவதும் சுமார் 45 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வுகளில் பங்கேற்க உள்ளனர்.

இரட்டைப் பொதுத்தேர்வு முறை (Twin Board Exams)


10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் 'இரட்டைப் பொதுத்தேர்வு' முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மாணவர் முதல் தேர்வில் தோல்வியடைந்தாலோ அல்லது குறிப்பிட்ட பாடங்களில் மதிப்பெண்களை உயர்த்த விரும்பினாலோ, இரண்டாவது தேர்வில் பங்கேற்கலாம். இது மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, ஒரு கல்வியாண்டு வீணாவதைத் தவிர்க்கவும். உதவும்.

பாடவாரியான மாற்றங்கள்

10ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களின் வினாத்தாள்கள் இனி தனித்தனி பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.

  • அறிவியல்: உயிரியல், வேதியியல், இயற்பியல் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
  • சமூக அறிவியல்: வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் என நான்கு பிரிவுகளாக இருக்கும். இது மதிப்பீட்டு முறையை எளிதாக்க உதவும்.

புதிய வினாத்தாள் அமைப்பு

2026ஆம் ஆண்டு தேர்வில் 50 சதவீதக் கேள்விகள் மாணவர்களின் சிந்திக்கும் திறன் மற்றும் பாடத்தைப் புரிந்து பயன்படுத்தும் திறனை சோதிக்கும் வகையில் இருக்கும். 20 சதவீத கேள்விகள் பலவுள் தெரிவு வினாக்களாகவும், மீதமுள்ள 30 சதவீத கேள்விகள் சிறு மற்றும் பெரு வினாக்களாகவும் அமையும். மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து, புரிதலுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதே இதன் நோக்கமாகும்.

வருகைப்பதிவு மற்றும் அக மதிப்பீடு


மாணவர்கள் தேர்வெழுதத் தகுதி பெற 75% வருகைப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 1, 2026 முதல் தொடங்கும் செய்முறைத் தேர்வுகள் மற்றும் அக மதிப்பீடுகளில் (Internal Assessment) பங்கேற்பது அவசியம். இதில் பங்கேற்காத மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாது.

இந்த மாற்றங்கள் அனைத்தும் மாணவர்களின் எதிர்காலப் போட்டித் தேர்வுகளுக்கு அவர்களைத் தயார்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று சிபிஎஸ்இ தெளிவுபடத் தெரிவித்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி நீட் ரேங்க் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார்? நெகட்டிவ் மார்க் பெற்றவர்களுக்கு வாய்ப்பா?
புதுச்சேரி நீட் ரேங்க் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார்? நெகட்டிவ் மார்க் பெற்றவர்களுக்கு வாய்ப்பா?
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
Embed widget