மேலும் அறிய

உறவினரை தீ வைத்து எரித்துக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை - தேனி நீதிமன்றம் தீர்ப்பு

உத்தமபாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் உறவினரை தீ வைத்து எரித்துக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் பிரிதிவிராஜ் (48). இவர் அப்பகுதியில் கடை ஒன்றில்  வேலை செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி ஹெலினா வளர்மதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு கணவன், மனைவி  இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் அப்போதைய சூழ்நிலையில் ஹெலினா வளர்மதியின் மகன் உத்தமபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். அவரை, ஹெலினா வளர்மதியின் சித்தி பாத்திமா ராணியின் மகன் லாரன்ஸ் என்ற அமலா லாரன்ஸ் (31) தினமும் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார்.

CJI DY Chandrachud: உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் டி.ஒய்.சந்திரசூட்!

உறவினரை தீ வைத்து எரித்துக் கொலை செய்தவருக்கு  ஆயுள் தண்டனை  - தேனி  நீதிமன்றம் தீர்ப்பு

இந்நிலையில், தனது மனைவி பிரிந்து சென்றதற்கு மைத்துனர் லாரன்ஸ் தான் காரணம் என பிரிதிவிராஜ் கருதியதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த 22-11-2017 அன்று உத்தமபாளையத்தில் உள்ள ஒரு பள்ளி அருகில் லாரன்ஸ் நின்று கொண்டு இருந்த போது, பிரிதிவிராஜ் அங்கு  சென்றுள்ளார். அப்போது அவர் ஒரு பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த பெட்ரோலை லாரன்ஸ் மீது ஊற்றியுள்ளார். இதனால், அங்கிருந்து அவர் தப்பி செல்ல பிரிதிவிராஜ் அவரை துரத்திச் சென்று அவர் மீது தீ வைத்தார்.

ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெறுங்கள்: ஜனாதிபதிக்கு பறந்த மனு: மதச்சார்பற்ற கூட்டணி எம்.பிக்கள் அதிரடி
உறவினரை தீ வைத்து எரித்துக் கொலை செய்தவருக்கு  ஆயுள் தண்டனை  - தேனி  நீதிமன்றம் தீர்ப்பு

இதில் அவர் உடல் முழுவதும் தீப்பற்றியது. பின்னர் அவர் அருகிலிருப்பவர்களால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று 2017 டிசம்பர் 1-ந் தேதி அவர் வீடு திரும்பினார். ஆனால் பலத்த காயங்கள் சரியாகத நிலையில் அவர் 4-ந்தேதி உயிரிழந்தார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் சேர்த்துடுங்க... இதுதான் டைம்! - கெடு கொடுத்த தலைமை தேர்தல் அதிகாரி
உறவினரை தீ வைத்து எரித்துக் கொலை செய்தவருக்கு  ஆயுள் தண்டனை  - தேனி  நீதிமன்றம் தீர்ப்பு

இந்த சம்பவம் குறித்து அவருடைய தாய் பாத்திமாராணி உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பிரிதிவிராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலை வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சுகுமாறன் ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணையை தொடர்ந்து மாவட்ட அமர்வு நீதிபதி சஞ்சய் பாபா நேற்று இறுதி தீர்ப்பு கூறினார்.

அதில், லாரன்சை கொலை செய்த பிரிதிவிராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து பிரிதிவிராஜை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Embed widget